Tuesday, August 31, 2010

புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்



Virakesari.
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது.

முன்னைய தரவரிசை பட்டியலின் படி இலங்கை அணி ஆறாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் இந்த தொடரில் பெற்றுக்கொண்ட வெற்றிகளை அடுத்தே இலங்கை அணி, தரவரிசையில் முன்னேற்றம் பெற்றுள்ளது.

இந்த புதிய தரவரிசைப்படி தொடர்ந்தும் அவுஸ்ரேலியா முதலாவது இடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. நான்காம் இடத்தில் தென்னாபிரிக்க அணியும், 5 ஆம், 6 ஆம் இடங்களில் முறையே இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகள் பெற்றுள்ளன.

ஆறாம் இடத்தில் பாக்கிஸ்தானும் ஏழாம் இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும் பெற்றுள்ளன. இதேவேளை டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்க அணியும், மூன்றாம் இடத்தில் இலங்கை அணியும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

4 ஆம், 5 ஆம் மற்றும் ஆறாம் இடங்களில் முறையே, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, பாக்கிஸ்தான் ஆகிய அணிகள் பிடித்துள்ளன.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment