Wednesday, September 01, 2010

நடுவரின் தீர்ப்பு மறுபரிசீலனை: பி.சி.சி.ஐ. மறுப்பு

Virakesari.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் நடுவர் தீர்ப்பு மறுபரிசீலனை (யு.டி.ஆர்.எஸ்) முறைக்கு இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ) மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி இந்தியா வருகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மொகாலியிலும் (அக்., 1 முதல் 5), இரண்டாவது டெஸ்ட் பெங்களுர்விலும் (அக்., 9 முதல் 13) நடக்கிறது. இதற்கு பின் ஒருநாள் போட்டிகள் கொச்சி (அக்,17), விசாகப்பட்டினம் (அக்., 20), கோவாவில் (அக்., 24) நடக்கிறது.

இத்தொடர் குறித்து பி.சி.சி.ஐ., முக்கிய தலைமை அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், எதிர்வரும் அவுஸ்திரேலிய தொடரில் யு.டி.ஆர்.எஸ்., முறை நடைமுறைப் படுத்தும் எண்ணம் இல்லை. இதனை நாங்கள் ஐ.சி.சி.,யிடம் முன்னதாகவே தெரிவித்து விட்டோம். தவிர, உலகக் கிண்ண தொடர் என்பது ஐ.சி.சி., நடத்துவது. இதில் யு.டி.ஆர்.எஸ்., முறையை கொண்டுவருவது என்பது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது, என்றார்.

இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாரூன் லார்கட் கூறுகையில்,டெஸ்ட் போட்டிகளில் யு.டி.ஆர்.எஸ்., முறையை அறிமுகம் செய்ததால் ஏற்பட்ட பலன் எல்லோருக்கும் தெரியும். தற்போது இதை எதிர்வரும் உலகக் கிண்ண தொடரிலும் அறிமுகம் செய்ய ஆர்வமாக உள்ளோம், என்றார் ,


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment