இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியின்போது பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது பாதணி வீசிவீசப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் சர்தாரி மீது பாதணி வீசியதாக தெரிவிக்கப்ப்டுகிறது. பாகிஸ்தானில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி பல லட்சம் பேர் வீடுகள், சொத்துக்களை இழந்து நிற்கும் நிலையில்அவர்களுக்குரிய நிவாரணப் பணிகளை பாகிஸ்தான் அரசு செய்யாததைக் கண்டித்து அவர் மீது பாதணி வீசப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன் 3 மில்லியன் மக்கள் பேர் வீடுகள், சொத்துக்களை இழந்துள்ளனர். இந்த நிலையில் அங்கு நிவாரணப் பணிகள் சரிவர நடக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அதிபரின் இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணம் பாகிஸ்தானில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment