Saturday, November 26, 2011

இதமாய் ஓர் ராகம்!


அமைதியைத் தத்தெடுத்து
ஆதரிக்கிறது இரவு.
மூடப்படாத இமைகளோடு,
பின்னிரவில்..
தனிமையாய் நான்.

இனிமையான இரவில்,
இதமாய் ஓர் ராகம்
தூரத்திலிருந்து,
என்னை தொட்டுச் செல்கிறது.

காற்றுக்கு வசப்பட்ட அவ்விசை,
என் காதுக்கு வந்து போகும் நேரம்...
என் மூளையில் புதைந்த
உன் நினைவோடு முட்டிச் செல்கிறது.

என்றோ தொலைத்த உன்னை
இன்று அருகாமையில் தேடுகிறது,
என் இதயம்.

என்னை மோதும் மழைச் சாரலாய்,
என்னை அணைக்கும் குளிர்த் தென்றலாய்,
என்னை வருடும் இதமான இசையாய்,
இன்றும் என்னுள் வசிப்பவள் நீதான்.

அழ நினைக்கும் கண்களிடம்
இதயம் சொல்கிறது.
"வேண்டாம் கண்ணீராய்
கரைத்துவிடாதே.
எனக்கு வேண்டும்,
என்றும் அவள் நினைவு...
நான் ஓய்வின்றி இயங்க."

Post Comment

Tuesday, November 22, 2011

விடையை தேடுங்கள் உறவுகளே!



சோகமாய் சொல்லிச் செல்லும்
கவிகளில் கூட,
சில சுவாரஸ்யம் இருக்கும்.

ஏழை என்று பிறந்தவன்,
வாழ்வு பற்றி சொல்லும் போது
என்னதான் இருக்கும்?

வறுமையின் வலைக்குள்
வசப்பட்டவர்கள்தான்,
வாழ்கையில் நிர்பந்திக்கப்பட்டவர்கள்.

ஆற்றுக்குள் எறியப்பட்ட
கற்கள் போல், மூச்சுத்திணறி
மூழ்கிப் போனார்கள்,
காலத்தின் கல்லறைக்குள்.

நெருப்போடு விளையாடும்
கைக்குழந்தை போல்,
நிஜத்தோடு போராடும் அவர்கள்,
என்றும் காயப்பட்டவர்களே!.

அரசியல் மேடையில்
தீனியாய் மாற்றப்பட்டுவிட்டது,
இந்த ஏழையின் வறுமை வாழ்க்கை.

அவை கேட்டு
கைகொட்டிச் சிரித்தே,
பழகி விட்டது நம் நிலைமை.

பக்கத்து வீடு பவித்திறாவோ?
பாலைவன ஆபிரிக்காவோ?
வறுமைக்குள் வசப்பட்டவன்,
வாழ்விழந்து தவிக்கிறான்.

ஆசையும், பணமும்
இவ்வுலகை ஆளும் வரை
அழியப்போவதில்லை வறுமை
இவ்வுலகை விட்டு....

ஒரு நேரச் சோறில்லாமல் உறங்கும்
விழிகள் எத்தனை?
உறங்க இடமில்லாமல் ஒதுங்கும்
உறவுகள் எத்தனை?

இதை நினைத்துப் பார்க்கும்
உள்ளங்கள் எத்தனை?
அதை மொழி பெயர்க்கும்
குரல்கள் எத்தனை?

அவை கேட்டு
உதவும் கரங்கள்
எத்தனை?

வினாவுக்கான விடை
தெரியவில்லை எனக்கு
???????

வானை பிளக்கும் இடியாய், வறுமைக்குள்
புதைந்தவர்களின் உணர்வுகள்,
உரத்து; வினாவாக ஒலிக்கிறது
இக்கவியோடு...

நீங்களும்
"விடையை தேடுங்கள்
உறவுகளே"

Post Comment

Monday, November 21, 2011

சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்?- III

(இதன் முதற் பகுதியை வாசிக்காத வாசகர்கள் இங்கு கிளிக் செய்யவும்)
பகுதி-I
பகுதி-II

அதாவது பெண்களுக்கு இச் சமூகம் அன்று பெற்றுக்கொடுத்த சுதந்திரம் இன்று அவர்களால் தவறான முறையில் பாவிக்கப்படுகிறதா?

இது பற்றி நான் சிறிய ஒரு ஆய்வு ஒன்றை செய்திருந்தேன். அதன் விளைவுகள் பற்றி இன்றைய பகிர்வு சுமந்து வருகிறது . அதாவது பெண்களிடம் இது பற்றி கேட்டதற்கு அவர்களில் 62%மானவர்கள் ஆம் என்ற பதிலையும், 24%மானவர்கள் இல்லை என்ற பதிலையும், குறிப்பிட்ட வேலை மிகுதி 14%மானவர்கள் பதில் கூறவில்லை. ஆண்களிடம் கேட்டதர்கினங்க 93%மானவர்கள் ஆம் என்று குறிப்பிட்ட வேலை 5%மானவர்கள் இல்லை என்று சொன்னதுடன் 2%மானவர்கள் பதில் கூறவில்லை.

இது அவர்களின் கருத்தாக அமைந்துள்ளது. இது பற்றி எமது கருத்து இவ்வாறு அமையப் போகிறது.

அதாவது எல்லா விடயத்திலும் 2 விடயங்கள் ஒன்றுக்கொன்று எதிராகவே அமைந்திருக்கும். உதாரணமாக உண்மை, பொய். சிறியது, பெரியது. ஆதி, அந்தம் என எல்லா விடயங்களிலும் 2 தன்மை காணப்படும். அது போன்றுதான் ஆண்களும், பெண்களும் ஒன்றுக்கொன்று எதிரானவர்கள். எனவே அடிபடையில் ஆணும் பெண்ணும் சமம் எனும் வாதம் தவறாகும். அதற்காக யாரும் உயர்ந்தவர்களும் கிடையாது. அதற்கிணங்க எது ஆணுக்கு பலமோ, அது பெண்ணுக்கு பலவீனமாகவும், எது பெண்ணுக்கு பலமோ, அது ஆணுக்கு பலவீனமாகவும் காணப்படுகிறது. இதுதான் இன்று இங்கு நடக்கும் பிரச்சினை.

அதாவது பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக புரிந்து கொண்டு, நாங்கள் ஆண்களை விட மேலானவர்கள். அல்லது தங்களால் மட்டும் எல்லாம் முடியும் என்று முணைந்து செயற்பட ஆரம்பிக்கும் நேரம், இயற்கை சமநிலையை இழந்து பாரிய பிரச்சினையை இச் சமூகம் எதிர்கொள்கிறது. இந்த இடத்தில் பெண்களும் ஆண்களும் சற்று உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் உங்களால் மட்டும் எல்லாம் முடியுமாக இருந்தால், இவ்வுலகில் இரு இனம் தேவை இல்லை. பெண்கள் மட்டும், அல்லது ஆண்கள் மட்டும் போதும். எனவே உலகம் இயங்க உங்கள் இருவருவரின் பங்களிப்பு தேவை. அதாவது பெண்கள் நீங்கள் உங்கள் வரம்பின் எல்லை எது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது செய்தியாக இருக்கிறது.

இன்றய கால கட்டத்தில் ஆண்களை விட அதிகமாக உள்ள நீங்கள் ஆண்களால் முடியுமான எல்லாம் என்னாலும் முடியும், என முனையும் போது ஏற்படும் பிரச்சினையை நீங்கள் அதிகமாகவே உணர்திருபீர்கள். பெண்களுக்கு இன்று பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு வாழ நினைத்தால் உங்கள் வாழ்க்கை மட்டும் அல்ல, இச் சமூகம் பாரிய பின்னடைவை எதிர் கொள்ளும் என்ற தகவலோடு, ஒரு பெண் விடும் தவறு ஒரு சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது? எனும் தகவலோடு எமது அடுத்த பகுதியில் சந்திபோம். (தொடரும்)

Post Comment