Friday, June 24, 2011

சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்?-II

(இதன் முதற் பகுதியை வாசிக்காத வாசகர்கள் இங்கு கிளிக் செய்யவும்)
பகுதி-I

அதன் பிறகு பெண்கள் இன்று எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு சவால் விடுக்கின்ற அளவுக்கு தங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர். இது வரவேற்கத்தக்க பாராட்டப்படக்கூடிய விடயம் தான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இந்தப் பெண் வளர வளர கூட பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன என்பது தான் நாம் இங்கு கவனிக்க வேண்டிய விடயம்.

அப்படி என்ன பிரச்சினைகள் என நீங்கள் என்னிடம் கேட்க முடியும் நான் வாழ்கையில் சந்தித்த சில அனுபவங்களை இங்கு சுட்டிக்காட்டவது பொருத்தம் என நினைக்கின்றேன்.

ஒரு கணவன் மனைவிக்கிடையில் நடந்த பிரச்சினை இது.

அதாவது அவர்களுக்குத் திருமணமாகி 1 வருடத்தின் பின் குழந்தை கிடைத்தது. அவர்கள் குடும்பத்தை விட்டுப்பிரிந்து வேறு ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் தவிர அவர்களுடன் யாரும் இல்லை இப்போது அக் குழந்தை. பிரச்சினை என்னவென்றால் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். இப்போது குழந்தையை பராமரிப்பது யார்? என்ற பிரச்சினை தோற்றமெடுக்கிறது. கணவன் சொன்னான், நான் மட்டும் வேலைக்குச் செல்கிறேன் நீ குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டில் இரு என்று. ஆனால் மனைவி அதை நிராகரித்தால். குழந்தையை, நாம் குழந்தை பராமரிக்கும் ஒரு இடத்தில் கொடுத்து விட்டு வேலைக்குச் செல்லாம் என்றால். கணவனுக்கு அதில் உடன்பாடு இல்லை. நீதான் குழந்தையை வளர்க்க வேண்டும் என்றான். பிரச்சினை தொடர்ந்தது. இன்று அவர்களின் முடிவு விவாகரத்து.

அந்த பெண்ணிடம், நான் இது பற்றி நேரடியாக பேசியதற்கு ஆண்கள் மட்டும்தானா வேலைக்குச் செல்ல வேண்டும்? பெண்கள் செல்லக் கூடாதா? பெண்கள் தான் குழந்தை வளர்க்க வேண்டும் என்று சட்டமா இருக்கிறது? என்றெல்லாம் நிறைய கேள்விகள். நீங்களே சொல்லுங்கள் இதற்கு நாம் என்ன செய்ய முடியும்.

பெண்கள் இவ்விடத்தில் சரியான அணுகுமுறையுடன் இவ்விடயத்தை நோக்க வேண்டும். அதாவது பெண் என்பவள்தான் 10மாதம் குழந்தையை சுமந்து பெற்றெடுக்க கூடியவளாக இருக்கின்றால். குழந்தைகளுக்கு உணவளிக்க கூடிய விடயங்களும் அவளையே சார்ந்து நிற்கின்றது.ஒரு ஆணின் குழந்தை வளர்ப்புக்கும் பெண்ணின் வளர்ப்புக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.(அம்மாவின் அன்புக்கு இணையாக இவ்வுலகில் எதுவுமே இல்லை என்பதும் நாம் அறிந்த விடயமே).

நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் இதை ஆண்களோ அல்லது இச் சமூகமோ பெண்கள் மீது திணிக்கவில்லை. இது இயற்கை நிர்ணயித்த ஒரு விடயம் ஆகவே குழந்தைப் பராமரிப்பு என்பது இயற்கையாகவே பெண்களால் மட்டுமே முடியுமான ஒரு விடயம். அதை வைத்து பெண்ணிலை வாதம் பேசுவது முறையான ஒரு விடயமல்ல. இது மிகப் பெரிய முட்டாள் தனமாகும். ஒரு உதாரணத்தையே என்னால் இங்கு சுட்டிக்காட்ட முடிந்தது. காரணம் நேரமின்மை.

பெண்களின் வெற்றிகளை கொண்டாடும் நாம் அவர்கள்விடும் தவறுகள் சம்மந்தமாகவும் பேச வேண்டியிருக்கிறது.

இவ்வாறான பல பிரச்சினைகள் எம்மத்தியில் பெண்ணிலை வாதம் என்ற பெயரில் தொடுக்கப்பட்டு அதன் மூலமாக பாரிய விளைவுகளை சந்தித்திருக்கின்றோம். எனவே இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது பெண்கள் அவர்களுக்கு கொடுக்கப்ட்ட சுதந்திரத்தை தவறான முறையில் புரிந்து கொண்டார்களா? என்று ஒரு கேள்வி எழுகிறது.

அதாவது பெண்களுக்கு இச் சமூகம் அன்று பெற்றுக்கொடுத்த சுதந்திரம் இன்று அவர்களால் தவறான முறையில் பாவிக்கப்படுகிறதா?

(தொடரும்...)


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment