Thursday, August 26, 2010

காத்தான்குடி விவசாயிக்கு தேசிய மகுடம்

Kattankudi Web Community.
THE CEYLON CHAMBER OF COMMERCE இன் NATIONAL AGRIBUSINESS COUNCIL இனால் நடாத்தப்பட்ட 2010ம் ஆண்டிற்கான AG-BIZ2010 கண்காட்சிக்கு இணைவாக நடைபெறும் விவசாய பெருமக்களுக்கு மகுடம் சூட்டும் மாபெரும் நிகழ்வு கடந்த 22.08.2010 அன்று பி.ப.3.00மணிக்கு சிறிமாவோ பண்டார நாயக்க நாபகார்த்த மாணாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 2010க்கான மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய விருதுக்கான போட்டியில் முதலாவது இடத்தினை எமது பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் ஷரீப் பெற்றுக்கொண்டார்.

இதற்கான சான்றிதழையும், விஷேட விருதிணையும் விவசாய பிரதி அமைச்சர் கௌரவ J.புஷ்பகுமார அவர்கள் வழங்கி வைத்தார்.

காத்தான்குடி பாலமுனை கிராமத்தில் பொறியியலாளர் M.M. பளுலுல் ஹக் அவர்களின் முழுமையான பங்களிப்புடனும் ஆலோசனைகளுடனும் மேற்கொள்ளப்பட்டு வரும் ”றையான் பார்ம்” செயற்த்திட்டத்திற்கூடாகவே இக்கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இச்செயற் திட்டத்தின் பிரதான இயக்குனர்களாக சகோதரர் ஷரீப் அவர்களும் சகோதரர் றிபாய்தீன் அவர்களும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment