மன்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக மன்முனைப்பற்று பிரதேச சபையின் தலைவர் கிறிஸ்ட்டினா தலைமையில் இன்று காலை (30.7.2010) தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
மன்முனைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குள் காத்தான்குடி நகர சபை அத்து மீறும் நடவடிக்கையினை கண்டித்து மன்முனைப்பற்று பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட அதன் பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் பொது மக்கள் சிலரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
காத்தான்குடி நகர சபை மன்முனைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் அத்து மீறி பல்வேறு காணி சுவீகரிப்பு நடவடிக்கைளை மேற்டிகாண்டு வருவதாக இவர்கள் குற்றம் சாட்டு கினறனர். இது தொடர்பான மஜரொன்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கையளித்துள்ளனா.
இது தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக் அகமது லெவ்வையிடம் கேட்ட போது அவ்வாறான அத்து மீறல்கள் எதையும் நாம் மேற்கொள்ள வில்லையெனவும் எமது காணியிலேயே அபிவிருத்தி நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் எங்களது காணியை இவர்களின் காணியென பொய்யாக உரிமைகூறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment