Thursday, August 26, 2010

என்னவளே............



ஒவ்வொறு நொடியும் உன்னைத் தேடும்
என் கண்கள் ஏமாற்றத்துடன்
உன்னைக் காணாமலே களைப்படைகிறது

உன்னைப் பார்க்கும் போது உன்னுடன்
பேசத்துடிக்கும் என் நாவு தயக்கத்தால்
அடக்கப்பட்ட காளையாக என் வாய்க்குள் சிறைப்படுகிறது

பார்க்கும் போதே என்னைப் பரவசப் படுத்தியவள்
பார்வையாளே என்னை பற்றியெரிய வைத்தவள்
என் கவிக்கு முகமானவள்
என் வலிக்கும் கருவானவள்

அன்பே............
என் பூமியில் பேய்ந்து கொண்டிருக்கும்
அடை மழை நீ
உன்னைப் பிரியாமல் உன்னோடு நனைகின்ற
உன் பித்தப் பிரியன் நான்
என் மூச்சில் என்னோடு கலந்து விட்ட
காற்று நீ
உன்னை எப்போதும் சுவாசித்துக் கொண்டிருக்கும்
சுற்றமற்றவன் நான்
என் கடலில் ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கும்
அலை நீ
உன்னைச் சேர ஒவ்வொரு அலைக்கும் ஓடோடி வரும்
உன்னவன் நான்
சேர்ந்து விடு இன்று என்னோடு........ நான் வாழ வேண்டும் உன்னோடு.....

அவள் என்னை நெருங்கி வரும் தருணம்
தளர்கிறது என் நாடி
அவள் என்னை கடந்து செல்லும் நிமிடம்
உடைகிறது என் மனக் கண்ணாடி
சொல்லப்படா ஒரு வார்த்தைக்குள் சிக்கித் தவிக்கிறது
என் காதல்
சொல்லத்தான் வேண்டும் என்ற ஆசையில் உன்னை
விரட்டுகிறது என் கால்கள்
மங்கையவள் வரவேண்டும் என் மனங்கவரும்-பூ
மாலையாக...........
மங்கிவிட்ட என் வாழ்வை மாற்றியமைக்கும்-என்
மனைவியாக.......
வந்து விடு இன்றே என்னோடு........... நாம் வாழ்வோம் நல்ல நட்போடு


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment