Monday, August 09, 2010

ஓய்வுபெறுகிறார் இங்கிலாந்து உதைபந்தாட்ட அணி வீரர் பிராவுன்

Virakesari.
சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறப்போவதாக இங்கிலாந்து அணியின் சிறந்த பந்து தடுப்பாளர்களில் ஒருவரான வெஸ் பிராவுன் அறிவித்துள்ளார்.

இதேவேளை இங்கிலாந்து அணியின் கோல் காப்பாளர் ரோபின்சன் ஒய்வுப்பெறப் போவதாக அறிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் தென்னாபிரிக்காவில் நடந்து முடிந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் வாய்ப்பு அளிக்கபடவில்லை. இருப்பினும் அவர்கள் இருவரும் புதன்கிழமை ஹங்கேரியில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்குகொள்ள இருந்தனர்.

இது தொடர்பில் போல் வெஸ் பிராவுன் கருத்து தெரிவிக்கையில், "ஓய்வுபெற இதுவே சிறந்த தருணமாகும் . எனக்கு தற்பொழுது 30 வயதாகிறது என்பதால் இளைய வீரர்களுக்கு சந்தர்ப்பங்களை அளிக்கவேண்டும். நான் இங்கிலாந்து அணிக்காக விளையாடியதையிட்டு பெருமை அடைகிறேன். இங்கிலாந்து அணி எதிர்காலத்தில் சிறப்பாக விளையாடும் என நம்புகிறேன்" என்றார்.

அத்துடன் "இங்கிலாந்து அணி வீரர்களுக்கும் அதன் பயிற்றுவிப்பாளர்களுக்குமிடையில் சிறந்த உறவு முறை இல்லை" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment