Tuesday, January 04, 2011

பிறக்கவில்லை புது வருடம்!!!



"பிறக்கவில்லை புது வருடம்",
எதுவும் மாறவில்லை,
அதுதான் காரணம்.

வானில் வேட்டு வேடிக்கை,
வாழ்வில் சோக வாசனை,
இது புது வருடம் அல்ல,
நேற்றய வருடங்களின் தொடர்சி.

பசி தீரவில்லை,
பஞ்சம் அகலவில்லை,
கண்ணீர் குறையவில்லை,
அகதிகள் அழியவில்லை,
வாழ்வில் பசுமையில்லை,
வாழவும் தெரியவில்லை,
மனிதரில் மனிதம் இல்லை,
மன்னிக்கத் தெரியவில்லை,

தாயின் பாசத்திலும் ஒரு கலக்கம்,
தந்தையின் அரவணைப்பிலும் ஒரு குழப்பம்,
பிள்ளையின் ஆதரவிலும் சில திருத்தம்,
கணவனின் காதலிலும் ஒரு காயம்,
மனைவியின் நேசத்திலும் ஒரு மாயம்,
நண்பனின் நட்பிலும் சில நடுக்கம்,
சொந்தங்களின் அன்பிலும் ஒரு சோகம்,
ஆகவே புது வருடம் இன்னும் பிறக்கவில்லை.

சமாதனம் மலர வேண்டும்,
சமத்துவம் ஓங்க வேண்டும்,
வசந்தம் வருட வேண்டும்,
பசுமையோடு உறங்க வேண்டும்.

செல்வம் பெருக வேண்டும்,
மகிழ்ச்சி தொடர வேண்டும்,
விவசாயம் செழிக்க வேண்டும்,
விஞ்ஞானம் வளர வேண்டும்.

பணம் பறிபோக வேண்டும்,
பண்டமாற்று மீண்டும் அறிமுகமாக வேண்டும்,
யாவரும் உழைக்க வேண்டும்,
எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

மழழைச் சிரிப்பொலி கேட்க வேண்டும்,
குழந்தை போல் நாமும் மாற வேண்டும்,
சொந்தங்கள் இணைய வேண்டும்,
சுகங்கள் தொடர வேண்டும்.

புது யுகம் மலர வேண்டும்,
பூமி பூமாலை அணிய வேண்டும்,
இப்படியொரு புது வருடம் பிறக்க வேண்டும்,
நானும் அதை ரசிக்க வேண்டும்.

எதிர்பார்க்கிறேன் ஆவலாய்.....
கற்பனை அடுத்த ஆண்டில் நிஜமாகும்,
என்ற நம்பிக்கையில்....


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment