Sunday, May 01, 2011

அவன் இல்லையென்றால்



தரணியில் வீடுகள் எங்குமேயில்லை
வானமே கூரை, பூமியே வாசல்
ஏனெனில் அவனில்லை.

உடலை மறைக்க உடையில்லை
நிர்வாணமே நிதர்சனம்
ஏனெனில் அவனில்லை.

நடையைத் தவிர வேறு வழியில்லை
பயணம் பல மைல் தொலைவானாலும்
ஏனெனில் அவனில்லை.

புழுதி படிந்த மரங்கள்,
இலை மேல் அமரும் உணவுகள்,
காய்ந்து, நனைந்து கிடக்கும் கழிவுகள்,
ஏட்டுச் சுரக்காய் போன்ற பூமி,
ஏனெனில் அவனில்லை.

வாங்குபவன் இல்லை,
விற்பவன் இல்லை,
முதலாளிகள் யாருமில்லை,
காரணம் தொழிளாலியவனில்லை.

முயற்சிக்கே முகவரி கொடுத்தவன்
'அவன் இல்லையென்றால்'
என்ற என் கற்பனையின் கிருக்கலே அவை.

அசரவைக்கும் கடல் கூட
ஓயாமல் அலையடிக்க
இவனிடம் கற்றுக் கொண்டது போல்...
ஓயாத இவன் உழைப்பைக் கண்டு.

இயக்கமே உலகின் முதற்புள்ளி
அதையே இயக்கியவன் இவன்.

உலக இயக்கம்
சூரிய விடியலில் அல்ல.
இவன் கண்களின் விழிப்பில்,
கரங்களின் உழைப்பில்,
வியர்வையின் நீரில் தான்.

உலகத்தை இயக்குவதால் இவன் உழைப்பாளி.
அதை தன் தோலிலும் சுமப்பதால் தொழிளாலி.


இவ்வளவு செய்தும்
இவன் வாழ்கை மட்டும்
முன்னேறவில்லை.

முயற்சிக்கு முன்னுரிமையில்லை
இருந்திருந்தால் என்றோ முன்னேறியிருப்பான்.

அதிர்ஷ்டமும், பணமும்
இந்த உலகை ஆளும் வரை
இவன் வாழ்கை விடியப் போவதேயில்லை...

தொழிளாலர் தினம்
இதுவல்ல சரி...
என் தோழனின் தினம்!!!
இதுதான் சரி.

வாழ்த்துக்கள், ஊர்வலங்கள்,
மேடைப் பேச்சுக்கள், பரிசுகள்,
வழமைபோன்றே இன்று மட்டும்....

கொதிக்கும் மனதிடம் புத்தி சொல்கிறது
விடு; இன்றாவது அவனை கொண்டாடட்டும் உலகம்


தெரிந்த உண்மைக்குள்
மறைந்து கிடக்கும் புதிர் போல்,
முன்னேறும் உலகில்
இவன் மட்டும் முடங்கியே கிடக்கிறான்

நானும் வாழ்த்துகிறேன்
இனிமேலாவது
அவன் வாழ்கை மலர...


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment