Saturday, December 31, 2011

கொண்டாடவா புது வருடம்? (புதுவருட சிந்தனை )


ஏன் புது வருஷம்? எல்லாமே புதுசா மாறுமா அப்பா? இல்லடா கண்ணா... வருஷம் மட்டும் தான் மாறும்.
காலைல கடைக்கு சாப்பிட போன எனக்கு, காதில் விழுந்த மகன் அப்பா சம்பாஷனை. பையன் படு உசார் போல.. இப்பவே இப்படி யோசிக்கிறான் எண்டு நினச்சிட்டு வந்து, இத வச்சே நம்ம ஒரு மெசேஜ் சொன்ன என்ன எண்டு யோசிச்சன். விடுங்க பாஸ் நம்ம சுட்டது பையனுக்கு தெரியவா போகுது.

நானும் மாறப் போறது இல்ல, நீங்களும் மாறப் போறது இல்ல, வருஷம் மட்டும் மாறிக்கிட்டே போகுது. அதுவும் பெரிய மாற்றம் எதுவும் இல்ல 2011 இல் கடைசியில் இருக்கும் 1 இரண்டாக (2) மாறப் போகிறது. அவ்வளவுதான். இதில் என்ன சந்தோசம் என்பது மட்டும் புரியாப் புதிர்தான். அது சரி, அது தெரிஞ்சாதான் நான் ஏன் இப்படி புலம்ப போறேன்?

வருஷ தொடக்கத்தில் நல்லது ஒன்றை எடுத்து, தீயது ஒன்றை விட்டு விட வேண்டுமாம். யார் சொன்னது எண்டு ஆராய்ச்சி நடத்த நேரமில்லை. சாரி பாஸ். ஆனா இங்க என்ன நடக்குது? வருஷ ஆரம்பமே தீமைக்குதான் வழிவகுக்குது. உடன்பாடு இல்லாதவர்கள் நம்ம பாப்பைய்யா கிட்ட வேணும்னா பட்டிமன்றம் நடத்த சொல்லி முடிவெடுப்பம். இப்போ கொஞ்சம் முழுமையா வாசிச்சி பாருங்கோ.

வீண்விரயம், பொழுதுபோக்கு, மது, மாது, கேலிக் கூத்துகள்.... நன்மைகளா இவைகள்?

நம்ம கவிஞன் ஒருவன் அழகா சொன்னான் மத்தவன சந்தோசப்படுத்தி பாரு... நிறைவான சந்தோசம் அதுதான் எண்டு அவன் பேரு..... மறந்து போச்சு விடுங்க. நமக்கு அவன் பெயரும் மறந்து போச்சு அவன் சொன்னதும் மறந்து போச்சு.
நீங்களே சொல்லுங்க நீங்க எத்துன பேர் மாற்றுதிரனாளிகள்/ அனாதைகள்/ ஏழைகள் கூட உங்க கொண்டாட்டங்கள பகிர்ந்து கொண்டீங்க? நம்ம சந்தோசங்கள் நம்மளோட மட்டும் முடிஞ்சிட்டா அதுல எந்த திருப்தியும் இல்ல நம் சந்தோசம் மத்தவர்களுக்கும் பகிரப்படனும். அதுதான் உண்மையான சந்தோசம்.

பண்டிகை காலங்களில் வீண் விரயம் தான் அதிகம். எதற்கு? 2 நிமிட சந்தோசத்துக்காக 20 கோடிகள் செலவழிக்கப் படுகின்றன. காலங்கள்/ வருடங்கள் பல மாறிய போதும் நாம் மட்டும் மாறவே இல்லை. இன்றைய உலகம் இருப்பவனுக்கு கொடுக்கிறதே தவிர இல்லாதவனை நினைத்துகூட பார்ப்பதில்லை. சற்று யோசிப்போம்.

புது வருடம் பிறப்பது நம் வாழ்வை இன்னும் திட்டமிட்டு கடந்த வருட தவறுகளை திருத்தி வாழ்வை மேலும் சிறப்பாக்கி கொள்வதற்குத்தானே தவிர கொண்டாடி மகிழ்வதற்கு அல்ல. நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். என்ன செய்வது எந் நேரமும் உண்மைகள் இனிப்பதில்லை.

அப்புறம் இன்னொரு முக்கியமான விடயம்.... நம்மை விட்டு எதுவும் பிரியும் போது கவலை கொள்ளும் நாம் ஒரு ஆண்டு பிரிந்து மறு ஆண்டு தொடங்கும் போது ஏன் கொண்டாடுகிறோம்? உறவும் பிரிவும் ஒன்றாய் வரும் போது இச் சமூகம் உறவுக்கே முன்னுரிமை கொடுக்கிறது. இழப்பின் வலியை விட உறவின் அணைப்பு சிறந்தது.

பிறக்கும் புது வருடத்தில் சந்தோசங்கள் மலர இறைவனை வேண்டுகிறேன். வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Post Comment

Friday, December 30, 2011

உன்னைப் பிரியமாட்டேன்!!


கண்ணுக்குள் உன்னை வைத்து
இமைகளை மூடுகிறேன்.
என் இரவின் கனாக்களிலும்
நீதான் வரவேண்டுமென்று..

இதயத்துக்குள் நினைவுகளாய்
நிரம்பிவிட்ட உன் ஞாபங்கள்..

அத்துணை அணுவிலும்
இரத்த ஓட்டமாய் கலந்து
என் ஒவ்வொரு அசைவிலும்
உன்னையே பிரதிபலிக்கிறது.

அழகிய நினைவுகளும் நீ,
அழகிய நிகழ்வுகளும் நீ,
அழகிய எதிர்காலமும் நீ..

என் காதோரமாய்
கைபேசியில்
நீ பேசுகையில்..

உலகையே
மறந்து போகிறேன்
உன்னை மட்டும்
நினைத்தவனாய்..

கூட்டமாய் நீ வருகையில்
கண்களால்
உன்னோடு கதை பேசி..

மௌனத்துக்குள் உறைந்து விடுகிறேன்
கண்களை மட்டும் அசைத்தவனாய்..

எந் நேரமும்
உந்தன் நினைப்பு,
உன்னை பார்க்க
மனம் துடிக்கும் துடிப்பு,
உன்னை காணாமல்
நான் தவிக்கும் தவிப்பு..

நினைப்பு, தவிப்பு, துடிப்பு.
இவை மூன்றையும் கலந்து
காலம் செய்யும் நகைப்பு
இந்த காதல்..

போராட்டம் நிறைந்த
வாழ்வெனும் கடலில்,
மூச்சுப்பிடித்து சுழியோடி..
நான் கண்டெடுத்த காதல் என்ற
சிற்பிக்குள்,
எனக்கு கிடைத்த முத்து நீ.

பெண்ணே,
மூச்சே நின்றாலும்
உன்னைப் பிரியபோவதில்லை.

Post Comment

Wednesday, December 14, 2011

புரண்டு போன பூமி.


அன்று,
உழைப்பவனின் உழைப்பை
மதிப்பிடத்தான்
பணம்.

இன்று,
உறவுகளின் பாச
அளவீட்டுக் கருவியை
மாறிப் போனது
இந்தப் பிணம்.

முயற்சிக்கு முன்னுரிமை
இருந்தது
அன்று.
அதிஷ்டத்துக்குள் பூமி
மூழ்கிப்போனதால்,
முயற்சிப்பவன் எல்லாம்
மூச்சடைகிறான்
இன்று.

உறவுகளுக்கும்,
உயிரோட்டமில்லை.
முயற்சிக்கும்,
முன்னுரிமையில்லை.

உறவுகளில்
உயிரோட்டம் இருந்தால்,
(இன்று)தாயை
தள்ளிவைக்கமாட்டான் பிள்ளை.

முயற்சியே
முதல் என்றால்,
என்றோ முன்னேரியிருப்பான்.
மீனவனுடன் விவசாயி??

அசாத்தியத்தை
சாத்தியமாக்கி விட்ட உலகம்,
சாத்தியத்தை இன்று
அசாத்தியம் என்கிறது.

தீ
சுட்ட காய வலியை விட,
உலகை நினைத்து எழுதும்
வரியோடு வலிக்கிறது
என் இதயம்.

காகிதத்தில்
கவி கிறுக்குகிறேன்,
கண்டு கொள்பவர்
யாருமில்லை.

குரலை எழுப்பி
கூச்சலிடுகிறேன்,
கேட்பவரும்
அருகிலில்லை.

என் இயலாமையை மறைத்து,
உங்களிடம் ஒப்படைக்கிறேன்?
இவ் வரிகளையும் இவ்வுலகையும்.

புரண்டு போன பூமியை
நிமிர்த்த முயற்சிப்பீர்கள்
என்ற நம்பிக்கையில்.

Post Comment

Monday, December 12, 2011

விதியை வெல்ல எந்த கொம்பனாலும் முடியாது. (என் டயரி)

இது ஒரு புதிய பகுதி. சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை கமெண்ட் பெட்டியில் பதிவு செய்யவும்.

நீங்க யோசிக்கிற மாதிரி பெரிய ஒரு விடயமும் நான் சொல்ல போறதில்லைங்க. அப்புறம் எதுக்கு அவ்வளவு பெரிய பில்ட்அப்? என்று யோசிக்கிறது தெரியுது கய்ஸ். நேத்து பேஞ்ச மழைல முளைச்ச காளான்கள் எல்லாம்( ஐயோ உங்கள சொல்லலபா ) பெரிசு பெரிசா பில்ட்அப் கொடுக்கும் போது நானும் கொஞ்சம் ட்ரை பண்ணிட்டு போறேன், மன்னிச்சு விட்டுடுங்கப்பா. ஓ! நான் இன்னும் என்ன விஷயம் எண்டு சொல்லவே இல்ல. அதாங்க ஒரு வாரத்தில் நான் அனுபவிச்ச அனுபவங்களை உங்ககிட்ட பகிர்ந்துகொள்ளலாமே எண்டு நினைக்கிறன். எனக்கு தெரியும் மத்தவங்க டைரி படிக்கிறது எவ்வளவு இண்டரெஸ்ட் எண்டு.(நாங்களும் படிச்சி இருக்கம் இல்ல).

போன மண்டே- மொக்கடே.
இப்படிதான் ஒரு கவிதை போட்டேன், அப்படியே அத ஷேர் பண்ணுவம் எண்டு கிளம்பினா நம்ம பசங்க பிச்சி எடுத்துட்டாங்க. ஒரே மொக்கடேயா போச்சு. பேஸ்புக்ல ஷேர் பண்ணினதுதான் தாமதம் வழமை போலவே பப்ளிக்ல மானம் போய்டிசுங்க. சரி அத சமாளிச்சிட்டு ட்விட்டர் லாகின் பண்ணினா கேள்வி கேட்டே கொண்டுடானுங்க. சபா இந்த இன்டர்நெட் வேணா எண்டு வெளிய போனா எப்பவோ ஒரு நண்பன் கிட்ட அன்ச்ட்டோபப்ல் சீடி வாங்கினயாம் எண்டு அவன் புடிச்சி அர உசிர எடுத்துட்டான். அவன்கிட்ட இருந்து தப்பி ஒரு அறுவைக் கப்பலிடம்மாட்டி அவன் மீதி உசுர எடுத்துட்டான். எவன் மூஞ்சில முளிச்சமோ எண்டு திரும்ப வீட்டுக்கு வந்து சேர்ந்து நம்ம பாவோரிட் கிரிக்கெட் கேம் விளையாடிட்டு படிக்கலாமே எண்டு கொப்பிய தூக்கி கோன்சொளிடேட் பினான்சியல் படிச்சு முடிச்சேன். அப்புறம் என்ன சாப்பாடு, தூக்கம் இடையிடையே பேஸ்புக், ட்விட்டர். (அனுபவம்- விடிவு ஒழுங்கா இல்லாட்டி பொழுதும் ஒழுங்கா இரியாது போல)

போன டியூஸ்டே- அன்லக்டே
கைக்கு எட்டுறது வாய்க்கு எட்டல்ல அப்படின்னு படிசிருபீங்க. ருசிச்சிருக்கிரீன்களா? மொத்த நாளும் அப்படியே தான் பசங்களா இருந்திச்சி. என்ன கொடும சார்? இது எண்டு தோனுதிள்ள படிகிறே உங்களுக்கே இப்படின்னா....... ஒரு சின்ன எக்சம்ப்ல் "வாக் இன்ரவியு உடனே கிளம்பி வா மச்சான்" எண்டு ஒரு பிரெண்ட் கால் பண்ணினான். பர பரக்க கிளம்பி பறந்து சென்றேன். என்ன நடந்திருக்கும் அதான் முதலே சொல்லிட்டேனே..... "சாரி நாங்க ஆல்ரெடி செலக்ட் பண்ணிட்டோம்" அப்படின்னு சிரிச்சிட்டு ஒரு பொண்ணு (என்ன பொண்ணுடா அவ? ) சொன்னா. வெறித்த பார்வையை பிரெண்ட்க்கு வீசிட்டு வெளிய வந்தன். நீங்களே சொல்லுங்க அதுக்கு அப்புறம் எப்படிங்க??? (என் நிலம நம்ம தனுஷ் நிலமதான்).ரியலி டஎர்ட் எண்டு ட்வீட் பண்ணிட்டு வந்து படுத்தவன்தான் இரவு சாப்பாட்டுக்கு தான் எழும்பினேன். அப்புறம் ஒரு சின்ன ஸ்டடி, பேஸ்புக், ட்விட்டர் மறுபடியும் தூக்கம். (அனுபவம்- ஒழுங்கா விடிஞ்சாலும் லக் வேணும்)

போன வெனிஸ்டே-திருப்திடே
ச்சே, இந்த கிழமையில வந்த 2 நாளும் நல்லாவே இல்ல. இண்டைகாவது நல்ல இருக்கணும் எண்டு எழும்பவே மழை.வெளிய போற ஐடியா சுத்தமா போச்சு.என் நண்பன் முரு அடிக்கடி ஒரு விடயத்தை சொல்லுவான். "மழைக்கும் காப்பிக்கும் ஏதோ பூர்வ ஜென்ம உறவு" எண்டு அத அண்டு நான் ரசிச்சி குடிச்ச காப்பில உணர்ந்தேன். படிக்கலாம் எண்டு பிளான் பண்ணும் போது தான் ஞாபகம் வந்தது, இண்டைக்கு முதல்ல மிச்சம் இருக்கிற ஆர்டிகல பதிவா போடலாம் எண்டு. சோ அத போட்டு முடிச்சிட்டு ஷேர் பண்ணிட்டு (நம்ம பசங்க ஏனோ அத கண்டுக்கல்ல) பிளான் பண்ணின மாதிரியே படிக்கக் குந்தியாச்சு. ஈவினிங் வரைக்கும் டைம் போனதே தெரியேல்ல.அப்படி என்ன படிச்சான் எண்டு கேகுறீங்களா performance management எண்டு ஒரு சப்ஜெக்ட் அதான் டைம் போனதே தெரியேல்ல. மனசுக்கு ஏதோ திருப்தியா இருந்திச்சி. அப்புறம் என்ன வழமையான விடயங்கள் இடையில் ஒரு கவிதை. (அனுபவம்- தீமையிலும் நன்மை உண்டு )

போன தேஷ்டே- வேஸ்ட்டே.
காலைல எழும்பினதும் என் lecturer என்ன கிளாஸ்க்கு வரசொல்லி கால் வந்திச்சி. ஆஹா இது வழமை தான். சில நேரங்களில் என் உதவி(அவருக்கு உதவி எனக்கு ஆப்பு) அவருக்கு தேவைப்படும் போது கூப்பிடுவார். சரி எண்டு கிளம்பினேன். அப்படியே என் புக்ஸ்சையும் எடுத்துக்கொண்டேன். அங்கு இருந்த சின்னச் சின்ன வொர்க்ஸ் முடிந்ததன் பின்னர் லைப்ரரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஞாபகம் வந்தது இன்று நண்பன் ஒருவனின் பர்த்டே. உடனே அவனுக்கு ஒரு கால் அண்ட் விஷ். அப்புறம் என்ன ஸ்டடியா ஹி ஹி ஹி பார்ட்டிபா. இப்படிதான் என் பர்த்டேவோ பிரன்ட் பர்த்டேவோ அந்த நாள் வேஸ்ட்டா போய்டும். அண்டு KFC வந்த ஒரு கேர்ள்ல கூட என் பிரெண்ட்ஸ் விட்டுவைக்க இல்ல(நக்கல் அடிச்சாங்க எண்டு சொல்லவந்தன் அண்ட் நான் ரொம்ப நல்லவன்). (அனுபவம்- நம்ம நல்லா இருக்க நினைச்சாலும் காலம் விடாது )

போன பிரைடே- சேட்டே.
எனக்கு மட்டும் வீகென்ட் ஒரு நாள் முன்னாடி வந்துடும் பசங்களா (அதுக்காக நான் வெட்டிப்பயல் எண்டு நினச்சிடாதீங்க நாங்களும் ஒரு நாளைக்கு பிஸியா இருப்போம் ) ஒரு கவிதை பகிர்வு வழமை போலவே ஆதரவுகள்.... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அப்படின்னு ஆரம்பிக்கலாம்ண்டு நினச்சேன் பட் முடியேல்ல. என்ன பண்றது நம்ம பிளான் பண்ற மாதிரியா எல்லாம் நடக்குது. மோர்னிங் யூசோலா போய்ச்சு. ஈவினிங் ஒரு கால், நம்ம பர்த்டே பாய் அச்சிடேன்ட். அப்புறம் என்ன? ஹொஸ்பிடல் அழுகை ஒரே சோகமயமா போச்சு. பயபுள்ள புளசிட்டான் 3 மந்த்க்கு நடக்கத்தான் முடியாது.
(அனுபவம்- விதியை வெல்ல எந்த கொம்பனாலும் முடியாது )

போன வீகென்ட்- என்ஜாய்மென்ட்.
இது எப்பவும் போல ரொம்ப ஜோலியா போச்சு. மயக்கம் என்ன படம் பார்த்தேன். தனுஷ்ட இடத்துல நாம இருந்திருக்கலாமோ? எண்டு தோணிச்சி நடிப்புக்காக இருந்தாலும் அப்படி ஒரு வைப் அமைந்தது தனுஷ் லக். மிக நீண்ட நாளைக்குப் பிறகு கத்தார் நண்பருடன் பேச கிடைத்தது. அவன் அறுத்தானோ/ நான் அறுத்தனோ தெரியேல்ல இரண்டுமணிநேர பேச்சுவார்த்தை.... ஆஹா சொல்ல மறந்துட்டன் girlfriend எண்டால் லப்டப் கொடுக்குற காலம் இது. ஒரு உயிர் நண்பனுக்கு கதை சொல்லும் காலம் இது. (என்னை போல நொந்த நண்பர்களுக்காக) இப்படி ஜோலியா முடிந்தது இந்த வாரம். பட் நம்ம அச்சிடேன்ட் பாய் மட்டும் என்ன டிஸ்டர்ப் பண்ணிகிட்டே இருந்தான். அவனுக்காக இடையிடையே ஹொஸ்பிடல் விசிட். (அனுபவம்-பெண் என்றால் பேயும் இரங்கும் பாவம் மனிசன் என்ன செய்வான்?)

Post Comment

Friday, December 09, 2011

கருவி ஒன்றை கண்டுபிடி!

(சூரியன் fm இன் ரீங்காரம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு எழுதப்பட்டு 23 /11 /2011 அன்று வாசிக்கப்பட்ட கவிதை)


கரைந்து விட்டது
நேற்றைய பொழுதுகள்.
கருகிக்கொண்டிருக்கிறது
இன்றைய நிஜங்கள்.
முன்நோக்கி நகர்கிறது
நாளைய நிகழ்வுகள்.

உலகம் இயங்கும் வேகத்திற்கு,
ராகட் கூட இரண்டாம் பட்சம்தான்.

உலகின் சுழலுக்கு ஈடுகொடுத்து,
பசுமை நினைவுகளை
எனக்குப் படம் போட்டுக் காட்ட,
கண்டுபிடி ஒரு கருவி.

இழந்தது எனக்கு
வேண்டும்,
மீண்டும்...

என் காதோரம் கதை சொல்லும் பாட்டி,
நான் தூங்கிய தாய்மடி,
பசுமையான பாடசாலை நாட்கள்,
பழகிப் பிரிந்துபோன நண்பர்கள்,
பாசமாய் அரவணைத்த உறவுகள்......
இவ்வாறு இழந்தவை ஏராளம்.

"எமக்குக் கிடைக்கும் அனைத்தும்
எம்மை விட்டுப் பிரியும்
" எனும் வாழ்வின்
நியதி உடைத்தெறிய,
கருவி ஒன்றைக் கண்டுபிடி.

உன் புதிதான கருவி பிறக்கட்டும்.
இழந்ததால் வலி சுமக்கும் உள்ளங்கள்,
வலி நீங்கட்டும்.

இழந்ததை மீண்டும் இயக்க
கருவி ஒன்றைக் கண்டுபிடி.


Post Comment

Wednesday, December 07, 2011

சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்? IV

(இதன் முதற் பகுதியை வாசிக்காத வாசகர்கள் இங்கு கிளிக் செய்யவும்)

பகுதி-I
பகுதி-II
பகுதி-III


பெண்களைப் பற்றி பேச ஆரம்பித்தாலே முடியாது என்பது சரியாகத்தான் இருக்கிறது. இத் தொடரை இதனுடன் முடிக்க வேண்டிய கட்டாயமும் எனக்கிருக்கிறது. அதை கவனத்தில் கொண்டு இந்த பகுதியை எழுதுகின்றேன். பெண்கள் பற்றிய நிறைய விடயங்களை எமது முதல் பதிவுகளில் அலசிவிட்டடதால் நேரடியாக விடயத்துக்கு வருவோம்.

பெண்கள் விடும் தவறுகள் எவ்வாறு அந்த சமூகத்தை பாதிக்கிறது?

முதலில் பெண்களும், ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டிய விடயம், பெண்களுக்கு இருக்கும் தாய்மை பற்றி. இந்த தாய்மை குழந்தைகளை சுமப்பதற்கு மட்டும் அல்ல, அவர்களை சரியான வழியில் வளர்பதற்கும்தான்.
ஆகவே ஒரு மனிதனே பின்னாளில் ஒரு சமூகமாகிறான் என்பது விதி. இதை வைத்து பார்க்கும் போது அம்மனிதனை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் தாய் (ஒப்பிடுகையில் கூடுதலான பொறுப்பு தாய்க்கே உண்டு.) அதாவது பெண் அங்கு சரியாக இருக்கும் போதுதான் அந்த பிள்ளையும் சரியான வழியில் வளர்க்கப்படுகிறான்.
ஒரு பிள்ளையின் முதல் பள்ளிக்கூடம் தாய்மடி எனும் கருத்தையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன். சமூகத்தில் அவன் ஒரு நிலையை அடையும் போது தன் தாயால் இவன் தவறான முறையில் வழிநடத்தப்பட்டிருந்தால் அங்கு பிரச்சினைகள் மிகக் கூடுதலாக காணப்படும். இந்த விடயத்தில் தாய்மார்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும். இது ஒன்றே போதும் பெண்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பதற்கு.

ஆனாலும் நாம் இன்னொரு விடயத்தையும் இங்கு சுட்டி காட்ட விரும்புகின்றோம்.
அதாவது பெண்கள் பொதுவாகவே தங்கள் பக்கம் யாரையும் மயக்கி விட கூடியவர்கள். அந்த வகையில் மணமுடித்த சில ஆண்கள் மனைவியிடம் மயங்கி போவதுமுண்டு. அதாவது மனைவிமார்களின் பேச்சை கேட்டு நடக்கும் ஆண்களும் உண்டு. (இது இயற்கை.) இப்படியான நேரத்தில் மனைவிமார்கள் தவறானவர்களாக இருந்து அவர்கள் சொல் படி இந்த கணவன் வழிநடத்தப்படும் போது சமூகம் சார்ந்த பிரச்சினைகள் ஏராளமாக தோன்றுகின்றன. இதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும்.ஆகவே பெண் என்பவள் ஆணை விட சமூகத்தில் அதிகம் முக்கியம் பெறுகிறாள்.(ஆண்களை வளர்ப்பதும் பெண்கள்தானே). இதனால்தான் பெண் என்பவள் சமூகத்தின் கண்ணாக சித்தரிக்கப்படுகிறாள். ஆகவே பெண்கள் எப்போதும் சரியான வழிநடத்தலில் சரியான வழியில் இருக்க வேண்டும்.

பெண்கள் எப்பவும் எந்த நேரத்திலும் நிதானம் உள்ளவர்களாவும் சரியான முறையிலும் இருக்க வேண்டும் என்ற செய்தியோடு நாம் இந்த தொடரில் பேசிய விடயங்கள் பெண்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பை வேண்டியவனாக விடை பெறுகிறேன்.என்னால் முடிந்த அளவு விடயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்துக்களே. வாழ்த்தி வரவேற்பதா? அல்லது தர்கித்து தகர்பதா? இரண்டுக்கும் நான் தயார். நீங்கள்...?(முற்றும்)

Post Comment

Monday, December 05, 2011

மரணித்து விட்டது மனிதம்



காலத்தின் கட்டளைக்குள்
கட்டுண்டு போன நாம்,
அக் காலத்தை விட வேகமாய் ஓடுகின்றோம்.
எதற்காய் ஓடுகின்றோம்?

எதுவுமே நிலையில்லா இவ்வுலகில்
எதை நிலையாக ஓடுகின்றோம்?

நான்?
நீங்கள்?
நம் குடும்பம்?
மனித உயிர்?
பணம்?
பாசம்?
ஆசை?
காதல்?
இதில் எது நிலையானது?

வானம்?
அதில் தோன்றும் நிலவு?
கடலை பிழக்கும் சூரியன்?
ஓயாமல் அடிக்கும் அலை?
அந்த அலை தந்த நுரை?
இதில் எதை சொல்ல முடியும்
நிலையானது என்று?

பணத்தை நோக்கி ஒரு கூட்டம்,
பாசத்தை நோக்கி ஒரு கூட்டம்,
அறிவை தேடி ஒரு கூட்டம்,
ஆகாரத்தை தேடி ஒரு கூட்டம்..

இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறது
நம் வாழ்வும் வாழ்நாளும்...

வாழப் பிறந்துவிட்ட மனிதனுக்கு
மரணம் மட்டுமே நிதர்சனம்.
மற்றவையெல்லாம் மாயமாய்
மறைந்து போகும் அதிசயம்.

என் ஒவ்வொரு பிறந்தநாளும்
எனக்குச் சொல்லும் சேதி
தெரியுமா உங்களுக்கு?

"மரணத்தை சந்திக்க
நீ ஒரு வருடம்
முன் வந்து விட்டாய்" என்பதுதான்.

மாற்றம் மட்டும் அல்ல,
மரணமும் மாற்றா முடியாததுதான்...

நம் ஓடும் பாதையின் முடிவு மரணம்.
அதை மறந்து விட்டதால்தான்,
இன்று மரணித்து விட்டது மனிதம்.

மரணத்தை நினைப்போம்,
மனிதத்தை வளர்ப்போம்.

Post Comment

Saturday, November 26, 2011

இதமாய் ஓர் ராகம்!


அமைதியைத் தத்தெடுத்து
ஆதரிக்கிறது இரவு.
மூடப்படாத இமைகளோடு,
பின்னிரவில்..
தனிமையாய் நான்.

இனிமையான இரவில்,
இதமாய் ஓர் ராகம்
தூரத்திலிருந்து,
என்னை தொட்டுச் செல்கிறது.

காற்றுக்கு வசப்பட்ட அவ்விசை,
என் காதுக்கு வந்து போகும் நேரம்...
என் மூளையில் புதைந்த
உன் நினைவோடு முட்டிச் செல்கிறது.

என்றோ தொலைத்த உன்னை
இன்று அருகாமையில் தேடுகிறது,
என் இதயம்.

என்னை மோதும் மழைச் சாரலாய்,
என்னை அணைக்கும் குளிர்த் தென்றலாய்,
என்னை வருடும் இதமான இசையாய்,
இன்றும் என்னுள் வசிப்பவள் நீதான்.

அழ நினைக்கும் கண்களிடம்
இதயம் சொல்கிறது.
"வேண்டாம் கண்ணீராய்
கரைத்துவிடாதே.
எனக்கு வேண்டும்,
என்றும் அவள் நினைவு...
நான் ஓய்வின்றி இயங்க."

Post Comment

Tuesday, November 22, 2011

விடையை தேடுங்கள் உறவுகளே!



சோகமாய் சொல்லிச் செல்லும்
கவிகளில் கூட,
சில சுவாரஸ்யம் இருக்கும்.

ஏழை என்று பிறந்தவன்,
வாழ்வு பற்றி சொல்லும் போது
என்னதான் இருக்கும்?

வறுமையின் வலைக்குள்
வசப்பட்டவர்கள்தான்,
வாழ்கையில் நிர்பந்திக்கப்பட்டவர்கள்.

ஆற்றுக்குள் எறியப்பட்ட
கற்கள் போல், மூச்சுத்திணறி
மூழ்கிப் போனார்கள்,
காலத்தின் கல்லறைக்குள்.

நெருப்போடு விளையாடும்
கைக்குழந்தை போல்,
நிஜத்தோடு போராடும் அவர்கள்,
என்றும் காயப்பட்டவர்களே!.

அரசியல் மேடையில்
தீனியாய் மாற்றப்பட்டுவிட்டது,
இந்த ஏழையின் வறுமை வாழ்க்கை.

அவை கேட்டு
கைகொட்டிச் சிரித்தே,
பழகி விட்டது நம் நிலைமை.

பக்கத்து வீடு பவித்திறாவோ?
பாலைவன ஆபிரிக்காவோ?
வறுமைக்குள் வசப்பட்டவன்,
வாழ்விழந்து தவிக்கிறான்.

ஆசையும், பணமும்
இவ்வுலகை ஆளும் வரை
அழியப்போவதில்லை வறுமை
இவ்வுலகை விட்டு....

ஒரு நேரச் சோறில்லாமல் உறங்கும்
விழிகள் எத்தனை?
உறங்க இடமில்லாமல் ஒதுங்கும்
உறவுகள் எத்தனை?

இதை நினைத்துப் பார்க்கும்
உள்ளங்கள் எத்தனை?
அதை மொழி பெயர்க்கும்
குரல்கள் எத்தனை?

அவை கேட்டு
உதவும் கரங்கள்
எத்தனை?

வினாவுக்கான விடை
தெரியவில்லை எனக்கு
???????

வானை பிளக்கும் இடியாய், வறுமைக்குள்
புதைந்தவர்களின் உணர்வுகள்,
உரத்து; வினாவாக ஒலிக்கிறது
இக்கவியோடு...

நீங்களும்
"விடையை தேடுங்கள்
உறவுகளே"

Post Comment

Monday, November 21, 2011

சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்?- III

(இதன் முதற் பகுதியை வாசிக்காத வாசகர்கள் இங்கு கிளிக் செய்யவும்)
பகுதி-I
பகுதி-II

அதாவது பெண்களுக்கு இச் சமூகம் அன்று பெற்றுக்கொடுத்த சுதந்திரம் இன்று அவர்களால் தவறான முறையில் பாவிக்கப்படுகிறதா?

இது பற்றி நான் சிறிய ஒரு ஆய்வு ஒன்றை செய்திருந்தேன். அதன் விளைவுகள் பற்றி இன்றைய பகிர்வு சுமந்து வருகிறது . அதாவது பெண்களிடம் இது பற்றி கேட்டதற்கு அவர்களில் 62%மானவர்கள் ஆம் என்ற பதிலையும், 24%மானவர்கள் இல்லை என்ற பதிலையும், குறிப்பிட்ட வேலை மிகுதி 14%மானவர்கள் பதில் கூறவில்லை. ஆண்களிடம் கேட்டதர்கினங்க 93%மானவர்கள் ஆம் என்று குறிப்பிட்ட வேலை 5%மானவர்கள் இல்லை என்று சொன்னதுடன் 2%மானவர்கள் பதில் கூறவில்லை.

இது அவர்களின் கருத்தாக அமைந்துள்ளது. இது பற்றி எமது கருத்து இவ்வாறு அமையப் போகிறது.

அதாவது எல்லா விடயத்திலும் 2 விடயங்கள் ஒன்றுக்கொன்று எதிராகவே அமைந்திருக்கும். உதாரணமாக உண்மை, பொய். சிறியது, பெரியது. ஆதி, அந்தம் என எல்லா விடயங்களிலும் 2 தன்மை காணப்படும். அது போன்றுதான் ஆண்களும், பெண்களும் ஒன்றுக்கொன்று எதிரானவர்கள். எனவே அடிபடையில் ஆணும் பெண்ணும் சமம் எனும் வாதம் தவறாகும். அதற்காக யாரும் உயர்ந்தவர்களும் கிடையாது. அதற்கிணங்க எது ஆணுக்கு பலமோ, அது பெண்ணுக்கு பலவீனமாகவும், எது பெண்ணுக்கு பலமோ, அது ஆணுக்கு பலவீனமாகவும் காணப்படுகிறது. இதுதான் இன்று இங்கு நடக்கும் பிரச்சினை.

அதாவது பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக புரிந்து கொண்டு, நாங்கள் ஆண்களை விட மேலானவர்கள். அல்லது தங்களால் மட்டும் எல்லாம் முடியும் என்று முணைந்து செயற்பட ஆரம்பிக்கும் நேரம், இயற்கை சமநிலையை இழந்து பாரிய பிரச்சினையை இச் சமூகம் எதிர்கொள்கிறது. இந்த இடத்தில் பெண்களும் ஆண்களும் சற்று உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் உங்களால் மட்டும் எல்லாம் முடியுமாக இருந்தால், இவ்வுலகில் இரு இனம் தேவை இல்லை. பெண்கள் மட்டும், அல்லது ஆண்கள் மட்டும் போதும். எனவே உலகம் இயங்க உங்கள் இருவருவரின் பங்களிப்பு தேவை. அதாவது பெண்கள் நீங்கள் உங்கள் வரம்பின் எல்லை எது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது செய்தியாக இருக்கிறது.

இன்றய கால கட்டத்தில் ஆண்களை விட அதிகமாக உள்ள நீங்கள் ஆண்களால் முடியுமான எல்லாம் என்னாலும் முடியும், என முனையும் போது ஏற்படும் பிரச்சினையை நீங்கள் அதிகமாகவே உணர்திருபீர்கள். பெண்களுக்கு இன்று பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு வாழ நினைத்தால் உங்கள் வாழ்க்கை மட்டும் அல்ல, இச் சமூகம் பாரிய பின்னடைவை எதிர் கொள்ளும் என்ற தகவலோடு, ஒரு பெண் விடும் தவறு ஒரு சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது? எனும் தகவலோடு எமது அடுத்த பகுதியில் சந்திபோம். (தொடரும்)

Post Comment

Friday, June 24, 2011

சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்?-II

(இதன் முதற் பகுதியை வாசிக்காத வாசகர்கள் இங்கு கிளிக் செய்யவும்)
பகுதி-I

அதன் பிறகு பெண்கள் இன்று எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு சவால் விடுக்கின்ற அளவுக்கு தங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர். இது வரவேற்கத்தக்க பாராட்டப்படக்கூடிய விடயம் தான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இந்தப் பெண் வளர வளர கூட பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன என்பது தான் நாம் இங்கு கவனிக்க வேண்டிய விடயம்.

அப்படி என்ன பிரச்சினைகள் என நீங்கள் என்னிடம் கேட்க முடியும் நான் வாழ்கையில் சந்தித்த சில அனுபவங்களை இங்கு சுட்டிக்காட்டவது பொருத்தம் என நினைக்கின்றேன்.

ஒரு கணவன் மனைவிக்கிடையில் நடந்த பிரச்சினை இது.

அதாவது அவர்களுக்குத் திருமணமாகி 1 வருடத்தின் பின் குழந்தை கிடைத்தது. அவர்கள் குடும்பத்தை விட்டுப்பிரிந்து வேறு ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் தவிர அவர்களுடன் யாரும் இல்லை இப்போது அக் குழந்தை. பிரச்சினை என்னவென்றால் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். இப்போது குழந்தையை பராமரிப்பது யார்? என்ற பிரச்சினை தோற்றமெடுக்கிறது. கணவன் சொன்னான், நான் மட்டும் வேலைக்குச் செல்கிறேன் நீ குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டில் இரு என்று. ஆனால் மனைவி அதை நிராகரித்தால். குழந்தையை, நாம் குழந்தை பராமரிக்கும் ஒரு இடத்தில் கொடுத்து விட்டு வேலைக்குச் செல்லாம் என்றால். கணவனுக்கு அதில் உடன்பாடு இல்லை. நீதான் குழந்தையை வளர்க்க வேண்டும் என்றான். பிரச்சினை தொடர்ந்தது. இன்று அவர்களின் முடிவு விவாகரத்து.

அந்த பெண்ணிடம், நான் இது பற்றி நேரடியாக பேசியதற்கு ஆண்கள் மட்டும்தானா வேலைக்குச் செல்ல வேண்டும்? பெண்கள் செல்லக் கூடாதா? பெண்கள் தான் குழந்தை வளர்க்க வேண்டும் என்று சட்டமா இருக்கிறது? என்றெல்லாம் நிறைய கேள்விகள். நீங்களே சொல்லுங்கள் இதற்கு நாம் என்ன செய்ய முடியும்.

பெண்கள் இவ்விடத்தில் சரியான அணுகுமுறையுடன் இவ்விடயத்தை நோக்க வேண்டும். அதாவது பெண் என்பவள்தான் 10மாதம் குழந்தையை சுமந்து பெற்றெடுக்க கூடியவளாக இருக்கின்றால். குழந்தைகளுக்கு உணவளிக்க கூடிய விடயங்களும் அவளையே சார்ந்து நிற்கின்றது.ஒரு ஆணின் குழந்தை வளர்ப்புக்கும் பெண்ணின் வளர்ப்புக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.(அம்மாவின் அன்புக்கு இணையாக இவ்வுலகில் எதுவுமே இல்லை என்பதும் நாம் அறிந்த விடயமே).

நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் இதை ஆண்களோ அல்லது இச் சமூகமோ பெண்கள் மீது திணிக்கவில்லை. இது இயற்கை நிர்ணயித்த ஒரு விடயம் ஆகவே குழந்தைப் பராமரிப்பு என்பது இயற்கையாகவே பெண்களால் மட்டுமே முடியுமான ஒரு விடயம். அதை வைத்து பெண்ணிலை வாதம் பேசுவது முறையான ஒரு விடயமல்ல. இது மிகப் பெரிய முட்டாள் தனமாகும். ஒரு உதாரணத்தையே என்னால் இங்கு சுட்டிக்காட்ட முடிந்தது. காரணம் நேரமின்மை.

பெண்களின் வெற்றிகளை கொண்டாடும் நாம் அவர்கள்விடும் தவறுகள் சம்மந்தமாகவும் பேச வேண்டியிருக்கிறது.

இவ்வாறான பல பிரச்சினைகள் எம்மத்தியில் பெண்ணிலை வாதம் என்ற பெயரில் தொடுக்கப்பட்டு அதன் மூலமாக பாரிய விளைவுகளை சந்தித்திருக்கின்றோம். எனவே இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது பெண்கள் அவர்களுக்கு கொடுக்கப்ட்ட சுதந்திரத்தை தவறான முறையில் புரிந்து கொண்டார்களா? என்று ஒரு கேள்வி எழுகிறது.

அதாவது பெண்களுக்கு இச் சமூகம் அன்று பெற்றுக்கொடுத்த சுதந்திரம் இன்று அவர்களால் தவறான முறையில் பாவிக்கப்படுகிறதா?

(தொடரும்...)

Post Comment

Thursday, June 23, 2011

சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்?-I

நம்முடைய வாழ்கையில் நாம் சந்திக்கின்ற விடயங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. எத்தனையோ பிரச்சினைகள் எத்தனையோ சந்தோசங்கள் என நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

பூமி என்ற கோளம் பலவகையான விடயங்களை அதற்குள் உள்ளடக்கியிருக்கிறது. எத்தனையோ அதிசயங்கள்,அபூர்வங்கள் எல்லாம் இந்தப் பூமிக்கு மேலும்/கீழும்,உள்ளேயும்/வெளியேயும் இருந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் இந்தப் பூமியின் மேல் வாழும் மனிதன்தான் இந்த பூமியின் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் காரணமானவனாக இருக்கிறான். பிரிக்கப்பட்டே எல்லாவிடயங்களும் இங்கு நோக்கப்படுவதால் நாமும் அதனுடன் ஒட்டி உறவாட வேண்டியுள்ளது. அதுதான் நிதர்சனமும். ஆகவே மனிதனை அடிப்படையாக 2 வகையாக பிரிக்கமுடியும். ஆண்கள்,பெண்கள் என்பதுதான் அவை.

இந்தக் கட்டுரையின் சாராம்சம் பெண்கள் பற்றியதாகவே அமையப் போகிறது. அதுவும் ஒரு வித்தியாசமான பார்வையை செலுத்தப் போகிறது. அதாவது பெண் என்பவள் இன்று அவளுடைய பாதையில் இருந்து விலகிச்செல்கிறால் எனும் ஒரு கருத்து நம்மிடையே நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது. இது என்னால் மட்டுமல்ல உங்களால் மட்டுமல்ல இன்று சர்வ சாதாரணமாக நாம் பாவிக்கும் வார்தைகளில் ஒன்றாகிப் போனது. இது பற்றிய ஒரு பார்வையை தான் நாம் இங்கு செலுத்த இருக்கின்றோம்.

ஆரம்ப கட்டங்களில் பெண் என்பவள் வீட்டுக்குள் அடங்கியிருக்கின்ற ஒரு பொருளாகவே அடையாளப்படுத்தப்பட்டாள். அவளுடைய சகல உரிமைகளும் மறுக்கப்ட்டு இந்த சமூகம் அவளை ஒரு அடிமையாகவே நடத்தியது என்றால் அது மிகையாகாது.

அதன் பிறகு பெண்களுக்கு அவர்களுடைய உரிமைகள் கொடுக்கப்பட்டு அவளும் இச் சமூகத்தில் ஒரு மனித இனமாக மதிக்கப்பட்டாள். அவளுடைய வாழ்கை முறை பற்றி குரல் கொடுக்காத சமூக அமைப்புக்களே இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு பெண்கள் உரிமைகள் பற்றி பல மேடைப் பேச்சுக்கள், விவாதங்கள், கருத்துக்கள், புத்தகங்கள் என ஒரு சமூகப் புரட்சியே நடந்தேறியது. ஏன் ஐ.நா சபை கூட பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளை தடுக்க சட்டங்களளை இயற்றி அவர்களுக்காக ஒரு அமைப்பையும் உருவாக்கியது.

அதன் பிறகு பெண்கள் இன்று எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு சவால் விடுக்கின்ற அளவுக்கு தங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர். இது வரவேற்கத்தக்க பாராட்டப்படக்கூடிய விடயம் தான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இந்தப் பெண் வளர வளர கூட பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன என்பது தான் நாம் இங்கு கவனிக்க வேண்டிய விடயம். (தொடரும்...)

Post Comment

Thursday, June 09, 2011

உன்னைக் காதலிப்பதால்....



அருக்கப்பட்ட தொப்புள் கொடிக்குள்ளயே
அடங்கிவிடுகிறதா தாயின் பாசம்?
மறக்கப்பட்ட உன் நினைவுக்குள்
மங்கிவிடுமா என் காதல்??

உருகி உருகி மெழுகாவேன்,
அதிலும் உனக்கே உயிராவேன்.
உனக்காய் நானும் இருளாவேன்,
அதல் நீ காணும் கனவும் நானாவேன்.

இன்று என் நினைவில்....
நீ சிரித்துச் செல்லும் நொடிகளில்
என்னை சீரழித்துச் செல்கிறாய்.
நீ உதிர்த்துச் செல்லும் மௌனங்களில்
ஆயிரம் கவி சொல்லிச் செல்கிறாய்.

நீ பிரிந்த நிமிடம் எனக்கு சுடவில்லை.
காரணம் நீ வாழ்ந்த நிமிடம் எனக்குள் குளிர்வதால்...
உன் நினைவுகள் இன்று எனக்கு கசப்பாயில்லை.
காரணம் இன்றும் அது அழகாய் இனிப்பதால்...

நான் உன்னை என்றும் வெறுக்கவில்லை.
காரணம் இன்றும் உன்னைக் காதலிப்பதால்...

நீ சொன்ன வார்த்தைதான் எனக்கு வாழ்வானது.
நீ தந்த காதல்தான் எனக்கு பலமானது.
நீ தந்த நினைவுகள் எனக்கு ஒளியானது.
நீ தந்த கண்ணீரே என்னுடைய கவியானது.

உன்னை நினைந்து எரிந்த இரவுகள் கடந்து,
இதமாய் உறங்கும் உறவுகள் தொடர்கின்றன.
இன்று என் கனவுக்குள் உன் அழகிய நினைவுகளே...

என்னை நேசிப்பதை நிறுத்திவிடு என்றாய்.
நிறுத்திவிட்டேன். நீ சொன்ன அடுத்த நொடியிலயே,
ஆனால் உனை தான் சுவாசமாய் சுவாசிக்கிறேன்
என் அடுத்த நொடியில் இருந்து...

நேசிப்பது மட்டுமல்ல,
சுவாசிப்பதும் காதல்தானே,
சொன்னவளும் நீதானே.

உன்னோடு வாழ்ந்த நான்,
உன்னை நினைத்து வாழப் பழகிக் கொண்டேன்.
காரணம் இன்றும் உன்னைக் காதலிப்தால்...
என் உயிருக்குள்ளும் நீ வாழ்வதால்...

Post Comment

Monday, May 23, 2011

அனுபவமே வாழ்கையா?

வாழ்கை விசித்திரமான ஒன்றுதான். யாராலும் அவ்வளவு சீக்கிரமாக இதை புரிந்து கொள்ள முடியாது. இதுவரைக்கும் எனக்கும் புரியவில்லை, ஆனால் புரிந்து கொள்ள முயற்சிகள் மட்டும் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படி நான் செய்த முயற்சியின் பலனாக ஒரு விடயத்தை நான் புரிந்து கொண்டேன்.

அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் எனது இக் கட்டுரையின் நோக்கம்.

பெரியவர்கள் சில நேரம் பேசிக் கேட்டிருப்பீர்கள்... அதாவது 'அவனுக்கு அனுபவம் போதாது, அதனால் அவன் செய்தால் சரியாக வராது' என்றெல்லாம் பேசுவார்கள். அப்பொழுது நாம் அதை பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் அதற்குள் தான் முழு வாழ்கையின் தத்துவமும் அடங்கியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஆமாம் ஒரு மனிதனை பூரணமாக்குவது அவன் பெற்றுக் கொள்ளும் அனுபவங்கள்தான். அது நல்லவிடயமாகவும் இருக்கலாம், அல்லது தீய விடயமாகவும் இருக்கலாம். வாழ்கை என்ற ஆசானை நாம் அடயாளம் காணவேண்டுமெனில் அனுபவம் என்ற பாடசாலைக்குள் நுழைய வேண்டியதாயிருக்கும். வாங்க கொஞ்ச நேரம் போயிட்டு வரலாம்.

அனுபவம்!!! இதற்குள் ஒழிந்திருப்பது மிகப் பெரிய அர்தங்கள்.

அனுபவம் என்றால் என்ன?

நமக்கு நடந்த விடயங்களை நாம் அனுபவம் என்று சொல்கின்றோம். அது உண்மைதான். இந்த அனுபவங்களில் பொய் என்று எதுவும் கிடையாது. காரணம் அனைத்துமே நடந்து முடிந்தவையாக இருக்கும். ஒரு விடயம் நடைபெற்று முடிந்தால் அதை யாரும் பொய் என்று சொல்ல முடியாது. இதை நான் இங்கு சொல்வதற்கு காரணம் சில பேர் சில விடயங்களுக்காக பொய்யான அனுபவங்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் எதை கூறுகிறார்கள் என்று பிறகு பார்ப்போம் ஆனால் அப்படி கூறுவது பொருத்தம் அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த அனுபவத்தை பொதுவாக இரண்டு வகைகளாக பிரிக்க முடியும்
1. நல்ல வகையான அனுவங்கள்.
2. தீய வகையான அனுபவங்கள்.

ஒரு மனிதன் அவனுடைய வாழ்கையில் இதில் இரண்டையும் பெறுபவனாகவே இருப்பான். இதனடிப்படையில் தான் இன்று உலகமே இயங்குகிறது. உதாரணமான கண்டுபிடிப்புகள், ஆராய்சிகள், மனித செயற்பாடுகள், அனைத்துக்கும் காரணகர்தாவாக இருப்பது அவன் பெறும் அனுபவங்கள் தான்.

ஒரு சராசரி மனிதன் நெருப்பை கண்டு அஞ்சுகிறான். காரணம் அவனுக்கோ அல்லது அவன் சார்ந்த யாருக்கோ அந்த நெருப்பு சுட்டு காயப்படுத்திய அனுபவம் இருக்கும். இது போன்றுதான் எல்லாமே.

இன்று உலகில் நடக்கின்ற பிரச்சினைகளுக்கோ அல்லது நல்ல விடயங்களுக்கோ எங்கோ ஒரு மூலையில் ஒரு அனுபவம் தான் காரணமாக இருக்கும்.

இன்று உலகில் நடக்கின்ற யுத்தங்களளை எடுத்துக் கொள்ளுங்கள் அந்த இரு தரப்பினரிடையும் ஏதோ ஒரு கசப்பான அனுபவம் இருக்கும்.

ஆனால் நாம் இங்கு நோக்க/கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் நாம் பெறும் நல்ல/தீய அனுபவங்கள் மற்றவரை எவ்வாறு பாதிக்கிறது அதை தடுக்க என்ன முறைகளை கையாளலாம் என்பது தான். உதாரணமாக என்னுடைய வாழ்வின் ஒரு சிறிய பகுதியை நான் இந்த அனுபவத்துடன் இணைக்கின்றேன்.

"என்னுடைய தந்தை சற்று கடினமானவர். அவருக்கு முன்னிலையில் நாம் எதுவும் அவரைவிட மிஞ்சி சொல்லிவிட முடியாது. ஆம் தன்நிலை சரிதான் என்று சொல்பவர். இவருடைய மகனாக பிறந்த எனக்கு இருக்கும் பிரச்சினைகளை உங்களால் ஊகிக்க முடியும் என்று நினைக்கிறேன். இவர் இவ்வாறு செயற்படுவதற்கு காரணம் என்ன? ஆம் நாம் மேற் சொன்னது போன்று அவர் அவருடைய வாழ்கையில் சந்தித்த அனுபவங்கள் தான். இதை அவரே பல தடவைகள் என்னிடம் கூறியுள்ளார். சின்ன வயதில்,படிக்க வேண்டிய வயதில்(8) குடும்ப சுமை காரணமாக (அவருடைய தந்தை இறந்து விட்டதால்) வேலைக்குச் சென்று இருக்கின்றார்.

அந்த நேரத்தில் அவர் பெற்ற அனுபவங்கள் மிகக் கடுமையானது. ஒரு அடிமை போன்ற வாழ்கை. எதுவும் எதிர்த்து பேசி விட முடியாது. தனக்கு மேல் இருக்கும் பணம்,பலம்,செல்வாக்கு படைத்த முதலாலிகளின் மனநிலை இவரையும் ஆட்கொள்கின்றது. அந்த நேரத்தில் சிறுவனாக இருந்தபடியால் அந்த தாக்கம் இவரை சற்று வெகுவாகவே பாதித்திருக்கும். அதாவது அடக்கி ஆழும் தன்மை. இது இன்னும் சற்று காலப் போக்கில் அவருடைய குணமாகவே மாறிவிடுகிறது.

பார்தீர்களா? இவருடைய வாழ்கையின் பாதையை மாற்றியது எது? இவர் பெற்ற அனுபவங்கள். அதனை அடிப்படையாக கொண்டுதான் இவர், இவர் சார்ந்தவர்களை வழிநடத்துவார். இது தான் இன்றய உலகில் நடந்து வரும் நிகழ்வுகள்.

இன்னும் உங்களுக்கு புரியவில்லை என்றால் மிகவும் சுலபமான ஒரு உதாரணம்.
படிக்காமல் இன்று வாழ்வில் கஷ்டப்படும் ஒரு வரித்திடத்தில் சென்று உங்கள் வாழ்கை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டால் அவர் கூரும் பதில் 'படிச்சு இருந்தா நான் இவ்வாறு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்' என்பதாக இருக்கும்.

படிச்சு முடிச்சு நல்ல வேளையில் இருந்தும் அவன் வாங்கும் சம்பளம் போதவில்லை என்பவனிடம் சென்றால் 'நான் படிச்ச காலத்துக்கு சொந்தமாக ஒரு தொழில் செஞ்சு இருந்த நல்லா இருந்திருக்கும்' அப்படின்னு சொல்வார்.

இப்போது நான் உங்களிடம் கேற்கிறேன் இதில் எது உண்மை? சொல்ல முடியுமா உங்களால்? இரண்டும் உண்மைதான் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்களை பொறுத்து.

இதுதான் வாழ்கை இந்த ஒரு சின்ன விஷயத்துலதான் முழுஉலகமும் இயங்குகிறது. நாம் நமக்கு கிடைக்கும் அனுபவங்களை வைத்தே மற்றவர்களை வழி நடத்துகின்றோம். இது சரியா? பிழையா? என்று கேட்டால் அது ஒரு புறம் இருக்க இதனால் ஏற்படும் விளைவுகளைப் பார்த்தால் அது எல்லோருடைய பார்வையிலும் சரி என்றுபடாது.

காரணம் இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகின்றது. உதாரணமாக என்னுடைய குழந்தையின் மீது, நான் பெற்ற அனுபவங்களை வைத்து அவனுடைய வாழ்கையை பற்றி தீர்மானமெடுக்க முடியாது. காரணம் நான் வாழ்ந்த காலத்தில் அவ்வாறான சூழ்நிலை, அது சரிதான் என்ற சமூக நியதி போன்றவைகள் என்னை கட்டுப்படுத்தியிருக்கலாம். இதை வைத்துக் கொண்டு என் பிள்ளைக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நான் முடிவெடுக்க முடியாது. மாற்றம் என்பது இன்னும் நடந்து கொண்டுதானே இருக்கிறது. என்னுடைய காலங்கள் மாறி இப்போ வித்தியாசமான ஒரு காலமாக இருக்கும்.

எனவே அனுபவங்களை வைத்து மட்டும் நாம் முடிவெடுத்துவிட முடியாது. இதை அனைவரும் புரிந்து கொண்டால் சகல பிரச்சினைகளுக்கும் இது ஒரு தீர்வாக இருக்கும். ஒரு முறை நடந்ததுதான் மறுமுறை நடக்கும் என்று வாழ்கை நமக்கு எதையும் கற்பித்து தரவில்லை. சில அனுபவசாலிகளே பல இடங்களிலே தோற்று விடுகிறார்கள்.

அனுபவம் என்பது வாழ்கைக்கு இன்றியமயாதவொன்று. ஆனால் அதை மட்டும் நம்மை சார்ந்தவர்களின் வாழ்வுபற்றியோ அல்லது நம் சமூகம் பற்றியோ முடிவெடுத்துவிட முடியாது.

அனுபவ அறிவுரை என்ற பெயரில் பூமிக்கு கிடைக்க வேண்டிய எத்தனையோ நல்ல விடயங்கள் இன்று அதற்குள் புதைக்கப்ட்டுக் கொண்டிருப்பதையும் நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அனுபவம் இல்லை என்பதற்காக எத்தனையோ இளைஞர், யுவதிகள் தொழில் வாய்பில்லாமல் சிரமப்படுவதையும் கண்டு கொண்டேயிருக்கிறோம்.

அது மட்டுமல்ல நாம் பெற்ற அனுபவங்களை மற்றவர்கள் மீது திணிக்க கூடாது. ஒரு பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் நாம் அவர்களுக்கு என்னுடைய வாழ்கையில் இப்படி நடந்தது என்று சொல்லலாம். 'அதை வைத்து நீயும் இவ்வாறு இரு உன்னுடைய வாழ்வும் நன்றாயிருக்கும் அல்லது இவ்வாறு நடக்காதே அது உன்னுடைய வாழ்கைக்கு ஒத்துவராது' என்றெல்லாம் நாம் அறிவுரை கூற முனைந்தால் சில வேளை நம்மால் அவனுடைய வாழ்கை கெட்டுப் போகவும் இடமுண்டு. அனுபவம் நமக்கு நம்முடைய வாழ்கையை இன்னும் சிறப்பாக்கி கொள்ள கிடைப்பது அது மற்றவர்களின் வாழ்கைக்கு எந்த வகையிலும் உதவ போவதில்லை. அவரவர் பெறும் அனுபவங்களே காலம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப் பெரும் பரிசாகும்.

இனிவரும் காலத்திலாவது அனுபவத்தை மட்டும் வாழ்கையாக்கி கொள்ளாமல் அனுபவங்களை ஒரு வழிகாட்டியாக மாற்றி வாழ முயற்சி செய்வோம் என்ற செய்தியோடு விடைபெறுகிறோம். இது எங்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் தான் இதை வாழ்த்தி வரவேற்பதா? இல்லை தர்கித்து தகர்பதா? இரண்டுக்கும் நாங்கள் தயார் நீங்கள்????

Post Comment

Wednesday, May 11, 2011

'இல்லாமல் நீ'



சுகங்கள் தொலைந்த நிமிடங்களை
சுகமாய் சுவாசிக்கிறேன்.
இரவுகளில் கசியும் கண்ணீரில்
என் இதயம் வாசிக்கிறேன்.

கவலையற்ற நிமிடங்கள் கடந்துவிட்டன,
சுவாசமும் தீயாய் எரிகின்றன,
விழிகளில் அருவிகள் வழிகின்றன,
என் இரவுகள் தனிமையில் விடிகின்றன.

உன் நினைவுகள் என்னை துளைக்கின்றன,
விழும் குருதியும் உன் பெயர் உரைகின்றன.
கனவுகள் கனவாகவே கலைகின்றன,
காலமும் வேகமாய் நகர்கின்றன.

உணரவில்லை என் காதலை நீ...
இனி உயிருமில்லை,
எனக்கு இல்லாமல் நீ.

இஷ்டம் போல் உன் சிறகை விரித்திடு பறவையே
நாம் பறக்க நீல வானம் இருக்குது பறவையே...
ஒழிக்காமல் உன் மழையை பொழிந்திடு மேகமே
உன்னை தாங்க இங்கு பூமி இருக்குது மேகமே...

மனம் விட்டு உன் மணத்தை வீசு மலரே
அதை வாழவைக்க தென்றல் உண்டு மலரே...
வாய்விட்டு ஒரு வார்தை சொல்லு பெண்ணே
உன்னை தாங்க என் கரங்கள் உண்டு பெண்ணே...

புரிந்து கொள்ளடி என்னை...
இல்லை,
புதைத்துக் கொல்லடி என்னை...

Post Comment

Sunday, May 01, 2011

அவன் இல்லையென்றால்



தரணியில் வீடுகள் எங்குமேயில்லை
வானமே கூரை, பூமியே வாசல்
ஏனெனில் அவனில்லை.

உடலை மறைக்க உடையில்லை
நிர்வாணமே நிதர்சனம்
ஏனெனில் அவனில்லை.

நடையைத் தவிர வேறு வழியில்லை
பயணம் பல மைல் தொலைவானாலும்
ஏனெனில் அவனில்லை.

புழுதி படிந்த மரங்கள்,
இலை மேல் அமரும் உணவுகள்,
காய்ந்து, நனைந்து கிடக்கும் கழிவுகள்,
ஏட்டுச் சுரக்காய் போன்ற பூமி,
ஏனெனில் அவனில்லை.

வாங்குபவன் இல்லை,
விற்பவன் இல்லை,
முதலாளிகள் யாருமில்லை,
காரணம் தொழிளாலியவனில்லை.

முயற்சிக்கே முகவரி கொடுத்தவன்
'அவன் இல்லையென்றால்'
என்ற என் கற்பனையின் கிருக்கலே அவை.

அசரவைக்கும் கடல் கூட
ஓயாமல் அலையடிக்க
இவனிடம் கற்றுக் கொண்டது போல்...
ஓயாத இவன் உழைப்பைக் கண்டு.

இயக்கமே உலகின் முதற்புள்ளி
அதையே இயக்கியவன் இவன்.

உலக இயக்கம்
சூரிய விடியலில் அல்ல.
இவன் கண்களின் விழிப்பில்,
கரங்களின் உழைப்பில்,
வியர்வையின் நீரில் தான்.

உலகத்தை இயக்குவதால் இவன் உழைப்பாளி.
அதை தன் தோலிலும் சுமப்பதால் தொழிளாலி.


இவ்வளவு செய்தும்
இவன் வாழ்கை மட்டும்
முன்னேறவில்லை.

முயற்சிக்கு முன்னுரிமையில்லை
இருந்திருந்தால் என்றோ முன்னேறியிருப்பான்.

அதிர்ஷ்டமும், பணமும்
இந்த உலகை ஆளும் வரை
இவன் வாழ்கை விடியப் போவதேயில்லை...

தொழிளாலர் தினம்
இதுவல்ல சரி...
என் தோழனின் தினம்!!!
இதுதான் சரி.

வாழ்த்துக்கள், ஊர்வலங்கள்,
மேடைப் பேச்சுக்கள், பரிசுகள்,
வழமைபோன்றே இன்று மட்டும்....

கொதிக்கும் மனதிடம் புத்தி சொல்கிறது
விடு; இன்றாவது அவனை கொண்டாடட்டும் உலகம்


தெரிந்த உண்மைக்குள்
மறைந்து கிடக்கும் புதிர் போல்,
முன்னேறும் உலகில்
இவன் மட்டும் முடங்கியே கிடக்கிறான்

நானும் வாழ்த்துகிறேன்
இனிமேலாவது
அவன் வாழ்கை மலர...

Post Comment

Tuesday, April 12, 2011

உணரவில்லை உன் காதலை...



கல்லரைக்குள் நான் இருந்து,
என் காதலியின் கரம் பிடித்த,
கணவனுக்காய் நான் எழுதும்,
காலம் கடந்த கடைசி மடல் இது.

என் உணர்வுகளை கவியாக்கி,
வரைகிறேன் ஒரு வாழ்த்து மடல்,
உங்கள் வாழ்கை மலர வாழ்த்துச் சொல்லி.

உணரவில்லை உன் காதலை
என்று சொன்னவளே!!!!!
நலமா நீ???
நான் நலம் இக் கல்லரைக்குள்
இன்றும் உன் அழகிய நினைவுகளுடன்....

என்னவளின் கரம் தொட்டவனே
என்ன தவம் செய்தாய் நீ???
எதற்காக உனக்கிந்த வரம்???
அழகுக்கே சவால் விடும் அழகியை
மணக்கும் பாக்கியம்!!!

60 மாதமாய் என்னால் முடியாத ஒன்று
உன்னால் எப்படி???
வியக்கிறேன் சில விநாடிகள்....

உன்னவள் பற்றி நானறிந்த சில நிஜங்கள்
உங்கள் வாழ்கைக்காக...

பௌர்ணமி இரவில்;
அவளைத் தனிமையில் விடு,
அவள் தோழி நிலவோடு.
தனிமையில் இருக்க பிடிக்கும் அவளுக்கு.

பசிதாங்கமாட்டாள், பசிக்கவிடாதே;
என் காதலியை, மன்னித்துவிடு உன் மனைவியை.
பாவம் பதறிவிடுவாள்.
பசியிலும் நான் இப்போது சொன்ன வரியிலும்.

அநாதையான பூக்கள் பிடிக்கும் அவளுக்கு.
புரியவில்லையா? உதிர்ந்த பூக்கள்.
முடிந்தால் எடுத்துக் கொடு.
மலருக்கும் உனக்கும் மாறி மாறி முத்தம் கிடைக்கும்.

மனிதம் மரணிக்க காரணமான
பணம் பிடிக்காது அவளுக்கு.
அதன் பெருமைகள்,அருமைகள் பற்றி
அவளிடம் மூச்சும் விடாதே.

கனவுகள் பிடிக்கும் அவளுக்கு,
சற்று அதிக நேரம் தூங்க விடு.

பொய் சொல்வது பிடிக்காது அவளுக்கு,
அவளிடம் மட்டும் உண்மையைச் சொல்லி விடு.

மழையோடு நனைய மிகப் பிடிக்கும் அவளுக்கு,
அதில் குளிக்க அவளுக்கு அனுமதி கொடு.

ஆண்களின் ஆதிக்கம் பிடிக்காது அவளுக்கு,
அன்போடு நடந்து கொள் அவளிடம்.

வைரமுத்துவின் வரி பிடிக்கும்,
மழழையின் குரல் பிடிக்கும்,
நட்சத்திரக் குவியல் பிடிக்கும்,
நண்பனாய் என்னை மிகவும் பிடிக்கும்.

கருப்பு மேகம் பிடிக்காது,
சோகம் சுத்தமாய் பிடிக்காது,
நான் காதல் சொன்ன நாளில் இருந்து,
என்னைப் பிடிக்கவே பிடிக்காது அவளுக்கு.

நீரில்லாமல் மீனில்லை.
அவள் இல்லாமல் நான் இல்லை.

கும்மிடப் போனவனுக்கு, குறுக்கே வந்த தெய்வம் போன்று
சாவைத் தேடியவனுக்கு, சாவே தேடி வந்தது.

முடிந்த என் வாழ்கையில்,
முளைத்தது உங்கள் வாழ்கை.

என் காதலியின் காதலனே,
என்னவள் பத்திரம்.
கவனமாய் பார்த்துக் கொள்,
கண்ணியமாய் நடந்து கொள்.

இனிமையான அவளோடு,
இனிதே தொடங்கட்டும் உன் வாழ்கை.

என்னைப் பற்றி கவலை வேண்டாம்.
என் மௌனத்தின் சப்தம் கூட எட்டாது,
உங்கள் காதுகளுக்கு.

காற்றுக்கும் வழியில்லை,
என் உணர்வை உங்களிடம் சொல்ல.
அதனால் தான் இந்நக் கவிஞனின்
எழுத்தில்....

Post Comment

Saturday, March 19, 2011

இது ஒரு போதைதான்.....!!!




அற்புத நீரோட்டம்,
மாலையின் மங்காத மஞ்சல்,
மங்கயே மயங்கும் அழகின் தோற்றம்,
மயங்கிய என் இரு விழிகள்.

இயற்கையின் வனப்புக்குள் நான்,
அவ்விடத்தை விட்டு அகலவே முடியவில்லை.
மாலைத் தென்றல் அள்ளி சொறிந்தது;
அந்த அற்றின் அமுத நீரை.

ஒரு கனம் கண் மூடி மறுகனம் திறக்க,
ஆற்றில் இருந்த நானோ!!!!
அபூதாபியில் என் அறையில்????

புரிந்து கொண்டேன்!!!
என் கண்கள் கட்டுண்டு கிடந்தது,
கனவுக்குள் என்று.

ஆம் என் கிராமத்தின்
மாலைக் காட்சிகள் அவை.
என் விடியலின் காலைக் காட்சிகளாய்,
தினமும் என் கனவுக்குள்.

விழிக்கவே பிடிக்கவில்லை,
தொடர்ந்து உறங்கவும் தெரியவில்லை....

சுகமான சுமைகளை சுமந்து கொண்டு,
சுகங்களை தொலைத்து விட்டு,
வந்திருக்கிறேன் வாழ்வின் சுவை தேடி.

வழிப்போக்கனுக்கு நிழல் தரும் மரமாய் நான்.
மரத்தை நம்பி வரும் வழிப்போக்கனாய் என்குடும்பம்.

பாசம், நேசம், காதல், அன்பு, நட்பு,
எல்லாம் காதால் கேட்டு,
கண்களால் பார்த்து,
வாயால் பேசிக் கழியும், பொழுது போக்காகிப்போனது.
பக்கத்தில் இருந்து உணர, பழகியவர் யாரும் இல்லை.

என் மண் வாசனைக்கே மதிப்பாகாது இவர்களின் திர்கம்.
என் மக்களின் இயல்புக்கு ஈடாகாது இந்த பணம்.

வந்து விடவா? என்று கேட்டால்,
அம்மா- "உடனே வா"- அன்பு.
அப்பா- "யோசித்து நடந்து கொள்"- அறிவு
மனைவி- "ஏன் அவிசரப்பரீங்க???"- தேவை
குழந்தை- "என்ன வாங்கி வருவீங்க அப்பா???"- எதிர்பார்ப்பு
நண்பன்- "அப்ப எதுக்குடா போனாய்???"- நகைப்பு
என் மனம்- "ஏன் யோசிக்கிறாய்???"- தவிப்பு

உயிரோட்டமான உணர்வுகள் கூட
உணரவில்லை என் வலியை.
உறவுகள் உணர்வது
எங்கனம்?????

கண்ட கனவினை சொல்வதற்கு கூட
தனிமையில் இடம் இல்லை.
என் முகம் காட்டும் கண்ணாடி கூட
பல வேளை அழுகிறது,
என் அவல நிலை பார்த்து.

பாலைவன மணல் சுழழுக்கு
ஈடு கொடுக்கும் என்
மனச் சுழல்.

அடிமை வாழ்கை;
ஒரு முறை வெளி நாடு என்று
உச்சரித்து விட்டால் மீளவே முடியாது போல்,
"இது ஒரு போதைதான்".

தனிமை தந்த பயம்,
தவறுக்காய் வருந்தும் நிமிடம்,
இவைகளில் தளரும் மனதில்
நம்பிக்கை தரும் ஆறுதலோடு
சுழள்கிறது என் வாழ்கைச் சக்கரம்.

Post Comment

Friday, February 25, 2011

இணைந்த இமயங்கள்!

நன்றி:தமிழ் சீ.என்.என்



மொபைல் போன் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இயங்கும் நோக்கியா நிறுவனமும், கம்ப்யூட்டர் உலகில் தனக்கிணை தானே என வலம் வரும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் அண்மையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

இதன்படி நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களில் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும்.

இதன் பிங் சர்ச் இஞ்சின் நோக்கியாவின் மொபைல் தேடுதளமாக இயங்கும். அதே போல நோக்கியா மேப்ஸ் சேவையை மைக்ரோசாப்ட் பயன்படுத்தும். 20 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் நோக்கியா ஸ்மார்ட் போன்கள் உலகில் பயன்படுத்தப்படுகின்றன.

அதிகமான எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் நிறுவனமாக, நோக்கியா இடம் பெற்றுள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களும் புதிய இலக்குகளில் வெற்றிகளைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

ஒரு புதிய மொபைல் இயங்கு சூழ்நிலையை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்த இருக்கிறது. தற்போது நோக்கியா போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிம்பியன் மற்றும் மீகோ படிப்படியாகக் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் நமக்கு என்ன வசதிகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

1.எளிய வேகமான பயன்பாடு: பல அப்ளிகேஷன்கள் சிம்பியன் சிஸ்டத்தில் இயங்குவதை நாம் அனுபவித்து வருகிறோம். இவை விட்ஜெட் (Widget) என அழைக்கப் படுகின்றன.

விண்டோஸ் மொபைல் இயக்கத்தில் உள்ள இந்த விட்ஜெட்டுகள், இன்ஸ்டால் செய்வதற்கும் இயக்குவதற்கும் எளிதானவை. இதனால் பயனாளர்கள் நிச்சயம் மற்றவற்றைக் காட்டிலும் இவற்றை அதிகம் விரும்புவார்கள்.

2. கேம்ஸ்: மொபைல் போனை விளையாட்டிற்கெனப் பயன்படுத்துபவர்களுக்கு, விண்டோஸ் மொபைல் போன் அதிக உற்சாகம் தரும் சாதனமாக இருக்கும்.

3. ஆபீஸ் டாகுமெண்ட்ஸ்: ஆபீஸ் அப்ளிகேஷன் எனக் கொண்டு வந்து, கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும், நம் அன்றாட வாழ்க்கை முறையிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்புகளாகும்.

எனவே இன்றைய கம்ப்யூட்டராக மாறிவரும் ஸ்மார்ட் போன்களில், விண்டோஸ் மொபைல் மூலம் இவற்றைப் பெற்றுப் பயன்படுத்துவதனை அனைவரும் விரும்புவார்கள்.

மைக்ரோசாப்ட் வேர்ட், பவர்பாய்ண்ட், எக்ஸெல் மற்றும் ஒன் நோட் ஆகிய அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு, நோக்கியா போன்களில் இனி இடம் பிடிக்கும். டாகுமெண்ட்களைப் படிப்பதற்கும், தயாரிப்பதற்கும் மற்றும் மற்றவர்களுக்கு அனுப்புவதற்கும் யார் தான் ஆபீஸ் அப்ளிகேஷனை வேண்டாம் என்று சொல்வார்கள்!

4. மியூசிக்: ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளைத் தருவதில் மைக்ரோசாப்ட் தரும் தொழில் நுட்ப வசதிகளை எல்லாரும் அறிந்திருக்கிறோம். எனவே இந்த வகையிலும் விண்டோஸ் மொபைல் முதல் இடத்தைப் பெறும்.

5. இமெயில் பயன்பாடு: மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் சர்வர் மூலம் தங்கள் இமெயில் பரிமாற்றங்களை மேற்கொள்பவர் களுக்கு, விண்டோஸ் மொபைல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

6. இன்ஸ்டன்ட் மெசேஜ்: உடனடி செய்தி அனுப்பி பெறுதல், கான்பரன்ஸ் பயன்பாடு ஆகியவற்றிற்கு ஆபீஸ் கம்யூனிகேட்டர் மொபைல் கை கொடுக்கும்.

7. உலக மொழிகள் பயன்பாடு: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அனைத்து மொழிகளின் பயன்பாடு எளிதானதாக உள்ளது. இது தற்போது நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களுக்கும் நீட்டிக்கப்படும்.

8. இதர வசதிகள்: நோக்கியாவின் மேப்ஸ் இனி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேப்பிங் சர்வீசஸ் பிரிவின் ஓர் அங்கமாக இருக்கும். இது பிங் சர்ச் இஞ்சினில் இணைக்கப்படும். நோக்கியா தன் மொபைல்போன் மூலம், விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு கட்டணம் செலுத்தும் நெட்வொர்க் ஒன்றை இயக்கி வருகிறது.

இனி இதன் மூலம் விண்டோஸ் மொபைல் கட்டண வசதிகள் விற்பனை செய்யப்படுவது எளிதாகும். ஸ்மார்ட் போன்களுடன் மற்ற வகை போன்களைக் கணக்கிட்டால், தற்போது மற்ற வகை போன்களே அதிகம் புழக்கத்தில் உள்ளன.

உலக அளவில் சென்ற ஆண்டு இறுதியில் 48 கோடி ஸ்மார்ட் போன்களும், 330 கோடி மற்ற வகை போன்களும் இருந்தன. ஆனால் விண்டோஸ் போன்ற கூடுதல் வசதி உள்ள ஸ்மார்ட் போன்கள் வருகையில், வரும் 2015 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை 140 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மற்ற வகை போன்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மைக்ரோசாப்ட் வழங்கும் விண்டோஸ் மொபைல், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிளின் ஐபோன் சிஸ்டங்களுக்கு நல்ல போட்டியாக இருப்பதால், ஏற்கனவே எச்.டி.சி., சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் விண்டோஸ் போன் 7 சிஸ்டத்தில் இயங்கும் போன்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளன.

இப்போது நோக்கியாவும் இந்த வரிசையில் பெரிய அளவில் சேர்ந்துள்ளது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் மோட்டாரோலா நிறுவனத்துடன் இதே போன்ற ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. ஆனால் அது வெற்றிகரமாகத் தொடரவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இனி மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டங் களுக்கிடையே நடக்கும் பந்தயத்தில் ஆண்ட்ராய்ட், ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் மொபைல் 7 ஆகிய குதிரைகளே ஓடும். எது வெற்றி பெறுகிறது என்பது சில மாதங்களில் தெரிந்துவிடும்.

Post Comment

Thursday, February 24, 2011

"படிப்பினை கொண்டு....."



மனித மாமிசங்கள் விலையாய்க் கொடுத்து,
பதவி வாங்கும் காலம் இது!
இருளுக்குள் இருக்கும் உலகின்,
இறுதி நேரம் இது!

அடக்குமுறை, ஜனநாயகம் அனைத்திலும்
நீதி பறிபோன காலம் இது.
நீதி கேட்பவருக்கெல்லாம்,
நிதி பதில் சொல்லும் நேரம் இது.

வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன,
வான் பொழியும் அடை மழை போன்று...
நல்ல மாற்றங்கள் நடக்கின்றன,
பாலைவன நிழல் மரம் போன்று....

ஏமாற்றியே பலகி விட்டான் பதவி உள்ளவன்.
ஏமாந்தே நொந்து போனான் அதைக் கொடுத்தவன்.
உண்மையைச் சொல்ல எவருமில்லை.
சொன்னவன் இன்று உயிரோடும் இல்லை.

காகிதத்தில் கவி எழுதி பலனுமில்லை.
அதை வாசிப்பவர் உள்ளம் யோசிப்பதில்லை.
இருந்தும் எனக்கு வேறு வழியில்லை.

அடுத்தவனின் அவமானம்,- இன்று
அன்றாட அரசியலாகி விட்டது.
இதை பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பது
தவிர்க்க முடியா பொழுதுபோக்காகி விட்டது.

உலகமே;
இன்று பல நாடுகளாய்,
நாடுகள் எல்லாம் பல ஊர்களாய்,
உணர்வுகள்;
இன்று பல மொழிகளாய்,
மொழிகள் எல்லாம் மதங்களாய்,
பிரிந்தே இருக்கிறதே தவிர,
எதிலுமே இணையவில்லை.

ஒற்றுமையை பற்றி,
ஒரு வரி பேசவில்லை நாம்.
பிரிவினை பற்றி மட்டும்,
பலவாறாக பேசி விட்டோம்.

நல்ல திட்டங்கள் பற்றி பேசவில்லை நாம்.
மற்றவன் கருத்தில் குறை மட்டும்,
கூடுதலாய் பேசுகின்றோம்.

குறை மட்டுமே நம் இருவரினதும்
குறிக்கோளாகிப் போனது.

குறை இல்லாதவன் உலகில் இல்லை,
ஆனால் குறை மட்டுமே வாழ்வும் இல்லை.
சற்று சிந்திப்போம் சில நிமிடம்,-அதனால்
வரும் காலத்தில் நற் காற்றை சுவாசிப்போம்.

மற்றவன் குறை தேடும் முன்,
நாம் எதை நிறைவு செய்தோம்??????
என்று யோசிப்போம்.

பலவாறாக பிரிந்து விட்ட நாம்,
மனிதர்கள் எனும் அடிப்படையில்
ஒன்றுபடுவோம்.
நம்மை விட தாழ்ந்த
மிருகங்களை பார்த்தாவது
"படிப்பினை கொண்டு....."

Post Comment

Monday, February 14, 2011

காதலியுங்கள்......



வர்ணங்களின் வடிவால் ஈரக்கப்படும்
கைக்குழந்தைப் போல,
வாழ்வின் வண்ணங்களில் ஒன்றான
காதலால் கவரப்பட்ட
இளம் குழந்தைகள் ஆயிரம்.

வெற்றி,தோல்வி இரண்டிலும் தான் உலகமே.
காதல் மட்டும் என்ன விதி விலக்கா?
எத்தனை தடை இந்தக் காதலில்?
எத்தனை நிலை இந்தக் காதலில்?

கடந்த நாட்களின் நினைவுகள்,
வரும் காலத்தின் கனவுகள்,
இவை உருவாக்கப் போகும் விளைவுகள்,
இது தான் காதலர் தினம்.

கண்களால் மட்டும்
ஜாடைக் கவிபாடியவர்கள் எல்லாம்,
தமக்குத் தாமே இட்டிருந்த
தயக்கச் சிறையை தகர்க்க,
காலம் இயற்றிய ஒரு கருணைத் தினம்.

ஓராண்டை ஒரு தலைக் காதலுடன்
நடமாடிய ஒரு கூட்டமே,
துனைக்கு கையில் ரோஜாவை
ஏந்திக் கொண்டு,
காதல் பிச்சைக்காய் காத்திருக்கும்
பதட்டனமான ஒரு தினம்.

கரம் பிடித்த காதலர்கள் எல்லாம்,
கவலைகள் மறந்து குதூகலமாய்
கொண்டாடி மகிழ,
காலம் கொடுத்த கா(த)வலர் தினம்.

மனமோடு மனம் உறவாடி,
மனமேடையில் கைகள் உறவாடி,
இணைந்திட்ட காதலர்களுக்கு,
இது ஒரு அழகிய சந்தோச தினம்.

வாழ்கையை நேசிக்க மறந்து,
காதலை மட்டும் சுவாசிக்கும்
சில காதல் பித்தர்களுக்கு,
இது தான் பிறந்த தினம்.

காதலால் இணைந்து பிரிந்து,
மீண்டும் இணைய துடிக்கும்,
அனுபவ காதலர்களுக்கு
இது ஒரு பரிதாப எதிர்பார்ப்பு தினம்.

சூழ் நிலையால் துடி துடிக்க,
படு கொலை செய்யப்பட்ட
காதல் கொண்ட இதயங்கள்,
கண்ணீரால் கரையும் ஒரு துக்க தினம்.

உடல்கள் தான் பிரிந்தது,
உணர்வுகள் அல்ல என்று
உயிர் வாழும் சில உறவுகளுக்கு,
இது ஒரு அவஸ்தயான வசந்த தினம்.

காதல் தந்த வலியால் வாழமுடியாமல்,
கல்லரைக்குள் இருந்து கவிவடிக்கும்
காதல் காவியங்களுக்கு, அவர்களின்
அனுபவ நினைவு தினம்.

காதல் என்ற பெயரில் ஏமாற்றம் வாங்கி
கண்ணீரில் கவி படிப்போருக்கு,
அவர்களின் நினைவுகளை,
காற்றும் சுமக்கும் ஒரு ஆறுதல் தினம்.

வெற்றியோ,தோல்வியோ காதலியுங்கள்.
காதலை மட்டுமல்ல கொஞ்சம் வாழ்வையும்,
என்ற செய்தியோடு கவிப்பிரியன்.

Post Comment

Sunday, February 06, 2011

நீண்டதொரு பயணம்.



பனி விழும் இரவு,
மேகமெனும் ஆடை உடுத்திருந்தால் நிலவு,
நீண்டதொரு பயணம்.
மனதில் அவள் நினைவுகளுடன்....


பேரூந்தின் ஜன்னல் திறந்தேன்.
முகத்தை வருடியது சில்லென்ற பனிக் காற்று.
கண்களை மூடிக் கொண்டேன்,
கனவில் அவளோடு கைகோர்த்தவனாக....


பேரூந்து முன்நோக்கி நகர,
கனவோடு நிஜம் சற்றுக் கலக்க,
நகர்ந்தது என் நினைவுகள்,
வாழ்வின் மூன்றாண்டு பின்நோக்கி.


ஒரு இதமான மாலை நேரம்,
சூரியன் மறைந்து விட்ட சோகத்தில் அழத் தொடங்கியிருந்தது வானம்,
கடைத்தெருவில் ஒதுங்கிய கூட்டத்தோடு...
நானும் இணைந்தேன்.


"கொஞ்சம் வழிவிடுங்க" என்றது
ஒரு கெஞ்சும் இசைக் குரல்...
இல்லை இதமான புல்லாங்குழல்.


பெய்யும் மழையுடன் பூமிக்கு
வந்துவிட்டாளா நிலவு???????
என்று தோன்றியது,
அவள் முகம் பார்க்க.


அழகே அதிசயப்படும் அழகு அவள்.
ஆயிரம் வருடமாவது சென்றிருக்கும்,
பிரம்மனுக்கு இவளை சீராக செதுக்க.


என் அதிர்சியை சற்று அசைத்தது,
மின்னலுடன் ஒரு இடி....
இல்லையென்றான் இன்றும் அவ் விடத்தில்
நான் சிலைதான்.


அன்றே முடிவெடுத்து விட்டேன்.
இவளைப் பிடிக்கவே என் கரம்,
இவள்தான் எனக்கு கிடைத்த வரம்.


அடுத்த நொடியிலயே சொன்னேன் என் காதலை.
6 திங்கள் கழித்து அனுமதி கொடுத்தால்,
அவள் கரம் பிடிக்க...


சில காலம் போயிற்று,
என் நிலவின் முகம் பார்த்து.
வாழ்கை போராட்டத்தில் நாடு கடந்து
உழைக்க வேண்டும்,
அது என் விதி.


இரு வருடம் கடந்து,
இன்று திரும்புகிறேன்.
பூமிக்கு வந்த நிலவை பார்க்க.


"ரீங்" "ரீங்" என் கனவை கலைத்தது,
என் தொ(ல்)லைபேசி.
"ஹலோ" ஓ..ஓ..ஓ...ஓ.... அது.. அது...
மீண்டும் அந்த புல்லாங்குழல்.


வாய் அவள் நாமம் உச்சரிக்க,
காதுக்குள் அவள் குரல்,
கண்ணுக்குள் அவள் முகம்,
மனதுக்குள் ஒரு வசந்தம்,
தொடர்கிறது என் நீண்ட பயணம்.........

Post Comment

Tuesday, January 18, 2011

உன்னிலும் மாற்றமில்லையோ??????



"யார் பிரிந்த துயரமிது?
இப்படியழுகிறது இந்த வானம்"
வினவினேன், மேகத்தில் இருந்து
விடைபெற்று வந்த மழைத்துளியடம்.

"பூமாதேவியின் அசுத்தம் துடைக்க
அனுப்பியிருக்கிறது எங்களை மேகம்"
என்று சொல்லி கண்சிமிட்டிப் புதைந்தது,
பூமிக்குள் அச் சிறு மழைத்துளி.

அடுத்து வந்த துளியிடம் வினவினேன்
"அசுத்தமா? என்ன அது?"
வந்த ஒவ்வொரு துளிகளும், ஒவ்வொன்றாய்
சொல்லிச் சொல்லி பூமிக்குள் ஒழிந்து கொண்டன.

"போரால் படிந்த இரத்தம் கழுவ,
வேற்றுமையை மறக்கடிக்க,
உதவாக்கரங்களையும் உசுப்பிவிட,
ஊமையான மனிதத்தை பேசவைக்க,

மறந்த இறைவனை நினைவில்வைக்க,
மனிதனை புனிதனாக மாற்றியமைக்க,
பசியின் கொடூரத்தைப் பகிர்ந்தளிக்க,
வாழ்வியலின் யதார்தத்தை புரிய வைக்க".

துளிகள் சொன்ன செய்தியை கேட்டுக் கொண்டே,
அவைகளோடு நானும் காய்ந்தேன்.
என்னில் இருக்கும் அசுத்தம் கழுவ,
நனைந்தவர்களின் கண்கள் ஈரமும் காய.

துளிகள் ஓய்ந்தது.
தொலைத்த இன்பங்கள் எங்கிருந்தோ ஒட்டிக் கொண்டது.
கண்களில் ஈரமும் வற்றியது.
தேகத்துடன் மனமும் இணைந்து வெயிலில் நனைந்தது.

இருந்தும்,
துளிகள் சொன்ன எதுவும் நடக்கவில்லை.
பூமியிலும் நடக்கவில்லை,
என்னிலும் நடக்கவில்லை.

துளியாய் நான் மாறி மேகத்திடம் கேட்க வேண்டும்!
"இந்த மாறாத மனிதனுக்காக,
வீணாக உன் (இரத்த) துளிகளை இழக்கிறாயே.....
தியாகத்தின் முழு வடிவம் நீதானோ?

நீயும் அவனைப் போன்றுதானா?
உன்னிலும் மாற்றம் இல்லையோ?"......

Post Comment

Tuesday, January 04, 2011

பிறக்கவில்லை புது வருடம்!!!



"பிறக்கவில்லை புது வருடம்",
எதுவும் மாறவில்லை,
அதுதான் காரணம்.

வானில் வேட்டு வேடிக்கை,
வாழ்வில் சோக வாசனை,
இது புது வருடம் அல்ல,
நேற்றய வருடங்களின் தொடர்சி.

பசி தீரவில்லை,
பஞ்சம் அகலவில்லை,
கண்ணீர் குறையவில்லை,
அகதிகள் அழியவில்லை,
வாழ்வில் பசுமையில்லை,
வாழவும் தெரியவில்லை,
மனிதரில் மனிதம் இல்லை,
மன்னிக்கத் தெரியவில்லை,

தாயின் பாசத்திலும் ஒரு கலக்கம்,
தந்தையின் அரவணைப்பிலும் ஒரு குழப்பம்,
பிள்ளையின் ஆதரவிலும் சில திருத்தம்,
கணவனின் காதலிலும் ஒரு காயம்,
மனைவியின் நேசத்திலும் ஒரு மாயம்,
நண்பனின் நட்பிலும் சில நடுக்கம்,
சொந்தங்களின் அன்பிலும் ஒரு சோகம்,
ஆகவே புது வருடம் இன்னும் பிறக்கவில்லை.

சமாதனம் மலர வேண்டும்,
சமத்துவம் ஓங்க வேண்டும்,
வசந்தம் வருட வேண்டும்,
பசுமையோடு உறங்க வேண்டும்.

செல்வம் பெருக வேண்டும்,
மகிழ்ச்சி தொடர வேண்டும்,
விவசாயம் செழிக்க வேண்டும்,
விஞ்ஞானம் வளர வேண்டும்.

பணம் பறிபோக வேண்டும்,
பண்டமாற்று மீண்டும் அறிமுகமாக வேண்டும்,
யாவரும் உழைக்க வேண்டும்,
எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

மழழைச் சிரிப்பொலி கேட்க வேண்டும்,
குழந்தை போல் நாமும் மாற வேண்டும்,
சொந்தங்கள் இணைய வேண்டும்,
சுகங்கள் தொடர வேண்டும்.

புது யுகம் மலர வேண்டும்,
பூமி பூமாலை அணிய வேண்டும்,
இப்படியொரு புது வருடம் பிறக்க வேண்டும்,
நானும் அதை ரசிக்க வேண்டும்.

எதிர்பார்க்கிறேன் ஆவலாய்.....
கற்பனை அடுத்த ஆண்டில் நிஜமாகும்,
என்ற நம்பிக்கையில்....

Post Comment