Friday, August 27, 2010

இந்திய அணியின் நன்மைக்காக கருத்து கூறினேன்: அக்ரம்.


Virakesari.
சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான வசிம் அக்ரம் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களை மிகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். வசிமின் இத்தகைய கருத்திற்கு இந்திய அணி தலைவர் டோனி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து வசிம் தற்போது இந்தியாவின் நன்மைக்காகவே அக்கருத்தைக் கூறியதாக பேட்டியளித்துள்ளார். சமீப கால இந்திய பந்து வீச்சாளர்கள் நீண்ட நாட்கள் கிரிக்கெட் போட்டிகளில் நிலைக்க முடியவில்லை வரும் போது உள்ள திறன் 5 ஆண்டுகளுக்கப் பிறகு காணாமல் போய்விடுகிறது.

அவர்கள் மிகுந்த பயிற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் 10, 15 ஆண்டுகள் நிலைத்து நிற்க முடியும் இதை அவர்களின் நன்மைக்காகவே கூறினேன் என்றும் இதில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது என வசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment