Thursday, September 02, 2010

பள்ளிப் பருவக் காதல்............


மறக்க முடியாத நினைவில்
அனைவரும் மறக்கத் துடிக்கும்
ஒரு நினைவு.......

ஈறாரு வயதினிலே இயல்பான
மனிதர்களுக்கு துளிர்விடுகிறது
இந்த இயல்பான காதல்

கண்களில் தொடங்கி கடிதத்தில் வளர்ந்து
நண்பர்களின் தைரியத்தில் கிளைவிட்டு
ஆலமரமாய் வளர்ந்தாலும் சில வேளை
வெட்டி வீசவும் படுகிறது...

வெற்றியோ தோல்வியோ....
இதன் நினைவு மட்டும் எப்போதும்
இனித்துக் கொண்டேயிருக்கும்
மறுபடி வாழ்ந்து பார்க்க
மனம் ஏங்கும் இந்தக் காதலுடன்...

நான்கு பக்க சுவருக்குள்
நண்பர்களுடன் இருக்கும் போதே
கண்களால் மட்டமே பேசும்
இந்தக் கள்ளக் காதல்.

ஒவ்வொரு நாளும் அவள் செல்லும் வழிபார்த்து
காத்திருந்து அவள் பார்வை பட்டவுடன்
தனியாக சிரித்து 10 அடி பின்னால் பாடசாலை செல்ல
பாதைகளும் என்னை கிண்டல் செய்யும்

வகுப்பறையில் அவள் திரும்பும் தருணம்
எதிர்பார்த்து பாடங்களை புறக்கனித்து
கிடந்த காலங்கள்..... இன்று நினைக்கும் போது
மெய் சிலிர்கிறது

இடைவேளை நேரங்களில் இடைவிடாமல்
அவள் பின்னால் சென்று வாங்கிய
கிண்டல்கள், அவமானங்கள் இன்று
இவை எல்லாம் கானல்நீராய் கரைந்து விட்டது

பாடசாலை விட்டவுடன் மீண்டும் பாதுகாவலன்
வேளையை பொருப்பெடுத்து அவள் வீடு வரை சென்று
வழியனுப்பி மீண்டும் வீடு திரும்பி வாங்கிய
கால் வலிகள் எல்லாம் இன்று காணாமல் போய்விட்டது

விருப்பப் பாடங்களையும் விரும்பியவளுக்காக
தியாகம் செய்து அவளைப் பார்பதற்காகவே
தவம் கிடந்த நாட்கள் எல்லாம் இன்று மாறிவிட்டது

பகுதி நேர வகுப்புக்களிலும் அவள் செல்லும்
வகுப்புகளுக்கு மட்டுமே சென்ற கால்கள்
வீட்டுப் பயிற்சி கூட செய்யாமல் அவளுக்காக
மட்டுமே கடிதம் எழுதிய கைகள்
அவள் பெயரை மட்டுமே எப்பொழுதும்
உச்சரிக்கும் என் நாவு
அவளைப் பற்றிய எண்ணத்திலே இயங்கிய
என் இதயம்
இன்று அவள் இல்லாத என்னை கேலி செய்கின்றன......

அவளை ஒரு நொடி பார்பதற்காக
அவள் வீடிருக்கும் வீதியில் 4மணி நேரம்
காத்திருந்த காலங்கள்
அவளின் அப்பாவை கண்டு பயந்து
நடுங்கிய நிமிடங்கள்
அவளுடன் பேசுவதற்காக தொலைபேசி
எடுத்து அவளின் அம்மாவிடம்
மாட்டிக் கொண்டு திக்கித் திணரிய தருணங்கள்
அவளின் புகைப்படத்தை யாருக்கும் தெரியாமல்
மறைத்து வைத்து அழகு பார்த்த வினாடிகள்
அவளைப் பார்த்து எழுதிய கிருக்கல் கவிதைகள்
அவளுக்காக என் நண்பர்களுடன்
போட்ட முட்டாள்தனமான சன்டைகள்
அவள் நினைவோடு மட்டும் கனவில்
வாழ்ந்த இரவுகள்
இவை யாவும் இன்று என்னை விட்டு மறைந்து விட்டன.....

ஆனால் அவளின் பூ முகம் மட்டும்
என் நெஞ்சை விட்டு மறையவுமில்லை
நான் மறக்கவுமில்லை
அவளைப் பிரிந்து
சென்ற போது என்னுல் ஏற்பட்ட
இழப்பில்லாவலியுடன்

என் முதல் காதலும் அதுதான்
என் முடிவான காதலும் அதுதான்

என் பசுமை நினைவாக மாறி விட்ட
அந்த நாட்கள் என் மரணத்திலும்
மறக்காது............................


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment