Friday, February 25, 2011

இணைந்த இமயங்கள்!

நன்றி:தமிழ் சீ.என்.என்



மொபைல் போன் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இயங்கும் நோக்கியா நிறுவனமும், கம்ப்யூட்டர் உலகில் தனக்கிணை தானே என வலம் வரும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் அண்மையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

இதன்படி நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களில் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும்.

இதன் பிங் சர்ச் இஞ்சின் நோக்கியாவின் மொபைல் தேடுதளமாக இயங்கும். அதே போல நோக்கியா மேப்ஸ் சேவையை மைக்ரோசாப்ட் பயன்படுத்தும். 20 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் நோக்கியா ஸ்மார்ட் போன்கள் உலகில் பயன்படுத்தப்படுகின்றன.

அதிகமான எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் நிறுவனமாக, நோக்கியா இடம் பெற்றுள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களும் புதிய இலக்குகளில் வெற்றிகளைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

ஒரு புதிய மொபைல் இயங்கு சூழ்நிலையை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்த இருக்கிறது. தற்போது நோக்கியா போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிம்பியன் மற்றும் மீகோ படிப்படியாகக் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் நமக்கு என்ன வசதிகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

1.எளிய வேகமான பயன்பாடு: பல அப்ளிகேஷன்கள் சிம்பியன் சிஸ்டத்தில் இயங்குவதை நாம் அனுபவித்து வருகிறோம். இவை விட்ஜெட் (Widget) என அழைக்கப் படுகின்றன.

விண்டோஸ் மொபைல் இயக்கத்தில் உள்ள இந்த விட்ஜெட்டுகள், இன்ஸ்டால் செய்வதற்கும் இயக்குவதற்கும் எளிதானவை. இதனால் பயனாளர்கள் நிச்சயம் மற்றவற்றைக் காட்டிலும் இவற்றை அதிகம் விரும்புவார்கள்.

2. கேம்ஸ்: மொபைல் போனை விளையாட்டிற்கெனப் பயன்படுத்துபவர்களுக்கு, விண்டோஸ் மொபைல் போன் அதிக உற்சாகம் தரும் சாதனமாக இருக்கும்.

3. ஆபீஸ் டாகுமெண்ட்ஸ்: ஆபீஸ் அப்ளிகேஷன் எனக் கொண்டு வந்து, கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும், நம் அன்றாட வாழ்க்கை முறையிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்புகளாகும்.

எனவே இன்றைய கம்ப்யூட்டராக மாறிவரும் ஸ்மார்ட் போன்களில், விண்டோஸ் மொபைல் மூலம் இவற்றைப் பெற்றுப் பயன்படுத்துவதனை அனைவரும் விரும்புவார்கள்.

மைக்ரோசாப்ட் வேர்ட், பவர்பாய்ண்ட், எக்ஸெல் மற்றும் ஒன் நோட் ஆகிய அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு, நோக்கியா போன்களில் இனி இடம் பிடிக்கும். டாகுமெண்ட்களைப் படிப்பதற்கும், தயாரிப்பதற்கும் மற்றும் மற்றவர்களுக்கு அனுப்புவதற்கும் யார் தான் ஆபீஸ் அப்ளிகேஷனை வேண்டாம் என்று சொல்வார்கள்!

4. மியூசிக்: ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளைத் தருவதில் மைக்ரோசாப்ட் தரும் தொழில் நுட்ப வசதிகளை எல்லாரும் அறிந்திருக்கிறோம். எனவே இந்த வகையிலும் விண்டோஸ் மொபைல் முதல் இடத்தைப் பெறும்.

5. இமெயில் பயன்பாடு: மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் சர்வர் மூலம் தங்கள் இமெயில் பரிமாற்றங்களை மேற்கொள்பவர் களுக்கு, விண்டோஸ் மொபைல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

6. இன்ஸ்டன்ட் மெசேஜ்: உடனடி செய்தி அனுப்பி பெறுதல், கான்பரன்ஸ் பயன்பாடு ஆகியவற்றிற்கு ஆபீஸ் கம்யூனிகேட்டர் மொபைல் கை கொடுக்கும்.

7. உலக மொழிகள் பயன்பாடு: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அனைத்து மொழிகளின் பயன்பாடு எளிதானதாக உள்ளது. இது தற்போது நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களுக்கும் நீட்டிக்கப்படும்.

8. இதர வசதிகள்: நோக்கியாவின் மேப்ஸ் இனி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேப்பிங் சர்வீசஸ் பிரிவின் ஓர் அங்கமாக இருக்கும். இது பிங் சர்ச் இஞ்சினில் இணைக்கப்படும். நோக்கியா தன் மொபைல்போன் மூலம், விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு கட்டணம் செலுத்தும் நெட்வொர்க் ஒன்றை இயக்கி வருகிறது.

இனி இதன் மூலம் விண்டோஸ் மொபைல் கட்டண வசதிகள் விற்பனை செய்யப்படுவது எளிதாகும். ஸ்மார்ட் போன்களுடன் மற்ற வகை போன்களைக் கணக்கிட்டால், தற்போது மற்ற வகை போன்களே அதிகம் புழக்கத்தில் உள்ளன.

உலக அளவில் சென்ற ஆண்டு இறுதியில் 48 கோடி ஸ்மார்ட் போன்களும், 330 கோடி மற்ற வகை போன்களும் இருந்தன. ஆனால் விண்டோஸ் போன்ற கூடுதல் வசதி உள்ள ஸ்மார்ட் போன்கள் வருகையில், வரும் 2015 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை 140 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மற்ற வகை போன்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மைக்ரோசாப்ட் வழங்கும் விண்டோஸ் மொபைல், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிளின் ஐபோன் சிஸ்டங்களுக்கு நல்ல போட்டியாக இருப்பதால், ஏற்கனவே எச்.டி.சி., சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் விண்டோஸ் போன் 7 சிஸ்டத்தில் இயங்கும் போன்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளன.

இப்போது நோக்கியாவும் இந்த வரிசையில் பெரிய அளவில் சேர்ந்துள்ளது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் மோட்டாரோலா நிறுவனத்துடன் இதே போன்ற ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. ஆனால் அது வெற்றிகரமாகத் தொடரவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இனி மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டங் களுக்கிடையே நடக்கும் பந்தயத்தில் ஆண்ட்ராய்ட், ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் மொபைல் 7 ஆகிய குதிரைகளே ஓடும். எது வெற்றி பெறுகிறது என்பது சில மாதங்களில் தெரிந்துவிடும்.

Post Comment

Thursday, February 24, 2011

"படிப்பினை கொண்டு....."



மனித மாமிசங்கள் விலையாய்க் கொடுத்து,
பதவி வாங்கும் காலம் இது!
இருளுக்குள் இருக்கும் உலகின்,
இறுதி நேரம் இது!

அடக்குமுறை, ஜனநாயகம் அனைத்திலும்
நீதி பறிபோன காலம் இது.
நீதி கேட்பவருக்கெல்லாம்,
நிதி பதில் சொல்லும் நேரம் இது.

வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன,
வான் பொழியும் அடை மழை போன்று...
நல்ல மாற்றங்கள் நடக்கின்றன,
பாலைவன நிழல் மரம் போன்று....

ஏமாற்றியே பலகி விட்டான் பதவி உள்ளவன்.
ஏமாந்தே நொந்து போனான் அதைக் கொடுத்தவன்.
உண்மையைச் சொல்ல எவருமில்லை.
சொன்னவன் இன்று உயிரோடும் இல்லை.

காகிதத்தில் கவி எழுதி பலனுமில்லை.
அதை வாசிப்பவர் உள்ளம் யோசிப்பதில்லை.
இருந்தும் எனக்கு வேறு வழியில்லை.

அடுத்தவனின் அவமானம்,- இன்று
அன்றாட அரசியலாகி விட்டது.
இதை பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பது
தவிர்க்க முடியா பொழுதுபோக்காகி விட்டது.

உலகமே;
இன்று பல நாடுகளாய்,
நாடுகள் எல்லாம் பல ஊர்களாய்,
உணர்வுகள்;
இன்று பல மொழிகளாய்,
மொழிகள் எல்லாம் மதங்களாய்,
பிரிந்தே இருக்கிறதே தவிர,
எதிலுமே இணையவில்லை.

ஒற்றுமையை பற்றி,
ஒரு வரி பேசவில்லை நாம்.
பிரிவினை பற்றி மட்டும்,
பலவாறாக பேசி விட்டோம்.

நல்ல திட்டங்கள் பற்றி பேசவில்லை நாம்.
மற்றவன் கருத்தில் குறை மட்டும்,
கூடுதலாய் பேசுகின்றோம்.

குறை மட்டுமே நம் இருவரினதும்
குறிக்கோளாகிப் போனது.

குறை இல்லாதவன் உலகில் இல்லை,
ஆனால் குறை மட்டுமே வாழ்வும் இல்லை.
சற்று சிந்திப்போம் சில நிமிடம்,-அதனால்
வரும் காலத்தில் நற் காற்றை சுவாசிப்போம்.

மற்றவன் குறை தேடும் முன்,
நாம் எதை நிறைவு செய்தோம்??????
என்று யோசிப்போம்.

பலவாறாக பிரிந்து விட்ட நாம்,
மனிதர்கள் எனும் அடிப்படையில்
ஒன்றுபடுவோம்.
நம்மை விட தாழ்ந்த
மிருகங்களை பார்த்தாவது
"படிப்பினை கொண்டு....."

Post Comment

Monday, February 14, 2011

காதலியுங்கள்......



வர்ணங்களின் வடிவால் ஈரக்கப்படும்
கைக்குழந்தைப் போல,
வாழ்வின் வண்ணங்களில் ஒன்றான
காதலால் கவரப்பட்ட
இளம் குழந்தைகள் ஆயிரம்.

வெற்றி,தோல்வி இரண்டிலும் தான் உலகமே.
காதல் மட்டும் என்ன விதி விலக்கா?
எத்தனை தடை இந்தக் காதலில்?
எத்தனை நிலை இந்தக் காதலில்?

கடந்த நாட்களின் நினைவுகள்,
வரும் காலத்தின் கனவுகள்,
இவை உருவாக்கப் போகும் விளைவுகள்,
இது தான் காதலர் தினம்.

கண்களால் மட்டும்
ஜாடைக் கவிபாடியவர்கள் எல்லாம்,
தமக்குத் தாமே இட்டிருந்த
தயக்கச் சிறையை தகர்க்க,
காலம் இயற்றிய ஒரு கருணைத் தினம்.

ஓராண்டை ஒரு தலைக் காதலுடன்
நடமாடிய ஒரு கூட்டமே,
துனைக்கு கையில் ரோஜாவை
ஏந்திக் கொண்டு,
காதல் பிச்சைக்காய் காத்திருக்கும்
பதட்டனமான ஒரு தினம்.

கரம் பிடித்த காதலர்கள் எல்லாம்,
கவலைகள் மறந்து குதூகலமாய்
கொண்டாடி மகிழ,
காலம் கொடுத்த கா(த)வலர் தினம்.

மனமோடு மனம் உறவாடி,
மனமேடையில் கைகள் உறவாடி,
இணைந்திட்ட காதலர்களுக்கு,
இது ஒரு அழகிய சந்தோச தினம்.

வாழ்கையை நேசிக்க மறந்து,
காதலை மட்டும் சுவாசிக்கும்
சில காதல் பித்தர்களுக்கு,
இது தான் பிறந்த தினம்.

காதலால் இணைந்து பிரிந்து,
மீண்டும் இணைய துடிக்கும்,
அனுபவ காதலர்களுக்கு
இது ஒரு பரிதாப எதிர்பார்ப்பு தினம்.

சூழ் நிலையால் துடி துடிக்க,
படு கொலை செய்யப்பட்ட
காதல் கொண்ட இதயங்கள்,
கண்ணீரால் கரையும் ஒரு துக்க தினம்.

உடல்கள் தான் பிரிந்தது,
உணர்வுகள் அல்ல என்று
உயிர் வாழும் சில உறவுகளுக்கு,
இது ஒரு அவஸ்தயான வசந்த தினம்.

காதல் தந்த வலியால் வாழமுடியாமல்,
கல்லரைக்குள் இருந்து கவிவடிக்கும்
காதல் காவியங்களுக்கு, அவர்களின்
அனுபவ நினைவு தினம்.

காதல் என்ற பெயரில் ஏமாற்றம் வாங்கி
கண்ணீரில் கவி படிப்போருக்கு,
அவர்களின் நினைவுகளை,
காற்றும் சுமக்கும் ஒரு ஆறுதல் தினம்.

வெற்றியோ,தோல்வியோ காதலியுங்கள்.
காதலை மட்டுமல்ல கொஞ்சம் வாழ்வையும்,
என்ற செய்தியோடு கவிப்பிரியன்.

Post Comment

Sunday, February 06, 2011

நீண்டதொரு பயணம்.



பனி விழும் இரவு,
மேகமெனும் ஆடை உடுத்திருந்தால் நிலவு,
நீண்டதொரு பயணம்.
மனதில் அவள் நினைவுகளுடன்....


பேரூந்தின் ஜன்னல் திறந்தேன்.
முகத்தை வருடியது சில்லென்ற பனிக் காற்று.
கண்களை மூடிக் கொண்டேன்,
கனவில் அவளோடு கைகோர்த்தவனாக....


பேரூந்து முன்நோக்கி நகர,
கனவோடு நிஜம் சற்றுக் கலக்க,
நகர்ந்தது என் நினைவுகள்,
வாழ்வின் மூன்றாண்டு பின்நோக்கி.


ஒரு இதமான மாலை நேரம்,
சூரியன் மறைந்து விட்ட சோகத்தில் அழத் தொடங்கியிருந்தது வானம்,
கடைத்தெருவில் ஒதுங்கிய கூட்டத்தோடு...
நானும் இணைந்தேன்.


"கொஞ்சம் வழிவிடுங்க" என்றது
ஒரு கெஞ்சும் இசைக் குரல்...
இல்லை இதமான புல்லாங்குழல்.


பெய்யும் மழையுடன் பூமிக்கு
வந்துவிட்டாளா நிலவு???????
என்று தோன்றியது,
அவள் முகம் பார்க்க.


அழகே அதிசயப்படும் அழகு அவள்.
ஆயிரம் வருடமாவது சென்றிருக்கும்,
பிரம்மனுக்கு இவளை சீராக செதுக்க.


என் அதிர்சியை சற்று அசைத்தது,
மின்னலுடன் ஒரு இடி....
இல்லையென்றான் இன்றும் அவ் விடத்தில்
நான் சிலைதான்.


அன்றே முடிவெடுத்து விட்டேன்.
இவளைப் பிடிக்கவே என் கரம்,
இவள்தான் எனக்கு கிடைத்த வரம்.


அடுத்த நொடியிலயே சொன்னேன் என் காதலை.
6 திங்கள் கழித்து அனுமதி கொடுத்தால்,
அவள் கரம் பிடிக்க...


சில காலம் போயிற்று,
என் நிலவின் முகம் பார்த்து.
வாழ்கை போராட்டத்தில் நாடு கடந்து
உழைக்க வேண்டும்,
அது என் விதி.


இரு வருடம் கடந்து,
இன்று திரும்புகிறேன்.
பூமிக்கு வந்த நிலவை பார்க்க.


"ரீங்" "ரீங்" என் கனவை கலைத்தது,
என் தொ(ல்)லைபேசி.
"ஹலோ" ஓ..ஓ..ஓ...ஓ.... அது.. அது...
மீண்டும் அந்த புல்லாங்குழல்.


வாய் அவள் நாமம் உச்சரிக்க,
காதுக்குள் அவள் குரல்,
கண்ணுக்குள் அவள் முகம்,
மனதுக்குள் ஒரு வசந்தம்,
தொடர்கிறது என் நீண்ட பயணம்.........

Post Comment