Thursday, September 02, 2010

ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் இனி தங்கும் காலம் குறைவு.


Virakesari.
ஈராக்கில் தாக்குதல் நடவடிக்கையை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மேலும், வேகமாக அங்கிருந்து அமெரிக்க இராணுவத்தினரை திரும்பப் பெறுவதில் அதிபர் ஒபாமா தீவிரமாக இருக்கிறார்.

அமெரிக்க அதிபராக இருந்த புஷ், 2003ஆம் ஆண்டு படைகளை அனுப்பி சதாம் உசேனுக்கு எதிராக போர் தொடுத்தார். அது முதல் கொண்டு அமெரிக்க படைகள் ஈராக்கில் தங்கி விட்டன.

தற்போதைய அதிபர் ஒபாமா தேர்தல் பிரசாரத்தின் போது, அமெரிக்க படைகளை வாபஸ் பெற போவதாக தெரிவித்திருந்தார். இவரது வாக்குறுதி படி ஈராக்கிலிருந்த அமெரிக்கப் படைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் அனைத்தும் முற்றிலும் வாபஸ் பெறப்பட்டு விடும் என, ஒபாமா அரசு உறுதி அளித்துள்ளது.

இந்த வாக்குறுதியின் ஒரு கட்டமாக நேற்று முதல், ஈராக்கில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவதை அமெரிக்க படைகள் நிறுத்தி கொண்டன.

தற்போது ஈராக்கில் தங்கியுள்ள அமெரிக்கப் படைகள், ஈராக் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் மட்டுமே ஈடுபடுவார்கள்.இதனிடையே ஈராக்கில் பணி முடித்து டெக்சாஸ் மாநில முகாமுக்கு திரும்பிய ராணு வீரர்களிடையே ஒபாமா நேற்று உரையாற்றினார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment