Thursday, August 05, 2010

நான் உன்னை மறந்து விட்டேன்....




உன்னை கரம் பிடித்து நடைபயின்று
கடற்கரை மணலில் ஒட்டி உராசி கதைபயின்று
பூங்காவனத்தில் கட்டித்தழுவி முத்தமழையில் கலைபயின்று
இரவில் காமத்தீயில் தனியாய் சிக்குண்டநாட்கள்

காவியக் காதல் நம் காதல் என நினைத்து
திருக்குறல் செந்தமிழ்த் திருடி எடுத்து
உனக்கே உனக்காய் ஒரு கவி வடித்து
பாடசாலைப் பரீட்சையை தவற விட்ட நாட்கள்

நலமற்று வைத்தியசாலையில் நீயிருக்க
செய்தி அறிந்து நடைபினமாய் நானிருக்க
நாதியற்ற என் வாழ்வில் நான் வேலை இழக்க
நண்பர்கள் என்னை திட்டிய நாட்கள்

ஒழிந்து நாம் சாப்பிட்ட ஹோட்டல்கள்
மறைந்து நாம் படம் பார்த்த திரைப்படசாலைகள்
மோட்டார் வண்டியில் நாம் சுற்றிய வீதிகள்
மழையோடு நாம் நனைந்த நாட்கள்

இவையாவும் எனக்கு நினைவிருக்க
நீ மடடும் மறந்து போனாய் என் நினைவுப் பதிவில் இருந்து
"நான் உன்னை மறந்து விட்டேன்" என்று
என்னிடம் நீ சொன்னதால்.......


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

1 comment:

  1. ரொம்ப நல்ல இருக்கு,
    இப்படிக்கு
    திரு

    ReplyDelete