Tuesday, August 10, 2010

கதவடியில் காதல் கடிதம்....




அழகும் அமைதியும் நிறைந்த பூங்காவனம்
கண்டவுடன் துரத்தினேன் என் காதல் உரைக்க
ஒரு நொடி மின்னல் போல் ஒளிந்து கொண்டாய் நீ

சாக்கடையும் புழுதியும் நிறைந்த சாலை
மறுபடி காட்சியளித்தாய் என் கண்களுக்கு
நான் உன்னைச் சேரும் முன் நீ சேர்ந்தாய் உன் வீட்டோடு
ஏமாற்றம் ஒன்றும் புதிதில்லை எனக்கு

பிறகு பார்க்கவில்லை உன்னை நான்
உன் விலாசம் அறிந்து எழுதினேன் உனக்கோர் கடிதம்
நீ அந்த வீட்டை காழி செய்தது தெரியாமல்

வீடு பூட்டியிருக்க தபால்காரன் கதவருகில் கடிதத்தை விட
என் காதல் கடிதமாய் கதவருகில்.....
நானோ உன்னைத் தினம் தேடி வீதிகளில்.....


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment