Friday, July 23, 2010

உன்னைக் கண்டதால்தான்...




கடலில் விழுந்த மழைநீர் போல்
கரைந்து விட்டேன் உன் நினைவுள் நானும்
தேடுகிறார்கள் தனியாய் என்னை
உன்னுல் நான் ஒளிந்து கொண்டது தெரியாமல்

காற்றோடு கலந்து விட்ட பூவின் வாசம் போல்
நீயும் ஒட்டிக் கொண்டாய் என் உயிருக்குள்
மாரிவிட்டேன் என்கிறார்கள்
நீ என்னுல் மறைந்திருப்பது தெரியாமல்;

என் தவிப்புகளின் தாயகம் நீதான்
என் இன்பங்களின் இருப்பிடம் நீ தான்
என் கனவுகளின் கண்னியம் நீ தான்
என் வாழ்கையின் வசந்தமும் நீ தான்.

இலேசாய் வருடிய தென்றலில் வலி உணர்கிறேன்
தாய் தொடும் ஸ்பரிசத்தில் தலை கவிழ்கிறேன்
என் உடலில் எறும்பு ஊரினாலும் மலைக்குன்று உருள்வதாய் பதைக்கிறேன்
இவையெல்லாம் உன்னைக் கண்டதால்தான்

மாலைப் பொழுதாகிறது என் ஒவ்வொரு காலைப் பொழுதும்
தூசு படிகிறது 6 மாதமாய் விரிக்கப் படாத என் பாடப் புத்தகம்
நிரம்பி வழிகிறது என் குப்பைத் தொட்டி காதல் கடிதம் சுமந்து
உன்னை நினைத்து என் ஒவ்வொரு இரவுகளும் தூங்காமல் விடிகிறது

வரிகளில் வழுக்கி என் காதல் கடிதம் உன்னைத் தீண்டும்
தருணம்.........


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments:

  1. //என் தவிப்புகளின் தாயகம் நீதான்
    என் இன்பங்களின் இருப்பிடம் நீ தான்
    என் கனவுகளின் கண்னியம் நீ தான்
    என் வாழ்கையின் வசந்தமும் நீ தான்//

    அருமை...

    ReplyDelete
  2. நன்றி கௌதமன்

    ReplyDelete