Wednesday, August 04, 2010

பிரிவில்லை என் காதலுக்கு.




அருவியாய் மாறியது என் இரு விழிகள்
ஓரத்தில் நின்று ஓவென்று அழுகிறேன்
கண்டு கொள்பவர்கள் யாருமில்லை
என்னவளை பிரிந்த என்னை.

வானமோ சிறு துளியாய் கண்ணீர் விட
அவளின் சொந்தங்களோ சோகத்தால் துவண்டுவிழ
நிஜமாகவே அவள் பிணம்
கூட நானும் நடை பிணம்
அரங்கேரியது அவளின் இருதி ஊர்வலம்.

தெரியாத எங்கள் காதலால் என்னை தேற்றயாருமில்லை
அடங்கிய அவளின் ஆவியோடு அசையாமல் நின்றது என் உடலும்
தூரத்தில் நின்று துடி துடித்தேன் அவளுக்கு மூட்டப்பட்ட தீயின் சூட்டால்

எங்கு பார்த்தாலும் அவள் முகம் கண்களுக்குள்
இன்னும் மறையவில்லை அவள் சிரிப்பொலி என் காதுக்குள்
எதுவும் முடியவில்லை என்னால் ஒரு நிமிடம் கூட அவளை விட்டு

கரையோடு ஒதுங்கிய அலையோடு நடந்தேன்
நானும் அவளோடு சேர்ந்து விடுவேன் என்ற நம்பிக்கையில்
அவளோடு சேர்ந்து வாழப் போகும் நாட்களை எண்ணி......

பிரிவில்லை என் காதலுக்கு
நிகரில்லை அவள் நினைவிற்கு


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment