
Virakesari.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் போது உலகப் புகழ்பெற்ற ஒக்டோபசை கொல்கத்த்தாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்கத்தில் உருவாக்கியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் போது, இறுதி முடிவை ஜெர்மனி மியூசியத்தில் இருந்த 'போல்' எனும் ஒக்டோபஸ் முன்கூட்டியே கணித்துக் கூறியது. இதன் மூலம் 'போல்' உலகம் முழுவதும் பிரபலமாகியது.
போட்டி முடிந்த பின்னர் அதன் உரிமையாளர் 'போல்' ஓய்வு பெற்று விட்டதாகவும், இனிமேல் எந்த முடிவையும் அது கணிக்காது என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் ஒக்டோபசின் உருவத்தை கொல்கொத்தாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்கத்தில் வடித்துள்ளது. 22 கெரட் தங்கத்தில் செதுக்கப்பட்டுள்ள இதன் மொத்த எடை 3.3 கிலோவாகும்.
30 கலைஞர்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர். இதன் விலை 80 லட்ச ரூபா என மதிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment