Saturday, January 05, 2013

"நல்லவனில்லை"



காதலே யார் நீ?
ஆணையும், பெண்ணையும்
இணைக்கும் பாலமா?
அல்லது அவர்களைப்
பிடித்த சாபமா?

வாழ்வில் ஒளியூடுகிறாய்
சில நேரம்..
வாழ்கையை எரிக்கிறாய்
பல நேரம்..

மாறி மாறி உருவெடுக்கிராயே..
பச்சோந்தி பெத்த பிள்ளையா நீ?

உன்னை வெறுத்தவர்கள்
மணமேடையில் உறவாட,
உன்னை அணைத்தவர்கள்
பின மேடையில் வாடுவதா??

உன் நியாயம்
புரியாப் புதிராகிறதே..

கனவுக்குள்
கற்கண்டாய் இருக்கிறாய்.
பல கவிதைக்கும்
கருவாய் இருக்கிறாய்.
செல்லாக் காசுகளையும்
தங்கமாக்கி ஜொலிக்கிறாய்.
தோழனாய் சில நேரம்
தோள் கொடுக்கிறாய்.




கல்லறைக்குள்
முதற் கல்லாய் இருக்கிறாய்.
கண்ணீருக்கும்
பிறப்பிடமாய் அமைகிறாய்.
எமனுக்கு
தூதாய் வருகிறாய்.
இதயத்தை கிழிக்கும்
முள்ளாய் வலிக்கிறாய்.

நன்மைக்கும், தீமைக்கும்
காரணமாய் இருக்கிறாய்.

உண்மையை சொல்
யார் நீ?

நிச்சயமாய் "நல்லவனில்லை."


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments: