Saturday, December 31, 2011

கொண்டாடவா புது வருடம்? (புதுவருட சிந்தனை )


ஏன் புது வருஷம்? எல்லாமே புதுசா மாறுமா அப்பா? இல்லடா கண்ணா... வருஷம் மட்டும் தான் மாறும்.
காலைல கடைக்கு சாப்பிட போன எனக்கு, காதில் விழுந்த மகன் அப்பா சம்பாஷனை. பையன் படு உசார் போல.. இப்பவே இப்படி யோசிக்கிறான் எண்டு நினச்சிட்டு வந்து, இத வச்சே நம்ம ஒரு மெசேஜ் சொன்ன என்ன எண்டு யோசிச்சன். விடுங்க பாஸ் நம்ம சுட்டது பையனுக்கு தெரியவா போகுது.

நானும் மாறப் போறது இல்ல, நீங்களும் மாறப் போறது இல்ல, வருஷம் மட்டும் மாறிக்கிட்டே போகுது. அதுவும் பெரிய மாற்றம் எதுவும் இல்ல 2011 இல் கடைசியில் இருக்கும் 1 இரண்டாக (2) மாறப் போகிறது. அவ்வளவுதான். இதில் என்ன சந்தோசம் என்பது மட்டும் புரியாப் புதிர்தான். அது சரி, அது தெரிஞ்சாதான் நான் ஏன் இப்படி புலம்ப போறேன்?

வருஷ தொடக்கத்தில் நல்லது ஒன்றை எடுத்து, தீயது ஒன்றை விட்டு விட வேண்டுமாம். யார் சொன்னது எண்டு ஆராய்ச்சி நடத்த நேரமில்லை. சாரி பாஸ். ஆனா இங்க என்ன நடக்குது? வருஷ ஆரம்பமே தீமைக்குதான் வழிவகுக்குது. உடன்பாடு இல்லாதவர்கள் நம்ம பாப்பைய்யா கிட்ட வேணும்னா பட்டிமன்றம் நடத்த சொல்லி முடிவெடுப்பம். இப்போ கொஞ்சம் முழுமையா வாசிச்சி பாருங்கோ.

வீண்விரயம், பொழுதுபோக்கு, மது, மாது, கேலிக் கூத்துகள்.... நன்மைகளா இவைகள்?

நம்ம கவிஞன் ஒருவன் அழகா சொன்னான் மத்தவன சந்தோசப்படுத்தி பாரு... நிறைவான சந்தோசம் அதுதான் எண்டு அவன் பேரு..... மறந்து போச்சு விடுங்க. நமக்கு அவன் பெயரும் மறந்து போச்சு அவன் சொன்னதும் மறந்து போச்சு.
நீங்களே சொல்லுங்க நீங்க எத்துன பேர் மாற்றுதிரனாளிகள்/ அனாதைகள்/ ஏழைகள் கூட உங்க கொண்டாட்டங்கள பகிர்ந்து கொண்டீங்க? நம்ம சந்தோசங்கள் நம்மளோட மட்டும் முடிஞ்சிட்டா அதுல எந்த திருப்தியும் இல்ல நம் சந்தோசம் மத்தவர்களுக்கும் பகிரப்படனும். அதுதான் உண்மையான சந்தோசம்.

பண்டிகை காலங்களில் வீண் விரயம் தான் அதிகம். எதற்கு? 2 நிமிட சந்தோசத்துக்காக 20 கோடிகள் செலவழிக்கப் படுகின்றன. காலங்கள்/ வருடங்கள் பல மாறிய போதும் நாம் மட்டும் மாறவே இல்லை. இன்றைய உலகம் இருப்பவனுக்கு கொடுக்கிறதே தவிர இல்லாதவனை நினைத்துகூட பார்ப்பதில்லை. சற்று யோசிப்போம்.

புது வருடம் பிறப்பது நம் வாழ்வை இன்னும் திட்டமிட்டு கடந்த வருட தவறுகளை திருத்தி வாழ்வை மேலும் சிறப்பாக்கி கொள்வதற்குத்தானே தவிர கொண்டாடி மகிழ்வதற்கு அல்ல. நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். என்ன செய்வது எந் நேரமும் உண்மைகள் இனிப்பதில்லை.

அப்புறம் இன்னொரு முக்கியமான விடயம்.... நம்மை விட்டு எதுவும் பிரியும் போது கவலை கொள்ளும் நாம் ஒரு ஆண்டு பிரிந்து மறு ஆண்டு தொடங்கும் போது ஏன் கொண்டாடுகிறோம்? உறவும் பிரிவும் ஒன்றாய் வரும் போது இச் சமூகம் உறவுக்கே முன்னுரிமை கொடுக்கிறது. இழப்பின் வலியை விட உறவின் அணைப்பு சிறந்தது.

பிறக்கும் புது வருடத்தில் சந்தோசங்கள் மலர இறைவனை வேண்டுகிறேன். வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment