Sunday, August 29, 2010

டில்சானின் சதத்துடன் இலங்கை இறுதி போட்டியில் வெற்றி


Virakesari.
டில்சானின் அதிரடி சதத்தின் மூலம் முக்கோணத் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களல் அபார வெற்றிப் பெற்றது.

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை பெற்றது.

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

புள்ளிகள் அடிப்படையில் இலங்கை, இந்தியா முதல் இரண்டு இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நியூசிலாந்து வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் களமிறங்கிய இந்திய-இலங்கை அணிகளுக்கிடையே போட்டியில் இலங்கை இலகுவாக வெற்றிபெற்றது.

இன்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தலைவர் சங்ககர முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய டில்சானும், ஜயவர்தனவும் சிறப்பான இனைப்பாட்டத்தை ஏற்படுத்தினர். முதல் ஓவரை பிரவின் குமார் வீசினார்.

முதல் ஓவரில் 3 ஓட்டம் பெறப்பட்டது. 3 ஆவது ஓவரில் தில்சான் 2 பவுண்டரி விளாசினார். அதன்பின் இருவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். இதனால் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது, 9.1 ஓவரில் இலங்கை அணி 50 ஓட்டங்களை பெற்றது.

சிறப்பாக விளையாடிய தில்சான் அரைசதம் அடித்தார், அவர் 36 பந்தில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றார்.

மறுமுனையில் இருந்த ஜயவர்தன 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்த ஓட்ட எண்ணிக்கை மூலம் ஜயவர்தன தனது ஒரு நாள் போட்டியில் 9000 ஓட்டங்களை கடந்தார். ஜயவர்தன இந்த ஓட்ட எண்ணிக்கையை கடந்ததன் மூலம் 9000 ஓட்டங்களை பெற்ற மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய தரங்க 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய சங்ககார டில்சானுடன் இனைந்து சிறப்பான இனைப்பாட்டத்தை ஏற்படுத்தினார்.

இந்நேரத்தில் டில்சான் 100 ஓட்டங்களை பெற்றதன் மூலம் தனது ஒரு நாள் போட்டியில் 8 ஆவது சதத்தைப் பெற்றார்.

மறுமுனையில் இருந்த சங்ககார 71 ஓட்டங்களை பெற்று தனது ஒருநாள் போட்டியில் 58 ஆவது அரைச் சதத்தைப் பெற்றார்.

எனினும் தொடர்ந்து களமிறங்கிய இடை நிலை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கு இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை பெற்றது. இந்நிய அணியின் பந்து வீச்சில் பட்டேல் மற்றும் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 300 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் செவாக் 28 ஓட்டங்களையும், கார்திக் ஓட்டம் எதுவும் பெறாதும், ஹோலி 37 ஓட்டங்களையும், யுவராஜ் 26 ஓட்டங்களையும், ரெய்னா 29 ஓட்டங்களையும், தோனி 67 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

எனவே இந்திய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பந்து வீச்சில் பெரேரா மற்றும் ரன்தீவ் தலா 03 விக்கெட்டுகளையும், மாலிங்க 2 விக்கெட்டுகளையும் மெத்தியுஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன் அடிப்படையில் முக்கோணத் தொடர் இலங்கை வசமானது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment