Monday, July 12, 2010

ப்ரியமான நண்பனுக்கு...............

என்னோடு நீ இருக்கும் காலங்கள் தான்
என் பசுமை நிமிடங்கள்......
என்னோடு நீ இல்லாத நேரங்கள் தான்
என் கொடிய வருடங்கள்....

என்னோடு நீ இருக்கும் காலம்
அது என் வசந்த காலம்

பக்குவ பாசறையாம் பாடசாலையிலும்,
பணத்தின் கேந்திரமாம் கடைத்தெருக்களிலும்,
ஏழையின் வீடாம் ஓதுக்கப்பட்ட தெருக்களிலும்,
விளையாட்டு வீரர்களின் விடுதியாம் மைதானங்களிலும்,
சூரியனின் ஆதிக்கமும் சந்திரனின் சாந்தமும் நிறைந்த
மொட்டை மாடியிலும்,
நம் கேந்திர நிலையம் கடல் மணலிலும்,
நம் வாகனம் உன் மோட்டார் வண்டியிலும்,
என்று உன்னோடு இருந்த காலம்
அவை தான் என்றும் என் வாழ்வின் பொற்காலம்

உன் காதலியின் வீடு தேடி நான் அலைந்த காலங்கள்,
நம் சேட்டையில் ஆசிரியரின் கண்டிப்புக்கு இலக்காகிய தருணங்கள்,
நீ என் அப்பாவிடம் மாட்டிக் கொண்டு திணறிய நிமிடங்கள்,
நாம் சைட் அடித்த பெண்கள்,
நாம் அடிக்கடி போடும் சண்டைகள்,
night out இல் செய்யும் குறும்புகள்,
நாம் சாப்பிட்ட hotel கள், கிழங்கு சாப்பிட்ட குடிசைகள்
நாம் பார்த்து ரசித்த படங்கள்...................
.........
என்னும் போதே கண்ணீர் நனைக்கிறது
என் காகிதங்களை

இன்று நீயில்லை என்னுடன்
காலம் எனும் அரக்கன் உன் வாழ்வில்
தனிமை எனும் புதிய நண்பன் என் வாழ்வில்
நான் உன்னை தொலைக்கவுமில்லை
நீ என்னை பிரியவுமில்லை

தொலை தூரத்தில் இருந்து வரும் உன் குரலைக் கேட்க
காத்துக் கிடக்கிறேன் என் விழி மூடாமல்

அவ்வப்போது என் இருளுக்கு வெளிச்சம் தந்தவன் நீ,
என்னிடம் எதுவுமில்லை உனக்குத் தருவதற்கு
ஏன் நட்பைத் தவிர......

நண்பனே.........
நீ சாப்பிடும் போதும்,
நீ தூங்கும் போதும்,
நீ சிரிக்கும் போதும்,
நீ அழும் போதும்,
எல்லா நிலைகளிலும் என்னையும் நினைத்துக் கொள்
உன்னுடன் என்றும் நான் இருப்பேன் நினைவலைகளாக.........

ஏனெனில் நான் இருக்கமாட்டேன் உனை நினைக்க........... :(


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment