Thursday, August 05, 2010

மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மரடோனா பொறுப்பில் நீக்கம்

Virakesari.


மீண்டும் ஆஜர்டினா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மரடோனா பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தன்னுடன் இணைந்து செயல்பட்ட உதவி பயிற்சி பணியாளர்களை மாற்றக்கூடாது என்று மரடோனா விதித்த நிபந்தனையை அஜர்டின உதைப்பந்தாட்ட சங்கம் ஏற்க மறுத்துள்ளது.

இது வரைக்காலமும் உதைப்பந்தாட்ட உலகில் வலுவான அணியாக கருதப்பட்ட அர்ஜென்டினா அணி கால் இறுதியில் 0-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மரடோனா:

`ஆஜண்டினா கால்பந்து சங்க தலைவர் ஜுலியோ கிரான்டோனா என்னை ஏமாற்றி விட்டாட் எனக்கு அனைவரும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர். கால் இறுதியில் நாங்கள் தோல்வி அடைந்ததும், என்னிடம் பேசிய கிரான்டோனா நான் சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும், என்னை பயிற்சியாளரக தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அனைவரும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். , , ,


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment