Monday, October 25, 2010

இவளின் உடலைச் சுமக்க...


நாற்கம்பிக்குள் அடைக்கப்பட்ட
பறவைகளின் வாழ் நாள் போல்,
ஏக்கங்களாகிப்போனது என் வாழ்நாளும்.
என்னை தனியாய் விட்டு நீ பிரிந்து சென்ற நாள் முதல்...

கண்ணை மூடித்தூங்கும் வேளையிலும்,
இருண்ட கனவுக்குள் ஒளிரும் தீபமாய் உன் முகம்.

என்னைப் பார்த்து நீ முதல் பூத்த புன்முறுவல் மறைந்து,
பிரியும் வேளை நீ நடிப்பாய் சிரித்த அந்த ரணங்களின் வினாடிகள்,
சூடாய் ஒட்டிக் கொண்டது என் கண்களில்....,
பச்சை மரத்தானிபோல் பதிந்து போனது என் மனதில்.

நீ விளையாடிய மணல்வெளிகள்,
நீ தூங்கிய அறைகள்,
நீ வாழ்ந்த இடங்கள்,
இவற்றை பார்க்கும் வேளை
ஊசி கொண்டு குத்துகின்றன,
என் ஒவ்வொரு நொடி பார்வையும்
என் கண்களை..

நீ செய்த குறும்புகள்,
நீ சிரித்த சிரிப்புகள்,
நீ அழுத நாட்கள்,
என் நிழல் போன்று என்னைத் தொடர்கிறது,
என் ஒவ்வொரு அசைவிலும்...

நம் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும்
உன் கனீரென்ற குரல்,
இடியாய் அழைக்கிறது என்னை
அம்மா அம்மா என்று....

அறையில் தூங்குகிறாய் என்று
அமைதியாய் தூங்கியவள் நான்-இன்று
நீ இல்லாத உன் அறையை
வெறித்த பார்வையுடன் பார்த்து
வலியால் விழியில் நீர் வடிய
விடிகிறது என் தூங்காத இரவுகள்....

கணவனை கடைக்கனுப்பிவிட்டு
என் உயிரையும் நினைவுகளையும்
உன்னிடம் அனுப்பி விட்டு
என்னுடல் மட்டும் தனியாய் ஊஞ்சலாடுகிறது
நான் ஆடும் ஊஞ்சலுடன்...

தொலைபேசியில் நீ தொலைவில் இருந்து
அழைக்கும் நாட்களுக்காக,
காத்துக்கிடக்கிறேன் உன் குரல் கேட்க,
நான் அனைத்தையும் தொலைத்து விட்டு.

போகாதே என்று தடுத்த வேளை என் எதிர்காலம்
அதுதான் என்று என் வாயடைத்தாய்.
அன்று மூடிய என் வாய் இது வரை துறக்கவில்லை..

பக்கத்தில் இருந்து பாசத்தை காட்டுவாய்
என்று எண்ணியிருந்தேன் நான்,
ஆனால் பல மைல்
கடந்து சென்று பணத்தை காட்டுகிறாய்...

பணத்தின் தேவையை உணர்ந்த உனக்கு
பாசத்தின் அருமை புரியும் நாள் வெகு தொலைவில் இல்லை..

உன் வாழ்கை இனிதாய் மலர
என் இறைவனிடம் வேண்டுகிறேன்..

வேதனையின் உச்சம் பிரசவம்,
பிரசவத்தின் வலி பெரிதாயில்லை.
நீ பிரிந்த வலி நிமிடங்களுக்கு முன்னால்.....

இந்த பரிதாப தாயின் உயிர் பிரிவதற்குள்
வந்து விடு "இவளின் உடலைச் சுமக்க..."

Post Comment

Thursday, October 14, 2010

அறிந்ததுன்டா நீங்கள்?????


மிகவும் நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் அனைவரையும் இந்தப் பகுதியினூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.... அறியாத சில விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த பகுதி உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்...

இந்தப் பதிப்பின் மூலம் உங்களுக்கு நாம் கொண்டு வரும் தகவல்... இந்தப் பூமியில் முதல் 10 இடங்களைப் பிடித்த கூடுதலான நிலப் பரப்பை கொண்டுள்ள நாடுகள் பற்றியதாகும்...

(மில்லியன் சதுர கிலோ மீட்டறில் அளவுகள் தரப்பபடுகிறது)

1. ரஷ்யா 17.1
2. கனடா 10.0
3. சீனா 9.3
4. அமெரிக்கா 9.2
5. பிரேஸில் 8.5
6. அவுஸ்திரேலியா 7.6
7. இந்தியா 3.0
8. ஆர்ஜென்டீனா 2.7
9. கஜகஸ்தான் 2.7
10. அல்ஜீரியா 2.4

இவைகள் தான் உலகில் முதல் 10 பெரிய நாடுகள்... இந்த தகவல் உங்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்ற நிலையில் மிகவும் மற்றுமொறு தகவலுடன் உங்களை சந்திப்போம் என்ற நம்பிக்கையோடும் விடைபெறுகிறோம்...

Post Comment

Saturday, October 09, 2010

பள்ளித் தோழர்களே....



நம் பார்வைகள் சந்தித்து பல வருடங்கள் உருண்டோடிட்டு.
இருந்தும் பத்திரமாய் சிறைவைத்திருக்கிறேன்,
உங்கள் நினைவு ஏடுகளையும், நினைவுகளையும்.

அன்று இருந்த நான் இன்றில்லை,
நீங்களும் இன்று அவ்வாறில்லை.
நாலு பக்க வகுப்பறைச் சுவருக்குள்ளயே
நசுக்கப்பட்டு விட்டது நம் நட்பு.

பட்சிகள் கூட்டம் போல் பாசத்தால் இனைந்து,
பட்டாம் பூச்சிகள் போல் கவலையின்றி திரிந்து,
நாம் இட்ட சண்டைகள், கனவுகள்,
ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், போராட்டங்கள்,
விளையாட்டுக்கள், சேட்டைகள்,
இன்று எதுவுமே அற்று மௌனியாகிவிட்டோம்.
ஆளுக்கொரு திசையில்,
கூட்டுக்குள் இருந்து கலைக்கப்பட்ட
பறவைகள் கூட்டம் போல்....

பாலை வனத்தில் மழைத் தூரல் போன்று,
அவ்வப்போது சிலரைப் பார்பதுன்டு-ஆனால்
எல்லோரும் ஒரே நேரத்தில்?????
எழுதும் கவியின் வரியோடு கரைகிறது
என் கண்ணீரும்.

பிரியமாட்டோம், பிரியமாட்டோம்
என்று சொல்லியே பிரிந்து போனோம்.
நம்மை விட்டுப் பிரிந்த,
ஒவ்வொரு வினாடிகளிளும்.

நம் வகுப்பறை சொல்லும் நம் கதைகளை,
நம் மைதானம் சொல்லும் நம் சேட்டைகளை,
நம் பாடசாலை சொல்லும் நம் சாதனைகளை,
நம்மால் எதுவும் சொல்ல முடியவில்லை,
நம் தனிமைக்கு.

சிலர் தொலைபேசியில்,
சிலர் தொழில்நுட்பத்தில்,
சிலர் இணையத்தில்,
என்று ஏதோ நட்புடன் இருக்க
பலர் தொலைந்தே விட்டோம்,
முகவரிகள் அற்று.

தொலைந்தவர்களைத் தேடிய பயணமும்,
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது......
மிக நீண்ட காலமாய்.

தெருக்கலில் பள்ளி மாணவர்கள்
சிறகடித்துச் செல்லும் வேளை,
வழிகின்ற கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,
சேர்ந்து நடக்கிறேன் சில நிமிடம்..
காற்றோடு கலந்து விட்ட என் சுவாசம் போல்.

நம்மை மட்டும் பேச அனுமதித்த நூலகம்,
காதல் கவிதை எழுதும் கரும்பலகை,
நம் மேளவாத்தியங்களான மேசைகள்,
நம் உணவகசாலை ஓட்டக் குடிசை,
எந் நேரமும் இசைக் கச்சேரி நடக்கும் நம் வகுப்பறை,
நம் சேட்டையில் முதலிடம் பிடித்த வகுப்புத் தோழிகள்,
இவைகள் தான் இன்று என் இருன்ட கனவுக்குள்,
ஒளிரும் தீபங்கள்....

என் வாழ்கைப் பயணத்தில்
பசுமை நிறைந்த வீதிகள்
நம் பாடசாலை நாட்கள்.

இன்று திரும்பிப் பார்க்கிறேன்,
என் பக்கத்தில் சுடர்விட்டவர்கள்.
வானில் தெரியும் நட்சத்திரங்கள் போல்
சுடர்கிறீர்கள்,
என்னை விட்டு வெகு தூரம் சென்று.

நம் காலை உணவோடு கலக்கும்
பாசம், நட்பு, காதல், மகிழ்ச்சி
எனும் சுயையூட்டிகள்
இன்று காணவே முடிவதில்லை கடுகளவு கூட.

ஏதேதோ பேசினோம்,
ஏதேதோ எழுதினோம்,
பாடம் படித்தோம்,
வாழ்வையும் படித்தோம்,

பள்ளித் தோழர்களே....
தவிக்கும் எண்ணங்களின் தவிப்பனைக்க,
துவண்ட தோழர்களுக்கு தோள் கொடுக்க,
பகை கொண்ட நெஞ்சங்களுக்கு அன்பை பரிசளிக்க,
இணையில்லா நட்புடன் மீண்டும் இனைய,
வருவீர்களா? நம் வகுப்பறைக்கு.
உங்கள் வாழ்கையில் ஒரு மணி நேரமாவது...

ஏக்கம் நிறைந்த பார்வையுடன் காத்திருக்கிறேன்,
நினைவுகள் என்னில் நிலைநிற்க.
வருவீர்கள் என்ற நம்பிக்கையில்...


Post Comment