Wednesday, September 29, 2010

போதும்.......



ஆறுதலாய் 4 வரி உரைப்பாய்,
அவ்வப்போது தட்டிக் கொடுப்பாய்,
ஆகாயமாய் உயர்ந்து நிற்பாய்,
நட்பினால் அரவனைப்பாய்,
இன்று அடங்கிப் போனாய், அத்தனையும்
இழந்து விட்டு.

கனவோடு வாழ்ந்தவனல்லவா நீ...
கண்டாயா? வாழ்கை தந்த வடுக்களை.
வாழ்வெனும் தேவன் உன்னை
அடிமையாக்கி பல திங்களாயிற்று.
யாரிடமும் இல்லை உன் அடிமை விலங்கை
திறக்கும் சாவி.

கஷ்டப்படுகிறாய்,
காலம் திறக்கட்டும் உன் விலங்கை,
அது வரை காத்திரு நம்பிக்கையுடன்.
நம்பிக்கைதான் வாழ்வாம்
யாரோ சொன்னார்கள்.

ஒழிந்திருந்து ஒப்பாரியா?
நடத்து நடத்து.. நாடகமே வாழ்வாகிப் போன
உலகில் உன் நிஜமும்,
கொஞ்சம் கலக்கட்டும்...

வரண்ட பாலை வனத்தில் கண்ணீரா?
ஹா ஹா ஹா நீ நின்ற இடத்தை
குனிந்து பார்.
உன் வலியின் கண்ணீர் கூட வற்றியிருக்கும்
வரட்சியின் கொடுமையால்.

வாழப் போகிறேன் என்று தானே விடைபெற்றாய்.
வாழ்ந்தாயா?
ம்ம்ம் வாழ்ந்திருப்பாய்.
சில இருப்போடும், பழ இழப்போடும்

என்ன? கவியின் கடுமை சுடுகிறதா உன்னை..
இதெல்லாம் ஒரு சூடா உன் வாழ்வில்...

அறிந்து கொள் ஒரு வரி.
உன் அறிவைத் திறக்கும் ஒரு வரி.
போதும் என்று நினை,
உனக்கான பொழுது விடிந்து வெகு நேரமாயிற்று

தடுமாறுகிறாயா?
பிடித்துக் கொள் என் தோள்களை...
எப்போதும் அது உனக்குத்தான்,
நீ என் தோழன் ஆனாதால்.........


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment