மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மட்டு. சிறைச்சாலை அத்தியட்சகர் ஏ. கீத் சிறிபண்டார தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு நோன்பு நோற்பதற்கும் நோன்பு திறப்பதற்கும் தொழுகையில் ஈடுபடுவதற்குமான விசேட ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் இது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குவர் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment