Tuesday, August 10, 2010

3 வினாடிகளில் ஒரு போத்தல் பியர்! : ரூ. ஆறரை லட்சம் பரிசு!

Virakesari.

ஒரு போத்தல் பியரை 3 வினாடிகளில் குடித்துவெற்றி பெற்றுள்ளார் ஒருவர். ஆறரை லட்சம் ரூபா பணத்தொகையயும் இவர் பரிசாகப் பெற்றார்.

இச்சம்பவம் நம் நாட்டிலல்ல, சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களைக் கவர்வதற்காக ஷின்ஜியாங்யுக்குவர் மாகாணத்தின் 'வுசு' என்ற இடத்தில் ஆண்டு தோறும் 'பியர் திருவிழா' நடத்தப்பட்டுவதுண்டு.

இவ்விழாவில் குறைந்த நேரத்தில் அதிகளவு பியர் குடிப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், இந்தப் போட்டியில் பங்கு பெறுபவர்களுக்காக தெருக்களில் 20 பியர் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு 30 ஆயிரம் கிலோ எடையுள்ள பியர் இலவசமாக வழங்கப்பட்டது. எனவே போட்டியில் பங்கேற்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு குடித்தனர். இலவசமாகக் கிடைக்கின்றதே.... விடுவார்களா....?

அவர்களில் ஒரு நபர் ஒரு போத்தல் பியரை 3 வினாடிகளில் 'மடக்...மடக்..' என குடித்து வெற்றிவாகை சூடினார்.

அவருக்கு ரூ.6 லட்சத்து 61 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம் பரிசு வழங்கப்பட்டது. இந்தத் தொகையைப் போட்டியை நடத்திய 'வுசு பியர்' நிறுவனம் வழங்கியது.

இந்நிறுவனம், ஆண்டுக்கு 2 லட்சம் தொன் பியரை உற்பத்தி செய்கிறது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment