Monday, August 30, 2010

நரகத்தை கண்டதுன்டா?????


நாடிழந்து, நகரிழந்து, நடைபினமாய்
நாற்பக்க கம்பிவேலிக்குள் நடமாடுகிறது
ஒரு நாதியில்லாக் கூட்டம்.

ஒடுங்கியிருந்த என் கற்பனையை உடைக்கிறது
அவர்களின் நினைவு
உறங்கிக் கிடந்த என் கரங்களை தட்டி எழுப்பியது
அவர்கள் வாங்கும் வலிகள்.

நரகத்தை கண்டதுன்டா பூமியில்
சென்று பாருங்கள் அகதிமுகாம்களில்...........

முகம் இருந்தும் முண்டமாக,
கண் இருந்தும் குருடனாக,
காது இருந்தும் செவிடனாக,
வாய் இருந்தும் ஊமையாக,
கை,கால் இருந்தும் இயக்கமற்றவர்களாக,
இதயம் இருந்தும் இரத்த ஓட்டமற்றவர்களாக,
மொத்ததில் உயிர் இருந்தும் பிணமாக,
கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்
அகதி எனும் அழியாப் பெயருடன்............

யார் இவர்கள்??????????
சுதந்திரக் கூடு எனும் பெயரில்
மனிதமே அற்ற சிறைக்கூட்டில்
அமுக்கப்பட்ட வாயில்லாப் பூச்சிகள்.
சொந்த மண்னை விட்டு, வீட்டை விட்டு
ஊரை விட்டு, நாட்டை விட்டு
துரத்தியடிக்கப்பட்டவர்கள்.

தீவிரவாதம் எனும் கொடுர நெருப்பில்
காய வைத்து தீக்கிரையாக்கப்பட்டவர்கள்.

வெந்த மனதுடன், வழிந்தோடும் கண்ணீரோடு,
உடுத்த உடையுடன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு
இரத்தம் படிந்த ஓர் இரவில் போர் எனும் மிகக் கொடிய
இரக்கமற்ற அரக்கனால் தூக்கியெறியப்பட்டவர்கள்

உறவுகளை இழந்த வலி
உடைமைகளை தொலைத்த சோகம்
இன்றும் தெரிகிறது ஏக்கமும், எதிர்பார்ப்புகளும்
நிறைந்த இவர்களின் இரு கண்களிலும்


ஒரு நேரச் சாப்பாட்டை 9 பிள்ளைகளுக்கு
3 வேளை பிரித்துக் கொடுக்கும் ஒரு தாயின்
அபல நிலையை கண்ட நிமிடம் என் இதயம்
நின்று மறுபடி துடிப்பதை உணர்கிறேன்
எதுவும் செய்ய முடியாத கோழையாக.....

குழந்தைகள் குமுறி அழுகின்றன
சிறுவர்கள் சீரழிந்து நிற்கின்றனர்
வாலிபர்கள் வழுவிழந்து வாயடைத்து விட்டனர்
பெண்கள் தங்களை வெறும் பொம்மைகளாக்கி கொண்டனர்
முதியவர்கள் முழுமதியையும் இழந்து விட்டனர்
இந்த நரகத்தில்.......

இது கடவுளின் விதியா? இல்லை
மனிதனின் சதியா? என்று இன்றும்
பட்டி மன்றம் நடத்துகிறது
பகுத்தறிவில்லாக் கூட்டம் ஒன்று

அரசியல் இலாபங்களுக்காக
மேடைகளில் விருந்தாக்கப் படுகிறது
இவர்களின் அவல நிலை

அன்பால் அரவனைக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள்
இன்று அகதி முகாம்களில் அங்கலாய்கின்றனர்.

மனிதர்களே!!!! மனிதம் உள்ளவர்களே!!!!!
மண்டியிடுகிறேன் உங்கள் முன்
என் அகதிக் கைதிகளுக்காக
அரவனையுங்கள் அவர்களையும் உங்கள்
அன்பாலும் பண்பாலும் உதவிக் கரம் கொண்டு....
24 மணி நேர ஒரு நாளில் சிந்தியுங்கள்
1 வினாடியாவது இந்த அரவனப்பற்றவர்களைப் பற்றி

தூக்கி வீசுங்கள் உங்கள் பகைமையை
போர் எனும் கொடிய அரக்கனை அனைவரும் சேர்ந்து
தீக்கிரையாக்குங்கள்
மனிதத்தை வளருங்கள், மன்னிப்பை பரிசளியுங்கள
மடிந்து போகும் வாழ்வில் மற்றவர்களுக்கும் சற்று மதிப்பளியுங்கள்

இனியும் வேண்டாம் இன்னொரு அகதிக் கூடம்
இதுதான் இந்த இயலாத எழுத்தாளனின் ஆக்ரோஷம்............


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment