Wednesday, September 01, 2010

என்னைத் தருகிறேன்......


என் கனவில் தோன்றும் உன்
விம்பத்தை பற்ற நினைக்கிறேன்
கானல் நீராய் கரைந்து விடுகிறாய்
என் ஒவ்வொரு காலைப் பொழுதிலும்

மிகவும் மகிழ்வானவன் நீ என்று
சொல்கிறார்கள் என்னை நோக்கி
உனக்குத் தெரியாது பெண்னே......
நீ இல்லாத வாழ்வில் நான் வாங்கும்
வலிகள்.....

சிலர் தூற்றுகின்றனர் நீ கூடுதலாக
சிரிக்கிறாய் என்று
அவர்களுக்குத் தெரியாது-என்
மனக் கண்கள் அதே அளவு அழுகிறது என்று

என் சிரிப்புக்குள் ஒழிந்திருக்கும்
வலி கொண்ட அழுகை இதுவரை
புரியவில்லை என் தாய்க்கு கூட.........

என் வாழ்வில் காலங்கள் பல கருகியும்
கண்ணீரோடு காத்துக் கிடக்கிறேன்-என்
காதலை ஏற்றுக் கொண்டு நீ வருவாய் என.......
என் உடம்பினுல் மறைந்த மனதுடன்
மறைந்து விட்டது நீ வரவேண்டும் என்ற
ஆதங்கமும்.......

வீதியோரம் கால் கடுக்க நான் காத்திருக்க
வசந்தகால தென்றலாய் நீ என்னை கடக்க
ஒழிந்திருந்து உனை உற்று நோக்கிய தருணங்கள்
இன்று என் வாழ்வில் வெறும் நினைவுகளாய் மட்டுமே
பகிர்ந்து கொள்ள நீ இல்லாமல்........

உன்னை கண்ட நொடியிலயே தொலைந்த
என் உயிரை தொலைதூரம் சென்று தேடுகிறேன்
தொலைந்த இடத்தை விட்டு விட்டு........

என் உடம்பு தேடுகிறது என் உயிரை
நீ வந்து விடு அல்லது உயிரை தந்து விடு
இனியும் போலியாக வாழ இல்லை பிணமாக வாழ
என்னால் முடியாது....

மறக்க நினைக்கிறது உன்னை என் மனம்
முடியாமல் நனைகிறது என் கண்களுடன்
இதயமும்...
உன்னை நினைத்து இதயம் துடிக்க
இரத்த ஓட்டத்திலும் உன் நினைவு
கலந்துவிட்டது
என் உயிரோடு மட்டுமல்ல உணர்வோடும்
கலந்நு விட்டாய் நீ
பிரிக்க இல்லை எரிக்க கூட முடியாது
என்னில் இருந்து உன் நினைவை....

இதயத்தில் இரத்தம் சொட்ட
விழியில் நீர் கசிய
வலிகள் அனைத்தையும் வாங்கியாக
வலி தாங்கியாக
காத்துக் கிடக்கிறேன் ஒரு வரண்ட
பூமியில்..........


பசுமை கொண்ட மழையாக
நீ என்னை சேறுவாய் என
ஒரு சேதி சொல்
இப்போதே 'என்னைத் தருகிறேன்'
உன் வரவுக்காக.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments:

  1. எதுகை அல்லது மோனை சொற்கள் கொஞ்சம் அமைந்து இருதால் உங்களுடைய கவி இன்னும் மெழுகு பெற்று இருக்கும் அன்பரே ...

    ReplyDelete