Friday, August 27, 2010

காத்தான்குடியில் காலாவதியான பொருட்கள் கண்டு பிடிப்பு.

Virakesari.
காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளை முகாமையாளரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த பெருந்தொகையான காலாவதியான பொருட்களை காத்தான்குடி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வியாழக்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர்.

பொது மக்கள் சிலர் வழங்கிய தகவலையடுத்து காத்தான்குடி பொதுச்சுகாதர வைத்திய அதிகாரி டாக்டர் ஜாபீர் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான பசீர் மற்றும் றஹ்மத்துல்லா ஆகியோர் ஸத்தனத்திற்கு சென்று இப்பொருட்களை கண்டெடுத்து கைப்பற்றியுள்ளனர்.

காலாவதியான பெருந்தொபை;பொருட்களான சிறுவர்களுக்கான பிஸ்கட் வகைகள் மற்றும் கேக், பால்மா பக்கட்டுக்கள் மற்றும் சில மருந்துப்பொருட்கள் என்பவற்றை இதன் போது பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடி பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் மினி கோப் சிற்றியின் முகாமையாளின் வீட்டிலேயே இக்காலாவதியான பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment