Tuesday, August 24, 2010

காத்தான்குடி படுகொலைகளுக்காக சம்பந்தன் மன்னிப்புக் கோருகிறார்

Kattankudi Web Community.
காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட் டிருந்த 103 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப் பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ் லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரி உள்ளார். அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:

இது ஒரு தவறுதான். 20 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இத்தவறுக்காக முஸ்லிம் சகோதரர்களிடம் மன்னிப்புக் கோருவதில் எமக்கு எவ்வித தயக்க மும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில நடவடிக்கைகள் விளங்கிக் கொள்ள முடியாதவை. அப்படியான ஒன்றாகத்தான் இப்படு கொலை உள்ளது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment