Saturday, October 09, 2010

பள்ளித் தோழர்களே....



நம் பார்வைகள் சந்தித்து பல வருடங்கள் உருண்டோடிட்டு.
இருந்தும் பத்திரமாய் சிறைவைத்திருக்கிறேன்,
உங்கள் நினைவு ஏடுகளையும், நினைவுகளையும்.

அன்று இருந்த நான் இன்றில்லை,
நீங்களும் இன்று அவ்வாறில்லை.
நாலு பக்க வகுப்பறைச் சுவருக்குள்ளயே
நசுக்கப்பட்டு விட்டது நம் நட்பு.

பட்சிகள் கூட்டம் போல் பாசத்தால் இனைந்து,
பட்டாம் பூச்சிகள் போல் கவலையின்றி திரிந்து,
நாம் இட்ட சண்டைகள், கனவுகள்,
ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், போராட்டங்கள்,
விளையாட்டுக்கள், சேட்டைகள்,
இன்று எதுவுமே அற்று மௌனியாகிவிட்டோம்.
ஆளுக்கொரு திசையில்,
கூட்டுக்குள் இருந்து கலைக்கப்பட்ட
பறவைகள் கூட்டம் போல்....

பாலை வனத்தில் மழைத் தூரல் போன்று,
அவ்வப்போது சிலரைப் பார்பதுன்டு-ஆனால்
எல்லோரும் ஒரே நேரத்தில்?????
எழுதும் கவியின் வரியோடு கரைகிறது
என் கண்ணீரும்.

பிரியமாட்டோம், பிரியமாட்டோம்
என்று சொல்லியே பிரிந்து போனோம்.
நம்மை விட்டுப் பிரிந்த,
ஒவ்வொரு வினாடிகளிளும்.

நம் வகுப்பறை சொல்லும் நம் கதைகளை,
நம் மைதானம் சொல்லும் நம் சேட்டைகளை,
நம் பாடசாலை சொல்லும் நம் சாதனைகளை,
நம்மால் எதுவும் சொல்ல முடியவில்லை,
நம் தனிமைக்கு.

சிலர் தொலைபேசியில்,
சிலர் தொழில்நுட்பத்தில்,
சிலர் இணையத்தில்,
என்று ஏதோ நட்புடன் இருக்க
பலர் தொலைந்தே விட்டோம்,
முகவரிகள் அற்று.

தொலைந்தவர்களைத் தேடிய பயணமும்,
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது......
மிக நீண்ட காலமாய்.

தெருக்கலில் பள்ளி மாணவர்கள்
சிறகடித்துச் செல்லும் வேளை,
வழிகின்ற கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,
சேர்ந்து நடக்கிறேன் சில நிமிடம்..
காற்றோடு கலந்து விட்ட என் சுவாசம் போல்.

நம்மை மட்டும் பேச அனுமதித்த நூலகம்,
காதல் கவிதை எழுதும் கரும்பலகை,
நம் மேளவாத்தியங்களான மேசைகள்,
நம் உணவகசாலை ஓட்டக் குடிசை,
எந் நேரமும் இசைக் கச்சேரி நடக்கும் நம் வகுப்பறை,
நம் சேட்டையில் முதலிடம் பிடித்த வகுப்புத் தோழிகள்,
இவைகள் தான் இன்று என் இருன்ட கனவுக்குள்,
ஒளிரும் தீபங்கள்....

என் வாழ்கைப் பயணத்தில்
பசுமை நிறைந்த வீதிகள்
நம் பாடசாலை நாட்கள்.

இன்று திரும்பிப் பார்க்கிறேன்,
என் பக்கத்தில் சுடர்விட்டவர்கள்.
வானில் தெரியும் நட்சத்திரங்கள் போல்
சுடர்கிறீர்கள்,
என்னை விட்டு வெகு தூரம் சென்று.

நம் காலை உணவோடு கலக்கும்
பாசம், நட்பு, காதல், மகிழ்ச்சி
எனும் சுயையூட்டிகள்
இன்று காணவே முடிவதில்லை கடுகளவு கூட.

ஏதேதோ பேசினோம்,
ஏதேதோ எழுதினோம்,
பாடம் படித்தோம்,
வாழ்வையும் படித்தோம்,

பள்ளித் தோழர்களே....
தவிக்கும் எண்ணங்களின் தவிப்பனைக்க,
துவண்ட தோழர்களுக்கு தோள் கொடுக்க,
பகை கொண்ட நெஞ்சங்களுக்கு அன்பை பரிசளிக்க,
இணையில்லா நட்புடன் மீண்டும் இனைய,
வருவீர்களா? நம் வகுப்பறைக்கு.
உங்கள் வாழ்கையில் ஒரு மணி நேரமாவது...

ஏக்கம் நிறைந்த பார்வையுடன் காத்திருக்கிறேன்,
நினைவுகள் என்னில் நிலைநிற்க.
வருவீர்கள் என்ற நம்பிக்கையில்...


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments:

  1. //ஏக்கம் நிறைந்த பார்வையுடன் காத்திருக்கிறேன்,
    நினைவுகள் என்னில் நிலைநிற்க.
    வருவீர்கள் என்ற நம்பிக்கையில்...//

    super. vaalththukkal.

    ReplyDelete
  2. நன்றி சரவணன்
    உங்கள் ஆதரவுகள் தொடரட்டும்

    ReplyDelete