Friday, December 31, 2010

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.



வாழ்க்கை என்ற புத்தகத்தில் வருடப் பக்கங்கள் புரட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் காலம் அப் பக்கத்தை புரட்டும் போது நாம் அந்தப் பக்கத்தை முழுமையாக படித்து முடித்து விட்டோமா? என்பது தான், இன்று நாம் புது வருடத்தை வரவேற்பதற்கு மிகவும் ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு வருடத்தை நம் வாழ்கையின் பயணத்தில் இழந்து விட்டோமே என யாரும் வருத்தப் படுவதில்லை. அவற்றில் நாம் திட்டமிட்டிருந்த விடயங்களை செய்து முடித்தோமா எனவும் சிந்திப்பதில்லை. இப்படியே நம் வாழ்க்கை நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்கிறது/விலகிச் செல்கிறது.

நாம் இந்த ஆண்டுக்கு விடை கொடுக்க இன்னும் ஒரு சில மணி நேரங்களே உள்ள நிலையில் உங்களுக்கு நாம் சொல்வது என்னவென்றால் இந்த வருடத்தில் உங்களிடம் ஏற்பட்ட மாற்றங்களை சற்று சிந்தியுங்கள். நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திருப்பின் அவற்றை தொடர்ந்து கடைப்பிடியுங்கள். தீயவைகள் உங்களுக்குள் ஆட்கொண்டிருப்பின் அவற்றை விட்டு திருந்தி வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி பென்ஜமின் பிராங்லின்(Benjamin Franklin) கூறிய ஒரு கருத்தை இவ் விடத்தில் நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறோம். அதாவது "நீங்கள் எப் பொழுதும் உங்கள் தீய செயல்களுடன் போராடிக் கொண்டேயிருங்கள், உங்கள் அயலவர்களுடன் சமாதானத்தையே பேணுங்கள், இவை இரண்டையும் ஒன்றினைத்து பிறக்கும் புது வருடத்தில் ஒரு சிறந்த மனிதனாக மாறுங்கள்" என்பதாகும்.

எனவே எம்மை விட்டு கடந்து செல்ல இருக்கின்ற வருடத்துக்கு நாம் விடை கொடுத்தாலும் அந்த வருடம் நம்மில் ஏற்படுத்திய தாக்கம் சில வேளை மறக்க முடியாத நிகழ்வுகளாக இருக்கலாம். இவை வாழ்க்கையின் நிதர்சனமே.
எனவே நடந்ததை விட்டு விடுங்கள் இனி இருப்பதை பற்றி பிடியங்கள்.

மனிதர்களிடயே மனிதத்தை, அன்பை, பாசத்தை, நட்பை, காதலை, வளருங்கள். மன்னிப்பை பரிசளியுங்கள், மகிழ்சியை இலவசமாக்குங்கள், மற்றவரின் உணர்சிகளுக்கும் சற்று மதிப்புகொடுங்கள். வாழக்கை சுபீட்சம் நிறைந்ததாக மாறும்.

எனவே பிறக்க இருக்கும் புது வருடம் உங்கள் அனைவருடைய வாழ்கையிலும் சந்தோசமும், சுபீட்சமும், சமாதானமும், நிறைந்ததாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றோம்.

உலகெங்கும் உள்ள எமது இணைய பார்வையாளர்கள் அனைவரும் சந்தேசமான, இனிமையான, நிறைவான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post Comment

Friday, December 17, 2010

ஒரு இதயத்தின் இருதி குமுறல்......

அம்மா...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என் அதிசயமே..........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என் ஆசானே..........
என் இதயமே..........
என் உயிரே..........

உனக்காக நான் எழுதும் ஒரு முடிவின் முற்றுறை, நீ வாழ வேண்டும் பல்லாண்டு..............

அம்மா........,
நீ தந்த நினைவுகளை மறக்கவில்லை நான்,
என் இனிய பருவமாம் இளம் பருவத்தை தவிர,
நீ தந்த முத்தம் எனக்கு நினைவில்லை,
நீ என்னை கட்டித் தழுவியதும் நினைவில்லை,
ஆனால் நினைவிருக்கறது நீ எனக்காக தந்த உன் பாசம்.

அம்மா..........,
எனக்குள் உன்னை விதைத்தாய்,
ஆனால் இன்று நான் ஒரு தனி மரம்,
இன்று என்னில் நீயில்லை,
ஆனால் நினைவாய் இருக்கிறாய்,
என் இதய கூட்டுக்குள் பத்திரமாய்,
என்றும் இருப்பாய்...

அம்மா.........,
நான் உனக்காக வரையும் இந்த கடைசிக்கண்ணீர் மடல்,
உன் கை வந்து சேரும் முன்,
என் உயிர் பிரிந்திருக்கும் என் உடலை விட்டு,
என் உடல் சேர்ந்திருக்கும் என் தாய் மண்ணோடு,
மன்னித்து விடு என்னை, மறைத்தற்காய் அல்ல, தாமதித்ததுக்காய்

அம்மா.........,
உன்னோடு நான் பிரியாமல் வாழ்ந்த 15 வருடங்கள்
என் வாழ் நாளில் நான் கண்ட
சுவர்கங்கள்..........

அம்மா.........,
நான் உன்னை சிரிக்கவைத்தது,
நீ என்னை ரசிக்க வைத்தது
நான் உன்னை வெறுப்பேற்றியது,
நீ என்னை திட்டியது
எல்லாம் ஒரு இரவின் கண்ணீரோடு கரைந்து விடுகிறதம்மா..........
அன்று நீ எனக்கு அடித்தது இன்று இனிக்கிறது,
ஆனால், உன் நினைவு என் இதயத்தில் காயங்களாகி வலிக்குதம்மா..........

அம்மா...................,
நீ எனக்கு செய்தது ஏராளம், இருந்தும் இன்னொன்றும் செய்து விடு,
இறைவனிடம் மன்றாடு என் மண்ணரை வாழ்கை அமைதி பெற......

அம்மா..............,
நீ இக்கடிதம் கண்டவுடன் நீ அழும் சத்தம் இங்கு
என் காதினில் இடியாய் இடிக்கிறது......
நீ அழக்கூடாது, இது என் அன்புக்கட்டளை,
உனக்கு நான் இடும் கடைசி கட்டளை......

அம்மா............
எனக்கு பயமாய் இருக்கிறது இன்று, மரணத்தை நினைத்து அல்ல
நான் இல்லாத உன்னை நினைத்து.
எனக்கு முதலில் பயம் ஏற்பட காரணமும் நீதான்
உனை தாக்கிய மின்னலில் தான் முதலில் அதிர்ந்தேன் நான்,
இன்றும் எனக்கு பயம் தான் மின்னல் என்றால்.

அம்மா...............,
இன்னும் எவ்வளவோ எழுத வேண்டும் உனக்கு ஆனால்,
நேரம் இடமளிக்கவில்லை.
உலகம் விடை கொடுக்கிறது எனக்கு, நான் இவ்வுலகில்
வாழத்தகுதியில்லையென்று.

அம்மா............,
என் மரணப் படுக்கையிலும் உன் நினைவு மட்டும் தான்,
எனக்கு யாருமில்லை உனை தவிர
சொல்லி விடு என் ஸலாத்தை நம் சொந்தங்களிடம், பந்தங்களிடம் மற்றும்
எனை தேடி வரும் என் நண்பர்களிடமும்.....

அழாதே அம்மா........,
நான் அன்று பிறந்தவுடன் நீ பூத்த புன்னகை, இன்று மறையக்கூடாது உன்னில்
நான் உனை விட்டு பிரிந்தவுடன்.....
இது என் கடைசி ஆசை கூட
எனக்கு நீ விடையளிக்க வேண்டும் கண்ணீரோடு அல்ல,
புன்னகையோடு
இப்படிக்கு
உன் பாசமகன்

Post Comment

Tuesday, December 14, 2010

என் இனியவளே!!!



என் இனியவளே,
என் இதயத்தின் இருப்பிடமே,
கற்பனைக் கவிகொண்டு
கரைகிறேன் உன்னுல்...

என் சிந்தனையின் சிநேகிதி நீதான்,
என் எழுத்துக்களின் இருப்பிடம் நீதான்,
காவியங்கள் பாடும் ஓவியம் நீதான்,
காகிதத்தில் தீட்டிய கவியும் நீதான்...

இளம் பூக்களின் மென்மை உன் தேகம்,
பசும் பாலின் நிறம் உன் வண்ணம்,
ஒளி புகா ஒரு இருட்டுக் கல்லரை உன் கூந்தல்,
நான் தடுக்கி விழுந்த கற்கள் உன் கண்கள்...

யார் இவள்????? - எனக்காய்,
நிலவின் உருவாய்,
பூமிக்கு வந்த மகள்...

சிக்கனச் சிற்பி,
சிறப்பாய் செதுக்கிய,
சிறந்த சிற்பம் இவள்...

கற்பனையில் மனைவியாய்,
கனவுகளில் நாயகியாய்,
தற் காலத்தில் காதலியாய்,
கரைந்து விட்டால் என் உயிருக்குள்....

கற்பனையும் கனவும் நிஜமாகும் காலம்,
இசையோடு உறவாடும் கவி போல..
இரு இதயம் இனிதாய் இணையும்...
இனி வரும் காவியம் நம்மை பாடும்.

Post Comment

Thursday, December 09, 2010

போர்க்களம்...



மனிதத் தசைகளின் மயானம்
இரத்த கங்கையின் பிறப்பிடம்
போர்க்களம்

மனித தேகத்தின் இலவசக் கடை
யாருமே காணமுடியாத விடை
போர்க்களம்

போர்ச் சிற்பி செதுக்கிய சிற்பம்
இம் மண்ணிலே இதுவரை மறையாத துக்கம்
போர்க்களம்

கழுகும் நரியும் கனிவாய் அழைக்கப்படும்
காலத்தின் விருந்துபசாரம்
போர்க்களம்

தாயின் பாசமும் தாரையின் காதலும்
கலக்கும் ஒரு கலவைக் காவியம்
போர்க்களம்

வெறி கொண்ட வெற்றியின் வீர முழக்கம்
இசையாய் கேட்கும் இதயராகம்
போர்க்களம்

மரண தேவியின் காதலன்
மரித்த உடல்களின் காவலன்
போர்க்களம்

சில மனித நரிகளின் தந்திரம்
பல மனித பேய்களின் உறைவிடம்
போர்க்களம்

அழிக்க வேண்டிய அரவம்
அகற்ற வேண்டிய நரகம்
போர்க்களம்

Post Comment

Sunday, December 05, 2010

அதிசயப் பிறவி...



அவமானமும் அடக்கமும் ஒட்டி உறவாடியது
என்னோடு
பரிதாபம் எனும் கண்கள் என்னை
பார்க்காத நாட்களே இல்லை

நிலவின் அழகை ரசிக்க கூட நிமிர்த்த வில்லை
என் பூமி பார்த்த தலையை
வானம் பார்த்தே பல வருடம் ஆயிற்று

மூன்று தசாப்தங்கள் கழிந்ததாம்
நான் பிறந்து நேற்றுடன்
யாரோ சொன்னார்கள்
இன்று என் காதுடன்

முன் வீட்டு முருகேஷ் அண்ணாவின் குழந்தை
என்னை பார்த்துதான் சோறுன்பான்
வெள்ளாடை அணிந்த நான் பேய் என்ற கிலியில்
அவனுக்குத் தெரியாது நான் ஒரு துணையற்ற கிளி என்று

கணவன் இறந்த நாளோடு
கருகி விட்டது என் இதயமும்
மனிதரில் நான் தான் அதிசயப் பிறவி
இதயமே மரித்தும் உயிர்வாழும் ஒரு ஈனப்பிறவி

கருகிய இதயத்தின் சாம்பலோடு
கரைத்து விட்டேன்
என் உடல் கொண்ட உணர்சிகளையும்
கண்ணீர் என்ற கடலில்..

அம்மாவோடு வாழ்ந்த 8 வருடங்கள்
அவள் இல்லாமல் வலியோடு வாழ்ந்த 10 வருடங்கள்
காதலோடு வாழ்ந்த 5 வருடங்கள்
மனைவியாய் வாழ்ந்த 2 வருடங்கள்
கடந்து-இன்று
தனிமையுடன் வாழும் 5 வருடம்
தொடர்கிறது..

நான் சிரித்து பல வருடம் ஆயிற்று
இப்போது சிரிக்கிறேன் என்பதை விட
நடிக்கிறேன்

பெண் என்ற பாத்திரத்தில்
விதவை எனும் சிறப்பு வேடம் எனக்கு

வலியை நீக்க ஒரு வழியில்லை
என் வாழ்வில்
வலியின் வரிசையில் எனக்கே முதலிடம்

உளி தாங்காத சிற்பம் இல்லை
வலி இல்லாமல் வாழ்கையில்லை..

விதியின் விதிமுறைக்கு நான் மட்டும்
விளக்கப்பட்டவளா?
தொடர்கிறது என் வாழ்வு
ஓயாமல் வீசும் தென்றல் போல.....

Post Comment

Thursday, December 02, 2010

அறிந்ததுன்டா நீங்கள் (சனத்தொகை-I)



மிகவும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் எமது தளம் உங்களுக்காக பகிர கொண்டு வந்திருக்கும் தகவல் 2005ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு தகவலாகும்... சில தனிப்பட்ட வேளைகள் காரணமாக எம்மால் இந்த தகவலை உரிய நேரத்துக்கு வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொண்டு அதற்கான மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டு விடயத்துக்குள் நுழைவோம்.

அதாவது உலகின் சனத்தொகை பற்றி நாம் அதிகமாக கேள்விப்பட்டிருப்போம். இச் சனத் தொகையில் செல்வாக்குச் செலுத்துகின்ற முக்கியமான இரு விடயங்கள் சம்பந்தமாக நாம் இங்கு ஒரு பார்வையை செலுத்துகின்றோம். காரணம் இன்று உலகம் எதிர் நோக்கும் சவால்களில் மிகவும் முக்கியமான ஒரு சாவாலாக இந்த சனத் தொகை காணப்படுகிறது.

அதற்காக நாம் இங்கு ஒன்றும் தீர்வுகள் எதுவும் முன்வைக்கப் போவதில்லை.. காரணம் இயற்கையோடு விளையாடும் சக்தி யாருக்குமில்லை..இயற்கையின் மாறுபாடுகளுக்கு நாம் தீர்மானம் எடுத்து அதை மாற்ற நினைக்கும் போது மீண்டும் ஒரு பாரிய சவாலுக்கு உள்ளாக்கப்படுகிறோம் என்பது தான் அதன் யதார்தம்.

எங்களுடைய நோக்கம் பயனுள்ள தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான்.

பிறப்பு

எனவே நாம் இங்கு கொண்டு வந்திருக்கும் விடயம் 2005ம் ஆண்டு வெளியிடப்பட்ட உத்தியகபூர்வ அறிக்கையின் படி ஒரு வருடத்தில் பிறப்பு அதிகமாகவுள்ள நாடுகளில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள்... (நினைவில் நிறுத்துங்கள் மொத்த சனத் தொகை அல்ல. தரப்பட்டுள்ள நாடுகளில் ஒரு வருடத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை)

(எண்ணிக்கை மில்லியன்களில்
உ-ம்:- இந்தியா 24.1 மில்லியன்)

1. இந்தியா 24.1
2. சீனா 16.7
3. நைஜீரியா 5.3
4. இந்தனேஷியா 5.0
5. பாக்கிஸ்தான் 4.4
6. பங்களாதேஷ் 4.3
7. அமெரிக்கா 4.1
8. பிரேஸில் 3.1
9. கொங்கோ 2.7
10.எத்தியோப்பியா 2.7

(இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் 2005ம் ஆண்டு திரட்டப்பட்டதாயினும் அதன் பிறகு இது வரை இப்படியொரு தகவல் உத்தியகபூர்வமாக வெளியிடப்படவில்லை)

இங்கு மற்றுமொரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் அதவாது இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 10 நாடுகளில் 5 நாடுகள் ஆசிய கண்டப் பிராந்தியத்தின் நாடுகளாகும்.....
(தொடரும்...)

Post Comment