Sunday, August 22, 2010

மட்டக்களப்பு நகரில் பாரிய டெங்கு விழிப்புனர்வு ஊர்வலம்

Kattankudi Web Community (Photo also attached).

மட்டக்களப்பு நகரில் 21.8.2010 பாரிய டெங்கு விழிப்புனர்வு ஊர்வலம் மற்றும் சிரமதானம் என்பன இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மட்டக்களப்பு பொலிசார் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை மட்டக்களப்பு சுகாதார அலுவலகம் மட்டக்களப்பு சிறைச்சாலை என்பன இணைந்து இதை ஏற்பாடு செய்திருந்தனர்.

டெங்கு விழிப்புனர்வு ஊர்வலம் மட்டக்களப்பு மாநகர சபை முனபாக ஆரம்பமாகி மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைவரை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபை மேயர் மற்றும் பிரதி மேயர் பதில் ஆணையாளர் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் தாதி மாணவர்கள் இவ்விலப்புனர்வு ஊர்வலத்தில் பங்கு கொண்டனர்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment