Wednesday, August 18, 2010

சவூதி - டுபாய் பேரீச்சம்பழங்கள் கிழக்கில் விநியோகம்


Virakesari.
நோன்பு திறப்பதற்கு வசதியாக, சவூதி அரேபியா மற்றும் டுபாய் அரசாங்கங்கள் வழங்கிய பேரீச்சம்பழங்கள் கிழக்கு மாகாணத்தில் இன்று புதன்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனக் காரியாலயத்தில் வைத்து பிரதேச பள்ளிவாயல்களுக்கான விநியோக வைபவம் நடை பெற்றது.

இதன்போது, சம்மேளனத் தலைவர் இஸ்மாயில் மற்றும் அதன் செயலாளர் அஷ்ஷெய்க் சபீல் மற்றும் பொருளாளர் பசீர் ஆகியோர் பேரீச்சம்பழப்பெட்டியை பள்ளிவாயல் நிர்வாகத்திடம் வழங்கி ஆரம்பித்து வைத்தனர்.

பள்ளிவாயல் சம்மேளனத்தினூடாக காத்தான்குடியிலும் அதனைச் சுற்றியுள்ள் கிராமங்களிலுமுள்ள பள்ளிவாயல்களுக்கு பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டன.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment