(இதன் முதற் பகுதியை வாசிக்காத வாசகர்கள் இங்கு கிளிக் செய்யவும்)
பகுதி-I
பகுதி-II
பகுதி-III
பெண்களைப் பற்றி பேச ஆரம்பித்தாலே முடியாது என்பது சரியாகத்தான் இருக்கிறது. இத் தொடரை இதனுடன் முடிக்க வேண்டிய கட்டாயமும் எனக்கிருக்கிறது. அதை கவனத்தில் கொண்டு இந்த பகுதியை எழுதுகின்றேன். பெண்கள் பற்றிய நிறைய விடயங்களை எமது முதல் பதிவுகளில் அலசிவிட்டடதால் நேரடியாக விடயத்துக்கு வருவோம்.
பெண்கள் விடும் தவறுகள் எவ்வாறு அந்த சமூகத்தை பாதிக்கிறது?
முதலில் பெண்களும், ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டிய விடயம், பெண்களுக்கு இருக்கும் தாய்மை பற்றி. இந்த தாய்மை குழந்தைகளை சுமப்பதற்கு மட்டும் அல்ல, அவர்களை சரியான வழியில் வளர்பதற்கும்தான்.
ஆகவே ஒரு மனிதனே பின்னாளில் ஒரு சமூகமாகிறான் என்பது விதி. இதை வைத்து பார்க்கும் போது அம்மனிதனை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் தாய் (ஒப்பிடுகையில் கூடுதலான பொறுப்பு தாய்க்கே உண்டு.) அதாவது பெண் அங்கு சரியாக இருக்கும் போதுதான் அந்த பிள்ளையும் சரியான வழியில் வளர்க்கப்படுகிறான்.
ஒரு பிள்ளையின் முதல் பள்ளிக்கூடம் தாய்மடி எனும் கருத்தையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன். சமூகத்தில் அவன் ஒரு நிலையை அடையும் போது தன் தாயால் இவன் தவறான முறையில் வழிநடத்தப்பட்டிருந்தால் அங்கு பிரச்சினைகள் மிகக் கூடுதலாக காணப்படும். இந்த விடயத்தில் தாய்மார்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும். இது ஒன்றே போதும் பெண்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பதற்கு.
ஆனாலும் நாம் இன்னொரு விடயத்தையும் இங்கு சுட்டி காட்ட விரும்புகின்றோம்.
அதாவது பெண்கள் பொதுவாகவே தங்கள் பக்கம் யாரையும் மயக்கி விட கூடியவர்கள். அந்த வகையில் மணமுடித்த சில ஆண்கள் மனைவியிடம் மயங்கி போவதுமுண்டு. அதாவது மனைவிமார்களின் பேச்சை கேட்டு நடக்கும் ஆண்களும் உண்டு.
(இது இயற்கை.) இப்படியான நேரத்தில் மனைவிமார்கள் தவறானவர்களாக இருந்து அவர்கள் சொல் படி இந்த கணவன் வழிநடத்தப்படும் போது சமூகம் சார்ந்த பிரச்சினைகள் ஏராளமாக தோன்றுகின்றன. இதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும்.ஆகவே பெண் என்பவள் ஆணை விட சமூகத்தில் அதிகம் முக்கியம் பெறுகிறாள்.(ஆண்களை வளர்ப்பதும் பெண்கள்தானே). இதனால்தான் பெண் என்பவள் சமூகத்தின் கண்ணாக சித்தரிக்கப்படுகிறாள். ஆகவே பெண்கள் எப்போதும் சரியான வழிநடத்தலில் சரியான வழியில் இருக்க வேண்டும்.
பெண்கள் எப்பவும் எந்த நேரத்திலும் நிதானம் உள்ளவர்களாவும் சரியான முறையிலும் இருக்க வேண்டும் என்ற செய்தியோடு நாம் இந்த தொடரில் பேசிய விடயங்கள்
பெண்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பை வேண்டியவனாக விடை பெறுகிறேன்.என்னால் முடிந்த அளவு விடயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்துக்களே. வாழ்த்தி வரவேற்பதா? அல்லது தர்கித்து தகர்பதா? இரண்டுக்கும் நான் தயார். நீங்கள்...?(முற்றும்)