Monday, August 23, 2010

சிலி சுரங்க விபத்து:17 பேர் உயிருடன் இருப்பதாகத் தகவல்

Virakesari.

லி நாட்டில் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கிய 33 பேரும் உயிருடன் இருப்பதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலத்துக்குக் கீழ் சுமார் 700 மீற்றர் ஆழத்தில் பணியாற்றிய சுரங்கத் தொழிலாளர்கள், அங்கு இடம்பெற்ற விபத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களிடமிருந்து எந்தவிதமான தகவலும் வெளியாகாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டது.

நேற்றைய தினம் மீட்புப் பணியாளர்களினால் அனுப்பப்பட்ட ஒலிப்பதிவு கருவி, தொழிலாளர்கள் உயிருடன் இருப்பது பதிவாகியுள்ளது.

நிலத்துக்கு அடியில் உள்ள 33 பேரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்ட குறிப்பு ஒன்றும் அந்த கருவியுடன் இணைக்கப்பட்டு வந்துள்ளது.

இவர்களை மீட்க மேலும் சில மாதங்களேனும் தேவைப்படும் என மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment