Monday, August 30, 2010

சூதாட்ட சர்ச்சையில் பாகிஸ்தான் வீரர்கள்


Virakesari.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4 ஆவது டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலண்டனில் வெளிவரும் பத்திரிகையான நியூஸ் ஆப் த வேல்ட் அதிரடி செய்தியை வெளியிட்டுள்ளது.பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், லார்ட்ஸ் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வேண்டுமென்றே நோபால்களை வீசியதாகவும் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. பாகிஸ்தான் அணியை சேர்ந்த 7 முக்கிய வீரர்கள் மீது சூதாட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பான வீடியோ ஆதாரமும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் அணி தலைவர் சல்மான் பட், விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது அமீர் உள்ளிட்ட 7 வீரர்களிடம் ஸ்காட்லாந்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி உள்ளனர்.

இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment