Friday, November 23, 2012

"அழாதே தாயே.."


"அழாதே தாயே.."
ஒரு உவமை தேடுகிறேன்
உன் கண்ணீர் வலி சொல்ல.
ஒன்று கூட கிடைக்கவில்லை
இந்த கவிப் பிரியனுக்கு.

கோடிக் கண்கள் அழுகிறது
உன் நிலை கண்டு.
குருதியும் உறைந்து கிடக்கிறது
உன் மண்ணின் துயர் கண்டு.

"உன் தேசம் அழிகிறது என்று அழுகிறாயோ?"
கண்ணீர் நிறுத்திக் கொள்.
கடைசி வரை நிலைக்கும் அது
உன் மனதில் எழுதிக் கொள்.

"வழியனுப்பி வைத்த மகன்
வரவில்லை என்று அழுகிறாயோ?"
துயர் துடைத்துக் கொள்,
பல இலட்சம் உயிர்கள்;
இன்று உன் மகனாய்,
நினைத்துக் கொள்.


உன் மகன் இரத்தம் படிந்த
பூமி இது.
உன் கண்ணின் ஈரம் கசிந்து
அதை கரைக்கக் கூடாது.

வரலாறு சொல்லப் போகும்
உன் வீர மகனின்
தியாகச் சான்று அது.

நீ அழுவதால் நானும் அழுகிறேன்.
உன்னுடன் இருக்க உயிர் துடிக்கிறேன்.
காரணம் நானும், உன் மகன் தான்...

"அழாதே தாயே.."
சுவன வாசலில் உன் மகன், என் சோதரன்
நமக்காய் காத்திருக்கிறான்.
"அழாதே..."

Post Comment

Monday, November 19, 2012

"என் கரமே உன்னைக் கொல்லும்"


மரணப் பீதி காற்றோடு
மனித தசைகள் அம் மண்ணோடு
என் கரமும் கவியின் வரியோடு
இரத்தம் வடிக்கிறது என் கண்ணோடு

நோபல் பரிசுகள் எங்கே?
மனித உரிமை குழுக்கள் எங்கே?
ஐநா எங்கே? அமெரிக்கா எங்கே?

உலகம் எங்கே? ஊடகம் எங்கே?
சுதந்திரம் எங்கே?
பாலஸ்தீன மக்களின் சுவாசம் எங்கே?

பூமிக்குள் புதைந்த மாதுவின்
கருகிய தேகத்துடன்
கருகிவிட்டது மனிதம்

அவள் கருவுக்கும்
கல்லறை நிலை கண்டு
கரைகிறது என் இதயம்

வெள்ளைச் சிரிப்பில்
என் உள்ளம் வென்ற ரோஜாக்கள்
கரிக் கருப்பாய் காட்சி கொடுப்பதேனோ ?

ஈனப் பிறவியான
இதயக் கனிவற்ற கயவனின்
வஞ்சகம் தானோ....


உன் பால் தேகத்தில்
குண்டு பாய்ச்சியவனுக்கு
உலகம் கேட்க உரத்துச் சொல்கிறேன்
"என் கரமே உன்னைக் கொல்லும்"

என் மௌன சப்தத்தில்
இடியாய் ஒலிக்கிறது
ஒரு சமூகத்தின் கடைசிக் கதறல்

ஓ சமூகமே!
உன்னை கதரவிட்டவனுக்கும்
கடைசியாய் சொல்கிறேன்
"என் கரமே உன்னைக் கொல்லும்"

வெறியாட்டம் ஆடும்
இஸ்ரேலியச் சொறிநாயே
மீண்டும் சொல்கிறேன்
"என் கரமே உன்னைக் கொல்லும்"

Post Comment