பகுதி-I
பகுதி-II
அதாவது பெண்களுக்கு இச் சமூகம் அன்று பெற்றுக்கொடுத்த சுதந்திரம் இன்று அவர்களால் தவறான முறையில் பாவிக்கப்படுகிறதா?
இது பற்றி நான் சிறிய ஒரு ஆய்வு ஒன்றை செய்திருந்தேன். அதன் விளைவுகள் பற்றி இன்றைய பகிர்வு சுமந்து வருகிறது . அதாவது பெண்களிடம் இது பற்றி கேட்டதற்கு அவர்களில் 62%மானவர்கள் ஆம் என்ற பதிலையும், 24%மானவர்கள் இல்லை என்ற பதிலையும், குறிப்பிட்ட வேலை மிகுதி 14%மானவர்கள் பதில் கூறவில்லை. ஆண்களிடம் கேட்டதர்கினங்க 93%மானவர்கள் ஆம் என்று குறிப்பிட்ட வேலை 5%மானவர்கள் இல்லை என்று சொன்னதுடன் 2%மானவர்கள் பதில் கூறவில்லை.
இது அவர்களின் கருத்தாக அமைந்துள்ளது. இது பற்றி எமது கருத்து இவ்வாறு அமையப் போகிறது.
அதாவது எல்லா விடயத்திலும் 2 விடயங்கள் ஒன்றுக்கொன்று எதிராகவே அமைந்திருக்கும். உதாரணமாக உண்மை, பொய். சிறியது, பெரியது. ஆதி, அந்தம் என எல்லா விடயங்களிலும் 2 தன்மை காணப்படும். அது போன்றுதான் ஆண்களும், பெண்களும் ஒன்றுக்கொன்று எதிரானவர்கள். எனவே அடிபடையில் ஆணும் பெண்ணும் சமம் எனும் வாதம் தவறாகும். அதற்காக யாரும் உயர்ந்தவர்களும் கிடையாது. அதற்கிணங்க எது ஆணுக்கு பலமோ, அது பெண்ணுக்கு பலவீனமாகவும், எது பெண்ணுக்கு பலமோ, அது ஆணுக்கு பலவீனமாகவும் காணப்படுகிறது. இதுதான் இன்று இங்கு நடக்கும் பிரச்சினை.
அதாவது பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக புரிந்து கொண்டு, நாங்கள் ஆண்களை விட மேலானவர்கள். அல்லது தங்களால் மட்டும் எல்லாம் முடியும் என்று முணைந்து செயற்பட ஆரம்பிக்கும் நேரம், இயற்கை சமநிலையை இழந்து பாரிய பிரச்சினையை இச் சமூகம் எதிர்கொள்கிறது. இந்த இடத்தில் பெண்களும் ஆண்களும் சற்று உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் உங்களால் மட்டும் எல்லாம் முடியுமாக இருந்தால், இவ்வுலகில் இரு இனம் தேவை இல்லை. பெண்கள் மட்டும், அல்லது ஆண்கள் மட்டும் போதும். எனவே உலகம் இயங்க உங்கள் இருவருவரின் பங்களிப்பு தேவை. அதாவது பெண்கள் நீங்கள் உங்கள் வரம்பின் எல்லை எது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது செய்தியாக இருக்கிறது.
இன்றய கால கட்டத்தில் ஆண்களை விட அதிகமாக உள்ள நீங்கள் ஆண்களால் முடியுமான எல்லாம் என்னாலும் முடியும், என முனையும் போது ஏற்படும் பிரச்சினையை நீங்கள் அதிகமாகவே உணர்திருபீர்கள். பெண்களுக்கு இன்று பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு வாழ நினைத்தால் உங்கள் வாழ்க்கை மட்டும் அல்ல, இச் சமூகம் பாரிய பின்னடைவை எதிர் கொள்ளும் என்ற தகவலோடு, ஒரு பெண் விடும் தவறு ஒரு சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது? எனும் தகவலோடு எமது அடுத்த பகுதியில் சந்திபோம். (தொடரும்)
No comments:
Post a Comment