கண்ணுக்குள் உன்னை வைத்து
இமைகளை மூடுகிறேன்.
என் இரவின் கனாக்களிலும்
நீதான் வரவேண்டுமென்று..
இதயத்துக்குள் நினைவுகளாய்
நிரம்பிவிட்ட உன் ஞாபங்கள்..
அத்துணை அணுவிலும்
இரத்த ஓட்டமாய் கலந்து
என் ஒவ்வொரு அசைவிலும்
உன்னையே பிரதிபலிக்கிறது.
அழகிய நினைவுகளும் நீ,
அழகிய நிகழ்வுகளும் நீ,
அழகிய எதிர்காலமும் நீ..
என் காதோரமாய்
கைபேசியில்
நீ பேசுகையில்..
உலகையே
மறந்து போகிறேன்
உன்னை மட்டும்
நினைத்தவனாய்..
கூட்டமாய் நீ வருகையில்
கண்களால்
உன்னோடு கதை பேசி..
மௌனத்துக்குள் உறைந்து விடுகிறேன்
கண்களை மட்டும் அசைத்தவனாய்..
எந் நேரமும்
உந்தன் நினைப்பு,
உன்னை பார்க்க
மனம் துடிக்கும் துடிப்பு,
உன்னை காணாமல்
நான் தவிக்கும் தவிப்பு..
நினைப்பு, தவிப்பு, துடிப்பு.
இவை மூன்றையும் கலந்து
காலம் செய்யும் நகைப்பு
இந்த காதல்..
போராட்டம் நிறைந்த
வாழ்வெனும் கடலில்,
மூச்சுப்பிடித்து சுழியோடி..
நான் கண்டெடுத்த காதல் என்ற
சிற்பிக்குள்,
எனக்கு கிடைத்த முத்து நீ.
பெண்ணே,
மூச்சே நின்றாலும்
உன்னைப் பிரியபோவதில்லை.
இதைத்தான் 'வெட்டி சீன் போடுவது' என்கிறோம்... :D
ReplyDeleteஎன்னாச்சு? ரொம்ப நாளா போஸ்ட் எதையும் காணோம்.
ஹி ஹி ஹி அதுவும் சரிதான் பாஸ் :D
ReplyDeleteநான் அப்பப்போ போட்டுக்கிட்டுதான் இருக்கேன் உங்களைதான் காணோம்.