Saturday, August 21, 2010

இலங்கை - நியுசிலாந்து ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

Sooriyan

இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டி மழை காரணமாக முற்றாக கைவிடப்பட்டது.


நேற்றைய தினம் நடைபெறவிருந்த இந்த போட்டி மழை காரணமாக பாதிப்படைந்ததைத் தொடர்ந்து, அது இன்று நடத்தப்பட்டது.

எனினும் இலங்கை அணி துடுப்பாடிய வேளையில், மீண்டும் மழை குறுக்கிட்டதைத் தொடர்ந்து, போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 43.4 ஓவர்கள் நிறைவில் 203 ஒட்டங்களை பெற்றுள்ளது.
மஹெல ஜெயவர்தன 59 ஓட்டங்களை பெற்றிருந்தார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment