Tuesday, August 31, 2010

உன்னைத் திருத்து.


இரக்கமில்லா இரவில் தன்னந்தனியாய்
நடு வீதியில் நானிருக்க
நாணமில்லா நளினத்துடன் நடைபயின்றால்
நங்கையொருத்தி நானிருந்த திசைபார்த்து.....

அவளின் அழகான சிரிப்பில் ஆபத்தை உணர்தியது
என் மனம் சற்று ஒதுங்கினேன்.
வெறுப்புடன் நானிருக்க வெட்கமில்லா
வாய்ப் பேச்சால் என் எண்ணம் கலைத்தால்
'சார் காலையில சாப்பிட்டது ஏதாவது help பண்னுங்க?'

மனிதம் மங்காத என்னில் மனிதாபிமானத்தோடு
50 ருபாய் கொடுத்தது என் கரங்கள்
விசாரனைக் கேள்வி தொடுத்தது என் நாவு
யார் நீ? இந் நேரம் என்ன செய்கிறாய்?

மறு நிமிடம் நனைந்தது அவள் கண்கள்
சற்று தடுமாறியது என் இதயம்...

வெட்கமில்லாமல் சொன்னால் அவள் ஒரு
விடுதியில்லா விபச்சாரி என்று
ஏன் இப்படி? எதற்கு இந்த தொழில்?
மீண்டும் கேள்வி தொடுக்கப்பட்டது
என்னில் இருந்து.......

சொன்னால் செய்தி ...........
அவளின் சோகச் செய்தி...........

இறைவன் ஒருவன் இருந்திருந்தால்
அம்மா என்னை அரவனைத்திருந்தால்
என் அப்பா உழைத்திருந்தால்
காதலன் கரம் பிடித்திருந்தால்
கணவன் காப்பாற்றியிருந்தால்
இச் சமூகம் சாக்கடையாய் மாறாமல் இருந்திருந்தால்
என் வாழ்வும் மலர்ந்திருக்கும் என்றது அவள் நாவு

என் வார்தை வழுவிழக்க
என் உடம்பு படபடக்க
என் மனம் குழம்பி அழுதது
இப்படியும் ஒரு பிரச்சைனையா என்று
விடைகொடுத்தேன் சற்று பரிதாபத்துடன்

வலிகள் நிறைந்ததுதான் வாழ்கை என்று
சொன்ன நான் சோகத்தில் மூழ்கினேன்
சமுதாயத்தின் சில சாக்கடைகளை எண்ணி

என்ன செய்யலாம் என்ற யோசனையில் தத்தளித்த போது
'திருடுற கூட்டம் திட்டம் போட்டுத் திருடிக் கொண்டே இருக்குது
அதை தடுக்குற கூட்டம் சட்டம் போட்டுத் தடுத்துக் கொண்டேயிருக்குது
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது'என்ற
ஒரு கவிஞனின் வரி எனக்கு நீந்தக் கற்றுக் கொடுத்தது

'உன்னைத் திருத்து உலகம் தானாய் திருந்தும்'
என்ற எண்ணக் கருக்குள் அடங்கிப் போனேன்
என் எழுத்துக்களுடன்...........


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment