
சுகங்கள் தொலைந்த நிமிடங்களை
சுகமாய் சுவாசிக்கிறேன்.
இரவுகளில் கசியும் கண்ணீரில்
என் இதயம் வாசிக்கிறேன்.
கவலையற்ற நிமிடங்கள் கடந்துவிட்டன,
சுவாசமும் தீயாய் எரிகின்றன,
விழிகளில் அருவிகள் வழிகின்றன,
என் இரவுகள் தனிமையில் விடிகின்றன.
உன் நினைவுகள் என்னை துளைக்கின்றன,
விழும் குருதியும் உன் பெயர் உரைகின்றன.
கனவுகள் கனவாகவே கலைகின்றன,
காலமும் வேகமாய் நகர்கின்றன.
உணரவில்லை என் காதலை நீ...
இனி உயிருமில்லை,
எனக்கு இல்லாமல் நீ.
இஷ்டம் போல் உன் சிறகை விரித்திடு பறவையே
நாம் பறக்க நீல வானம் இருக்குது பறவையே...
ஒழிக்காமல் உன் மழையை பொழிந்திடு மேகமே
உன்னை தாங்க இங்கு பூமி இருக்குது மேகமே...
மனம் விட்டு உன் மணத்தை வீசு மலரே
அதை வாழவைக்க தென்றல் உண்டு மலரே...
வாய்விட்டு ஒரு வார்தை சொல்லு பெண்ணே
உன்னை தாங்க என் கரங்கள் உண்டு பெண்ணே...
புரிந்து கொள்ளடி என்னை...
இல்லை,
புதைத்துக் கொல்லடி என்னை...
No comments:
Post a Comment