
அருக்கப்பட்ட தொப்புள் கொடிக்குள்ளயே
அடங்கிவிடுகிறதா தாயின் பாசம்?
மறக்கப்பட்ட உன் நினைவுக்குள்
மங்கிவிடுமா என் காதல்??
உருகி உருகி மெழுகாவேன்,
அதிலும் உனக்கே உயிராவேன்.
உனக்காய் நானும் இருளாவேன்,
அதல் நீ காணும் கனவும் நானாவேன்.
இன்று என் நினைவில்....
நீ சிரித்துச் செல்லும் நொடிகளில்
என்னை சீரழித்துச் செல்கிறாய்.
நீ உதிர்த்துச் செல்லும் மௌனங்களில்
ஆயிரம் கவி சொல்லிச் செல்கிறாய்.
நீ பிரிந்த நிமிடம் எனக்கு சுடவில்லை.
காரணம் நீ வாழ்ந்த நிமிடம் எனக்குள் குளிர்வதால்...
உன் நினைவுகள் இன்று எனக்கு கசப்பாயில்லை.
காரணம் இன்றும் அது அழகாய் இனிப்பதால்...
நான் உன்னை என்றும் வெறுக்கவில்லை.
காரணம் இன்றும் உன்னைக் காதலிப்பதால்...
நீ சொன்ன வார்த்தைதான் எனக்கு வாழ்வானது.
நீ தந்த காதல்தான் எனக்கு பலமானது.
நீ தந்த நினைவுகள் எனக்கு ஒளியானது.
நீ தந்த கண்ணீரே என்னுடைய கவியானது.
உன்னை நினைந்து எரிந்த இரவுகள் கடந்து,
இதமாய் உறங்கும் உறவுகள் தொடர்கின்றன.
இன்று என் கனவுக்குள் உன் அழகிய நினைவுகளே...
என்னை நேசிப்பதை நிறுத்திவிடு என்றாய்.
நிறுத்திவிட்டேன். நீ சொன்ன அடுத்த நொடியிலயே,
ஆனால் உனை தான் சுவாசமாய் சுவாசிக்கிறேன்
என் அடுத்த நொடியில் இருந்து...
நேசிப்பது மட்டுமல்ல,
சுவாசிப்பதும் காதல்தானே,
சொன்னவளும் நீதானே.
உன்னோடு வாழ்ந்த நான்,
உன்னை நினைத்து வாழப் பழகிக் கொண்டேன்.
காரணம் இன்றும் உன்னைக் காதலிப்தால்...
என் உயிருக்குள்ளும் நீ வாழ்வதால்...
நினைவுகளின் தாலாட்டில் உணர்வுகள் கவிதையாய் இங்கே !!
ReplyDeleteபாராட்டுகள் !!
நன்றி கௌசல்யா தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்
ReplyDelete