Saturday, August 28, 2010

வழி மேல் விழி வைக்கிறேன்



காவியம் படைக்க நீ வருவாய்
என நினைத்தேன்.
காலத்தின் சோகத்தில் கலங்குகிறாய்
என்றரிந்து துடித்தேன்.

மறைவு என்பது சூரியனின்
மரணம் இல்லை காதலா,
மீண்டும் கிழக்கில் பிறக்கும்
என் நம்பி நடடா என் காவலா.

குடும்பங்களை, நண்பர்களை பிரிந்த
வலியின் வடு தெரிகிறது உன் கண்ணில்....
"காலங்கலே மாறும் உலகில் என் கவலை மட்டும்
நிரந்தரமில்லை" என்ற நினைப்பு உன் நெஞ்சில்...

நாளை உன்னை எதிர்பார்கிறது,
தளர்வில்லா தன் நம்பிக்கை உன்னை தாங்கிப் பிடிக்கிறது,
உன்னை நினைத்து என் பேனா காகிதத்தில் அழுகிறது,
உன் வலி கொண்ட அழுகை என் நெஞ்சை துளைக்கிறது.

நடைபிணமாய் நீ வெளிநாட்டில்,
உன் நினைவாய் உன் குடும்பம் உள்நாட்டில்,
நாதியற்று நானும் நம் நாட்டில்,
வெறித்த பார்வையோடு விடியாத இரவில்...

தொலைபேசியில் தொல்லை கொடுத்தவன்
என்று சொன்ன எனக்கு
இன்று தொலைபேசி கேட்கிறது
"இனி தொல்லை கொடுப்பவன் யார் உனக்கு????"

காலத்தின் நிர்பந்தத்தால் கடல் கடந்து சென்று
கஷ்டப்படுகிறாய் போர்வை போர்திய போலிப் புண்னகையோடு.
விடியலை எதிர்பார்த்து வெறுத்துப் போன உன் விழிகளுக்கு
விருந்தாகிறது சில இரவு நேரவிளக்குகள் மட்டுமே உன் வாழ்வோடு.

உன் பயணச் சேதி கேட்டுத் திகைத்தவள் நான்
இன்றும் திரும்பவில்லை இயல்பு வாழ்கைக்கு.
அடிமையாகிப் போனது என் அத்தனை நினைவுகளும்
நீ பிரிந்து சென்ற அந்த விமான ஓசைக்கு...

உன்னைப் பற்றிய கனவில் வாழ்ந்த நான்,
இப்போது உன்னை எண்ணி கற்பனையில் வாழ்கிறேன்.
விடிய விடிய பேசிய இரவுகள் எல்லாம்
இன்று என் விழிகள் நனைத்தே விடிகிறது.

நலமா? என்று கேட்டு கொச்சைப் படுத்தவில்லை
உன் உணர்வுகளை நான்
உன் வாழ்வைத் தேடி நீ சென்ற பயணம்
வசந்தமாய் மலர 5வேளை வேண்டுகின்றேன் நான்

நம் காதலை, பாசத்தை, நேசத்தை,
கருனையை, அன்பை, நட்பையெல்லாம்
விட்டு பிரிக்கப் பட்டிருக்கிறாய்,
பொருளாதாரம் எனும் பிசாசால்.

அரபிக் கடலோடும், வரண்ட பாலைவனத்தோடும்
பொருமை அடைந்து கொள் சில காலம்.
'பிரிவுகள் நிரந்தரமில்லை' என்ற வலியின்
வரியோடு அமைதி அடைகிறேன் நான் மிகுதி நேரம்.

கலங்காதே என் கண்ணாளனே....
நம் காதல் கைப்பிடிக்கும்.
காலங்கள் கை கூடும்.
வசந்தம் வழி சமைக்கும்.
உறவுகளும் உன்னோடினையும்.
வருங்காலம் உன்னை வாழ்த்தும்.

என் பெண்மையின் மென்மையை உணர்த்தியவனே.....
உன் வரவை எதிர்பார்த்து வழிமேல் விழி வைக்கிறேன்
தாயைப் பிரிந்து ஏங்கும் ஒரு கைக்குழந்தை போல....


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments:

  1. வெளி நாடு வாழ்க்கையில் ஒண்ணும் மிச்சமில்லை பாஸ்..! கவிதை அருமை வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஆம் தேவா இருப்பை விட இழப்புத்தான் அதிகம் அங்கு நன்றி உங்கள் ஆதரவுக்கு.

    ReplyDelete