Sunday, August 01, 2010

பெங்களுரில் சுழற்பந்து பயிற்சி நிலையம் அமைக்க கும்ளே-முரளிதரன் திட்டம்

Virakesari

சுழல் பந்து வீச்சாளர்களான முத்தையா முரளிதரன் மற்றும் இந்தியாவின் அனில் கும்ளே, இணைந்து, பெங்களுரில் சுழற்பந்துவீச்சுக்கான பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 800 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது கும்ளேவுடன் சேர்ந்து பெங்களுரில் சுழற்பந்து வீச்சுக்கான பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து கும்ளே கூறுகையில், பெங்களுரில் சுழற்பந்து வீச்சுக்கான பயிற்சி நிலையம் ஆரம்பிப்பது குறித்து, ஏற்கனவே முரளிதரனுடன் கலந்துரையாடி உள்ளேன். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் இதுகுறித்து இன்னும் பேசவில்லை.

சமீபத்தில்தான் இவர் ஓய்வு பெற்றதால், சில பாராட்டுவிழாவில் கலந்து கொள்ள வேண்டி இருக்கும். எனவே விரைவில் இதுகுறித்து ஆலோசிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

இதுகுறித்து முரளிதரன் கூறுகையில், கும்ளேவுடன் இணைந்து பயிற்சி நிலையம் ஆரம்பிப்பதில் மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன். இதுகுறித்து உறுதியான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment